Wednesday, February 24, 2016

RSS, BJP, இன் அடுத்த திரிபுவாதம் - இயேசு கிறிஸ்து இந்துவாம், அதும் தமிழராம்,

இந்திய நாட்டில் தன் சர்வாதிகார ஆட்சியினை நடத்திக்கொண்டிருக்கு­ம் RSS
இன் வளர்ப்பு பிள்ளையான BJP யின் அரசியலை எப்போதும் திரிபுவாத அரசியல்
என்று விமர்சனம் செய்வதில் தவறேயில்லை , இந்நாட்டின் அமைதியை
சீர்குலைக்கும் அத்தனை வழிகளையும் நன்கு கடைபிடித்து அதற்கான புரட்டு
வரலாறுகளை எழுதுவதிலும், போலியான புனைவுச் சம்பவங்கள் மற்றும்
காணொளி,புகைப்படங்களை­ வெளியிடுவதிலும் BJP யை வெல்ல யாராலும் முடியாது
(தமிழ்நாட்டு ஜெ வைத் தவிர) அந்தளவிற்கு தன்பக்க புலமையில்
கைத்தேர்ந்தவர்களை வைத்துக்கொண்டு , எப்போதெல்லாம் ஒரு சமூக எழுச்சியை
இந்திய மண் சந்திக்கின்றதோ அப்போதெல்லாம் "பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்"
என்கிற கோஷத்தையும், கோட்சைவை வைத்து காந்தியை தீர்த்துக்கட்டிய அதே
ரத்தகறை படிந்த கைகளால் போலியாக "தேசபக்தி" கொண்டு காவிக்கொடியை
பிடித்துக்கொண்டும் எங்கும் அடாவடி அட்டூழியும் செய்துக்கொண்டும் திரிவதே
தன் அரசியல் பாதையென ஒரு கணக்கியலை வைத்திருக்கும் இந்துத்துவ
பார்ப்பானிய சாதி ஆதிக்க RSS ம் BJP யும் இந்த நாட்டின் பெரும்
குற்றவாளிகளாகவே பார்க்கப்பட வேண்டும். "இன்றைய மாணவர்கள் நாளைய
புரட்சியாளர்கள்" என்பதை எப்போதும் இடதுசாரியம் தன் லட்சிய கொள்கை
கோட்பாடாகவே வைத்திருக்கின்றது. அதனை நன்கு அறிந்த RSSம் BJP யும்
மாணவர்களின் அதிதீவிர புரட்சி முன்னெடுப்பை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட
துடித்து ரோகித் வெமுலாவை கொலைசெய்து, கன்னையாக குமாரை (JNU)ஆதாரமற்ற தேச
துரோக வழக்கிட்டு, சோனி சோரி எனும் பெண்போராளி மீது ஆசிட் வீசி , உமர்
காலித் எனும் (JNU) இசுலாமியத் தோழன் மீது தேசவிரோதி எனும் குற்றம்
சாட்டி தொடர்ந்து மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை தன் ஆளுமை அதிகார
பலத்தோடு செய்துவருகின்றது. RSS இன் கிளையான ABVP இல் மாணவர்கள்
பெரும்பாலும் மோடி அரசின் இந்துத்துவ பார்ப்பானிய திரிபுவாதத்திற்கான
புதிய வரலாறுகளை எழுதுவதற்காக தங்கள் கல்வியை அடகு வைத்திருக்கிறார்கள்
என்பதே இங்கே தெளிவான விஷயம். அதுமட்டுமில்லாது தோழர் கன்னையாவை
காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போதே RSS ஐ சேர்ந்த மூன்று
வழக்குரைஞர்கள் மிகக்கடுமையாக கொலைவெறி தாக்குதல் நிகழ்த்தியதோடு
அல்லாமல் நேரடியாக "கன்னையாவை கொலை செய்வோம்" என மிரட்டுகிறார்கள்
என்றால் இந்திய தேசத்தின் முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சி எந்தளவிற்கு
தீவிரமடைந்திருக்கிறத­ு என்பதை மிகத் தெளிவாக உணர முடியும், இவற்றோடு
மட்டுமே நின்றுவிடவில்லை இந்துத்துவ பார்ப்பானிய பாசிச ஆட்சி, தற்போது
புதிதாக ஒரு திரிபுவாத வரலாற்றுப் புனைவினை கையிலெடுத்திருக்கிறா­ர்கள்.
அதுவும் சிறுபான்மையின கிருஸ்த்துவ மக்களின் மீதான மிகப்பெரும் கசப்பினை
தெளிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன­
அதுவும் தமிழ்நாட்டில்,,, வரலாற்றை திரித்து எழுதுவதில் புகழ்பெற்று
விளங்கும் சங்பரிவார் கும்பல், அடுத்த கட்டமாக ஏசுகிறிஸ்துவை இலக்காக
கொண்டு களமிறங்கியிருக்கிறது­. அதன் ஒரு பகுதியாக ஏசு கிறிஸ்து பிறப்பால்
இந்து என்றும் அவரது தாய்மொழி தமிழ் என்று திரித்து புத்தகம்
வெளியிட்டிருக்கின்றன­ர். இது பெரும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி
இருக்கிறது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து அறிவியல் ரீதியான ஆதாரம் இல்லாத
உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தொடர்ந்து பாஜக மற்றும் அதன் தாய்
அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சும் தெரிவித்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது
கணேஷ் தாமோதர் சாவர்கர் என்பவர் கிறிஸ்ட் பாரிசா என்ற புத்தகத்தை வரும்
26ம் தேதி வெளியிட உள்ளார். மெமோரியல் என்ற அமைப்பு வெளியிடும் இந்த
புத்தகத்தில் ஏசு கிறிஸ்துவின் பெயர் கேசவ் கிருஷ்ணா என்று
தெரிவித்துள்ளார். அது தமிழ் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
அவர் விஸ்வகர்மா சாதியைச் சேர்ந்த ஆசாரி குலத்தில் பிறந்தவர் என்பதும்
இந்துக்களை போல கருப்பு நிறம் கொண்டவர் என்றும் தச்சு தொழில்
மேற்கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத­ு. ஏசுவின் தந்தை பெயர்
சேசப்பன் என்றும் அதுவே காலப்போக்கில் மறுவி சேஷப் என்றும் ஜோசப் என்றும்
அழைக்கப்படுகிறது என்று புதிதாக ஒரு விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளத­ு.
இது மட்டும் இல்லாமல் ஏசுவை சிலுவையில் அறைந்த பிறகு தனது யோகத்திறமையால்
உயிரோடு இருந்தார். மேலும் சகதோழர்களை மீட்டு சித்த வைத்திய முறையில்
சிலுவை காயங்களை குணப்படுத்தினார். பிறகு இறுதி காலகட்டங்களில்
இமயமலைப்பகுதியில் சிவ பெருமானை நோக்கி ஏது தியானம் செய்து வந்ததாக
கூறப்படுகிறது. 3 வருட கடும் தவத்திற்கு பிறகு ஏசுவிற்கு சிவபெருமான்
காட்சியளித்து தார் என்றும் பின்னர் ஏசுவை ஈஷாநாத் என்று முனிவர்கள்
அழைத்தனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தன்49 வது வயதில் உடலை விட்டு
ஆழ்நிலை சமாதி நிலைக்கு சென்று முக்தியடைந்தார் என அந்த புத்தகத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளத­ு. 1946ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த புத்தகம்
வெளியிடப்படுவதற்கு தற்போதைய சூழலில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்து சாவர்கர் தேசிய நினைவகத்தின் செயல் தலைவர் ரஞ்சித் சாவர்கர்
கூறுகையில் 70 வருடம் கழித்து புத்தகத்தை பப்ளிஷ் செய்வதல் எந்த
உள்நோக்கமும் கிடையாது. புத்தகம் குறித்து சர்ச்சை எழும். ஆனால் இது
புதிது கிடையாது ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகத்தையே மாராத்தியில்
வெளியிடுகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த
கிறிஸ்தவ அமைப்புகள் புத்தகத்தில் உள்ள அம்சங்களுக்கு மறுப்பு
தெரிவித்துள்ளன. பாதிரியார் வார்னர் டிசோசா கூறுகையில் கிறிஸ்தவர்களின்
மத நம்பிக்கையை இந்த புத்தகம் அசைக்காது என்றும் யூகத்தின் அடிப்படையில்
புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது­ என்றும் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் – இன் சேவகராக இருந்து தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர
மோடியும் இதே பாணியில்தான் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள்
40வகையான விமானங்களை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்தனர் என்று
கூச்சநாச்சமின்றி விஞ்ஞானிகள் மாநட்டிலேயே கூறியிந்தது
குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இயேசுவை பற்றி பாஜக சொன்ன காமெடி இருக்கட்டும்
    .
    இதுவரை நாளாக
    திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றும் தோமஸின் சீடர் என்று பிரச்சாரம் பண்ணிய போதும்
    முகம்மதுதான் கல்கி அவதாரம் என்று முல்லா கூட்டம் பிரச்சாரம் பண்ணிய போதும்
    ஆதாம் தான் சிவபெருமான் என்று முல்லா கூட்டம் பிரச்சாரம் பண்ணிய போதும்
    .
    தாங்கள் நவ துவாரத்தை பொத்திகிட்டு இருந்து விட்டு தற்போது பிஜேபி காமெடி பண்ணும் போது ஞானம் வந்து அறிவுரை பண்ணுவதன் நோக்கம் என்ன ?
    .
    இதுதான் திருட்டு முன்னேற்ற கழக கலாச்சாரமா

    ReplyDelete
    Replies
    1. காவி புழுதி ரத்தமாக உன் உடம்பில் ஓடினால் என்ன
      வேண்டுமானாலும் எழுதுவாயா கருமாந்திரமே?
      "" திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றும் தோமஸின் சீடர்
      என்று பிரச்சாரம் பண்ணிய போதும் முகம்மதுதான்
      கல்கி அவதாரம் என்று முல்லா கூட்டம் பிரச்சாரம்
      பண்ணிய போதும் ஆதாம் தான் சிவபெருமான்
      என்று முல்லா கூட்டம் பிரச்சாரம் பண்ணிய போதும் ""

      இந்த மூன்றிற்கும் ஆதாரம் காட்டாவிட்டால் நீ
      விருந்தாளிக்கு பிறந்தவன் என்பது உறுதி.

      அது சரி உன் profile போட்டோவில் எதற்கு சே குவேரா படம்?
      இஸ்மாயில் என்று பச்சை குத்தி கொண்டு காந்தியை
      கொன்ற வகையில் இதுவும் ஒன்றா?

      Delete
  2. தாங்கள் நவ துவாரத்தை பொத்திகிட்டு இருந்து விட்டு தற்போது பிஜேபி காமெடி பண்ணும் போது ஞானம் வந்து அறிவுரை பண்ணுவதன் நோக்கம் என்ன ?
    #தங்களது நவ துவாரத்தை என்னிடம் திறந்து காட்டுமளவுக்கு சேகுவாராவை விளம்பர பொருளாக வைத்திருக்கிறீர்களோ!

    திருட்டு முன்னேற்ற கழக கலாச்சாரமா
    #அடேயப்பா என்னவொரு கண்டுபிடிப்பு அப்டியே இந்த கண்டுபுடிப்ப திராவிட தமிழ்த்தேசிய பிரட்சி பிலிகளின் காதுலேயும் போட்டு வைங்க சமயத்துக்கு ஒதவும்.

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...