Wednesday, February 24, 2016

ஜெயா அடிமைகளுக்கு குத்திய பச்சை வெளுக்குமா?

தமிழகத்தை ஆளும் ஜெயா தலைமையிலான அதிமுக அரசானது வருகின்ற 2016 தேர்தலில்
எப்படியும் தன் இ(ற)ருப்பை தக்கவைத்துக்கொள்ள
படாதபாடுபட்டுக்கொண்ட­ிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அதற்கான
பல்வேறு விளம்பர யுக்திகளை அதுவும் செய்துக்கொண்டு வருகிறது, அதில்
முக்கியமானதாக கருதப்படுவது ஜெ உருவப்படம் பொதித்த ஸ்டிக்கர்.
கிட்டத்தட்ட விளம்பர உலகில் கார்ப்பரேட்டுகளையே மிரளவைத்த இந்த ஸ்டிக்கர்
ஒட்டும் விளம்பர யுக்தியில் தமிழக மக்கள் மட்டும் கவர்ந்திழுக்க
மாட்டார்களா என்ன! ஜெயாவின் இந்த ஸ்டிக்கர் விளம்பரம் உச்சத்தை தொட்ட
நிகழ்வுகளும் இதே தமிழ்நாட்டில் நடந்தேறியும் விட்டது. அதாவது இறந்துபோன
மனித பிணத்தின் மேலேயே ஜெயா உருவம் பொதித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தான்
விளம்பர சாம்ராஜ்யத்தின் தாதா எனவும் பறைசாற்றிக்கொண்டது.
இது ஒருபுறம் இருக்கட்டும் தற்போது அதிமுக மேற்கொண்டிருக்கும் விளம்பர
யுக்திக்கு கடும் வரவேற்பாம்,,, யார் சொன்னது? அக்கட்சி தொண்டர்களே
தொண்டைக்குழியில் நீர்வற்ற புகழாரம் சூட்டுகிறார்கள். அப்படியென்ன புது
யுக்தி என்று ஆச்சர்யப்படலாம், அதற்கு அவசியமில்லை எல்லாம் பழைய பஞ்சாங்க
யுக்திதான், பழையது என்றாலும் இப்போதைக்கு புதுப்பொலிவு பெற்றிருக்கும்
"பச்சை குத்துதல்" ஜெயாவின் அடிமைகளுக்கு ஸ்பெஷல்தான்,,, காரணம் அவர்கள்
அடிமைகள் என்பதை அவர்கள் வலது கையில் குத்தப்பட்ட பச்சையே தெளிவாக
காட்டிடுமாம்.(ஏன் இடது கையில் குத்தக்கூடாதா? என்றெல்லாம்
கேட்கக்கூடாது). ஆனால் ஒன்று ஏதோ இந்த ஆண்டு மட்டும் ஜெயா தலைமையில்
பச்சை குத்தப்படுவதாக பல்வேறு தரப்பினர்கள் விமரினம் வைக்கிறார்கள். அது
முற்றிலும் தவறு ஒவ்வொரு ஆண்டும் ஜெயாவின் பிறந்தநாளன்று அவரின் அதிமுக
கட்சி சார்பாக தமிழக அடிமைகளுக்கு கட்சி சின்னமோ, கட்சிக்கொடியோ பச்சை
குத்தப்படும் . கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து அந்த முறை மாற்றப்பட்டு
ஜெயா உருவம் கொண்டு பச்சை குத்தப்பட வேண்டுமென்று அவரின் தலைமையிலான
சட்டமன்ற உறுப்பினர் அடிமைகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது, அடிமைச்
சட்டமன்ற உறுப்பினர்களும் மாண்புமிகு தமிழக முதல்வர் இதய தெய்வம் ஜெயா
அவர்களின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு ஆண்டும் ஜெயாவின் பிறந்தநாளை முன்னிட்டு
அந்த சட்டமன்ற அடிமைகளை அதிகார நாற்காலியில் அமரவைத்த வாக்காளர்
அடிமைகளுக்கு ஜெயாவின் உருவம் பொதித்து பச்சை குத்தும் நிகழ்ச்சியை
மிகப்பெருஞ் செலவில் நிகழ்திக்கொண்டு வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு
ஆண்டும் பச்சைக் குத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தே இருக்க
வேண்டுமாம், மேலும் தன் தலைமையிலான அதிமுக கட்சி நீர்வாக அடிமைகளில் யார்
அதிக வாக்காளர் அடிமைகளை தேடிப்பிடித்து பச்சை குத்த வைக்கிறார்களோ
அவர்களுக்கு தன்கட்சி பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. இந்த ஆளும் அதிமுக
ஜெ தலைமையிலான பச்சை குத்துதல் நிகழ்சி நான்கரை ஆண்டுகளில் இல்லாத
பரபரப்பு மற்றும் சர்ச்சைகளை இவ்வாண்டு பெற்றிருக்க காரணம் 2016 சட்டமன்ற
தேர்தல் நெருங்கிவிட்டபடியாலு­ம் மேலும் சென்ற 2015ம் ஆண்டு குறைந்த
வாக்காளர் அடிமைகளுக்கு மட்டுமே பச்சை குத்தப்பட்டது என்பதாலும்,
சட்டமன்ற, பாராளுமன்ற, பொறுப்பு நிர்வாக அடிமைகள் சரிவரி தன் கட்டளையை
நிறைவேற்றத் தவறியதன் காரணமாக நேரடியாகவே ஜெயா தலையிட்டு பச்சை குத்தல்
நிகழ்சியை மேற்பார்வையில் கொண்டுவந்ததன் காரணமாகவே இன்றைய அடிமைச்சமூகம்
அது பற்றி பேசத் தொடங்கியிருக்கிறது. மற்றபடி மேற்கண்ட காரணங்களை
கொண்டிருக்காத நிலையை அதிமுக பெற்றிருந்தால் வழக்கமாக அடிமைகளுக்கு பச்சை
குத்தப்பட்டு "போ நாயே நீயினை ஜெவின் அடிமையென" சர்வசாதாரணமாக
கடந்திருக்கும். இவ்வாண்டு ஜெவின் பிறந்த நாளை முன்னிட்டு 668 பேரின்
வலது கையில் ஜெவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி
நடைபெற்றாகிவிட்டது. ஆகவே அந்த 668 பேரும் இனி வாழ்நாள் முழுக்க ஜெவின்
அடிமைகளாக இருக்கக் கடவது. இதிலொரு முக்கியமான விடயம் தென்படுகிறது.
தமிழ்நாட்டு மக்களை அடிமைபடுத்துவதிலும் சர்வாதிகார பார்ப்பானிய
அதிகாரத்தை திணிப்பதிலும் ஜெவிற்கு மிகப்பெரும் மனமகிழ்ச்சி அல்லது ஆனந்த
பூரிப்பு பெற்றுவிடுகிறார் ஜெ , திருத்தம் இல்லாத அடிமை வாழ்வு
திருவிழாவில் தொலைந்த பொம்மை
நம் தமிழக அடிமை மக்கள்.

4 comments:

  1. மானங்கெட்ட ஜென்மங்கள் இந்த இழி செயல்களால் அயல் தேசங்களில் என்னைப் போன்ற தமிழர்களுக்கு எவ்வளவு அவமானம் பிற மாநிலத்துக்காரர்களால் விளைகிறது என்பது தெரியாது. ப்தூ....

    ReplyDelete
  2. தங்கள் வறுகைக்கு நன்றி தோழர்!
    கருத்தேதும் சொல்ல விரும்பவில்லை தேடிப்பிடித்து ஸ்டிக்கர் ஒட்டிவிடுவார்களோ எனும் பயத்தில்,,,

    ReplyDelete
  3. மிக நல்ல கட்டுரை... ஆக்ரோசமான பதிவு... வாழ்த்துகள் ...

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...