Thursday, March 31, 2016

ஐரோம் சர்மிளா தற்கொலை முயற்சி வழக்கில் இருந்து விடுதலை!





மணிப்பூரின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படும் ஐரோம் சர்மிளா ஆயுதப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 16 ஆண்டுகளாக காந்திய முறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். அவருக்கு குழாய் மூலமே உணவு வழங்கப்பட்டு வருகிறது.

முன்னதாக இந்த கோரிக்கைக்காக கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அப்போது தற்கொலை செய்ய முயன்றதாக, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 309ன் கீழ் இவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

உலக மகளிர் தினம் ஐரோம் ஷர்மிலாவுக்கு உதவாத நிலையில்,,,


பின்னர் மருத்துவமனையிலும் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்தார. இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹர்விந்தர் சிங், ஐரோம் சர்மிளாவை விடுவித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தபோது நேரில் ஆஜரான ஐரோம் சர்மிளா, மணிப்பூரில் ஆயுதப்படையினருக்கான சிறப்பு சட்டத்தை ரத்து செய்தால், தனது உண்ணாவிரதத்தை கைவிட தயாராக இருப்பதாக கூறினார். தனது நோக்கம் நிறைவேறுவதற்காகவே தற்கொலை முயற்சியை ஆயுதமாக பயன்படுத்தியதாகவும், தனது உயிரை மிகவும் நேசிப்பதாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

1 comment:

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...