Monday, March 28, 2016

தேசிய விருதுகள், விசாரணைக்கு மூன்று விருதுகள்

63வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த
நடிகருக்கான விருதினை பிகு படத்திற்காக "அமிதாப்பச்சனும்",
சிறந்த நடிகைக்கான விருதினை தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்திற்காக
"கங்கனா ரனாவத்தும்" சிறந்த இயக்குநருக்கான விருதினை பஜிராவோ பன்சாலி
படத்திற்காக "சஞ்சய் லீலா பன்சாலியும்" சிறந்த திரைப்படமாக "பாகுபலி"
திரைப்படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் "விசாரணை"
படத்திற்கு 3 தேசிய விருதுகளை வென்றது, தமிழில் வெளிவந்த விசாரணை
படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது
தமிழ் திரை உலகில் பரவலாக பேசப்பட்டுவருகிறது.
கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் எம். சந்திரகுமார் அவர்கள் எழுதிய நாவல்
லாக்கப். இந்த நாவலைத் தழுவி இயக்குநர் வெற்றிமாறன்
விசாரணை என்ற திரைப்படத்தை இயக்கினார். நடிகர் தனுஷின் வொண்டர்பார்
நிறுவனமும் வெற்றி மாறனின் கிராஸ்ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்தது.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இந்த படத்திற்கு தமிழக
காவல் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. அதேபோல் பல
தரப்பினரும் தங்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்த திரைப்படம்
வெளியிடப்படுவதற்கு முன்னரே வெனிஸ் திரைப்பட விருதுக்கு அனுப்பப்பட்டு
வெனிஸ் விருதுக்கு தேர்வானது. இந்நிலையில் திங்களன்று விசாரணை படத்திற்கு
3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
சிறந்த திரைப்படத் தொகுப்பிற்கான தேசிய விருது விசாரணை படத்திற்கு மறைந்த
"கிஷோருக்கு" வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த துணை நடிகருக்கான விருது
விசாரணை படத்தில் நடித்த "சமுத்திரக்கனிக்கு" வழங்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தாரை தப்பட்டை படத்தின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது
இசைஞானி "இளையராஜாவுக்கு" வழங்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா ஐந்தாவது
முறையாக தேசிய விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...