Friday, March 18, 2016

நான் உயர் சாதி - இப்போது டாட் காமிற்கு

நன்றி! இப்போது டாட் காமிற்கு ஏனென்றால் அவர்கள் "நான் உயர்சாதி"
தரப்பினர்கள் என்று என் கண்ணுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறதெனும­்
நினைப்பை உடைத்து இல்லையில்லை எங்களுக்கும் தெரியுமென அருமையாக
காட்டியிருக்கிறது. நான் உயர் சாதி ஆனால் ஆணவக்கொலையை எதிர்க்கிறேன்
எனும் காணொளி "ஆதிக்க சாதி" எனும் அடையாளத்துடன் இதனை கையாளும் போது
ஆணவக்கொலைக்கு எதிராக கருத்தை ஆதிக்க சாதியினரிடம் தாக்கத்தை
ஏற்படுத்தும் என்ற விளக்கத்திற்கு பின்னால் எப்படியும் இங்கே சாதி
ஆதிக்கம்தான் இருந்திருக்கிறது. அதுவும் சரியான நபர்களைதான்
தேர்ந்தெடுத்திருக்கி­றது இப்போது டாட் காம். தேவர் ஜெயந்தி பூஜை
விழாவின் போது பெருமையோடு நாங்கள் தேவர் என விளித்து அது சம்மந்தமான
அனைத்து விதமான புகைப்படம் மற்றும் காணொளிகளை விரும்பி பகிர்வு
செய்தவர்கள். அதற்கும் ஒருபடி மேலேபோய் ஏதோ முத்துராமலிங்க தேவர் கேள்வி
கேட்டாராம் அதற்கு பெரியார் பேந்த பேந்தென முழித்தாராம் . பதிவுகளை
இடைவிடாமல் ஒருவார காலமாக விழுந்து விழுந்து பேஸ்புக்கில்
பகிர்ந்தவர்கள். தலதளபதி போரடிக்கையில் பொழுதுபோக்கிற்காக "ஆணாதிக்கம்"
பேசுவோர்கள், ஒரு மாதம் திடீரென நல்லவனாக முகமூடி போட்டுக்கொண்ட கிஷோரு
கே ச்சாமி ஜெயாவை விமர்ச்சித்தான் என்பதற்காக , எவ்வளவு எடுத்துகூறியும்
அவனை நம்பி அவன் பதிவுகளை ஏதோ சமூக பதிவாக ஏற்றுக்கொண்டு பேஸ்புக்கில்
பகிர்ந்தவர்கள், அவனை ச்சமூக ஆர்வலராக ஊடகங்களில் பேச வைத்தவர்களும்
இவர்களே,,, என இருந்தவர்கள் , ஜெயாவை செல்லமாய் "அம்மா " வென அழைத்துக்கொண்டும் கலைஞரை கொரூரமாக கட்டுமரமென விளிப்பவர்களின் ஆணவக் கொலை எதிர்ப்பை எவ்வாறு ஏற்றுக் கொள்ள
முடியும். சரி அப்படியும் ஏற்றுக்கொள்கிறோம். எனில் ஆணவக் கொலைகளால்
மிகவும் அச்சமுற்று எப்போது நாம் கொல்லப்படுவோமெனும் பதற்றத்திலேயே
வாழ்க்கையை நகர்த்தும் ஒடுக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடி மக்களை
ஓரணியில் இணைக்கும் "தலித்" என்பது சாதியல்ல அது சமத்துவம்" எனும்
தார்மீக பொருட்பாட்டை அவ்வகையினர் ஏற்றுக்கொள்வார்களா? அப்படி ஏற்றுக்
கொள்வதற்கான செயல் வடிவாக "தலித் என்பது சாதியல்ல அது சமத்துவம்" என்பதை
பரப்பும் நடவடிக்கைகளை ஈடுபடுவார்களா? தலித் எனும் சொல்லே இவர்களுக்கு
கசக்குகின்ற போது எவ்வாறு இவர்களால் ஆணவக்கொலைகளை எதிர்க்க முடிகிறது.
உடனே உயிர் பலிகளுக்கு சாதிப்பூசம் தடவ வேண்டாமென விளிக்கலாம் "அய்யா
ஜோதிராவ் பூலே அவர்களின் தலித் சாதியல்ல சமத்துவம் என்பதை
ஏற்றுக்கொண்டவன் நான். இதற்கு ஏன் tag செய்ய வேண்டும்? நட்பு பட்டியலில்
இருக்கிறார்கள் . விவாதிக்க நான் தயார்.
என்னில் இதிலிருந்து குட்டி ரேவதி, கொற்றவை, தமிழச்சி தங்கபாண்டியன்
மூவரை மட்டும் விலக்கி வைக்கிறேன். மூவரும் உணர்வுப் பூர்வமாக "தலித்
சாதியல்ல சமத்துவம்" என்பதை ஏற்றுக்கொண்டவர்கள். கம்யூனிஸத்தை
நேசிப்பவர்கள்,திராவி­டத்தை ஏற்றவர்கள், தலித்தியத்திற்கான பங்களிப்பை
தருகிறவர்கள். நான் உயர்சாதி ஆனால் ஆணவக்கொலையை எதிர்க்கிறேன் , எனக்கு "ஆனால்" என்பதே வேண்டாம் இன்குலாப் போதும் "மனசங்கடா நாங்க மனுசங்கடா"

2 comments:

  1. அருமையான அறிமுகம்
    சிறந்த பகிர்வு

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு
    நன்றி!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...