Saturday, March 19, 2016

ஹோசிமின் - இறுதி ஆவணம்

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து தேசிய மிட்சிக்குப் போர் நடத்திய தமது
மக்களின் சமாதானம்,தேசிய சுதந்திரம், சனநாயகம், சோசலிசம் ஆகியவற்றிற்கு
ஆதரவாகவும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு சக்திகளை காட்டிலும் உலகத்தின்
சமாதான மீட்பு சக்திகள் தம் பலத்தை நிரூபித்துக் காட்டுமேயானால்
"அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் தோல்வியடைந்து நம்மிடம் மண்டியிட்டு
உயிர்பிச்சை கேட்பார்கள்"-ஹோசிமின்.
அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நடைபெற்ற மிகப்பெருந்திரளான
மக்களின் எழுச்சியை அமைதியாக பின்னாலிருந்து இயக்கிய புரட்சி ஒளி
ஹோசிமின்.
ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வேண்டுமேயானால் உறுதியான ஒரு மார்க்சிய லெனினிய
கம்யூனிஸத்தால் மட்டுமே சோசியலிசம், தேசிய விடுதலை, தொழிலாளார் வர்க்க
ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட உண்மை புரட்சியை தரமுடியுமென
நிரூபித்துக் காட்டினார் அவர்தம் வாழ்க்கையை கம்யூனிஸத்திற்காகவே
அற்பணித்தார் . ஹோசிமின் வியத்நாம் மக்களின் மீட்சிக்கு செய்த சேவையை
இவ்வாறு குறிப்பிடலாம் "பல நூற்றாண்டு காலம் அடிமைகளாக இருந்த தமது
மக்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை அகற்றியது வெறும் 79 வயதடைந்த கிழவன்.
அவருடைய வாழ்க்கையின் கடைசி ஆண்டுகள் முதுமையும், உடல்நலக் குறைவும்
இருந்தாலும் அவர் அதிகமாக தெளிவுடனே இருந்தார். அமெரிக்க ஏகாதிபத்திய
ஆக்கிரமிப்புக்கு எதிரான எல்லாவித போரிலும் , கம்யூனிஸ சோஷியலிஸ்ட்
நிர்மாணத்திலும், அவர் கட்சியுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து
மக்களுக்குத் தலைமை தாங்கினார். தன்னுடைய உடல் சக்தியிழந்து
கொண்டிருப்பதை அறிந்த ஹோசிமின் 10.05.1969 ஆம் நாளன்று தன்னுடைய "இறுதி
ஆவணம்" வரைகிறார் .
மக்களுக்கும் , நண்பர்களுக்கும், எதிர்காலத் தலைமுறை
குழந்தைகளுக்கும் அந்த ஆவணத்தில் சில செய்திகளை அவர் விட்டுச்
செல்கிறார். " உலக மக்களுக்காக நான் (ஹோசிமின்) எழுதும் ஆவணம்"
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து தேசிய மீட்சிக்கு நமது மக்கள்
நடத்துகின்ற போராட்டம் இன்னும் பல பேரிடர்களையும் தியாகங்களையும் கடந்து
வர வேண்டும் என்றாலுப் நாம் முழுவெற்றி அடைவோம் இது உறுதியானது. அந்த
வெற்றிக்குப் பிறகு நமது சகோதரர்கள் , அரசு ஊழியர்கள், போராளிகள் ,
பெண்கள்,மாணவர்கள், ஆகியோரைப் பாராட்டுவதற்கும், முதியவர்களையும்
அன்புக்குரிய இளைஞர்களையும் குழந்தைகளையும் பார்ப்பதற்கு தெற்கு
பகுதியிலும் வடக்கு பகுதியிலும் சுற்றுப் பயணம் செய்ய
உத்தேசித்திருக்கிறேன­­். பிறகு நமது மக்கள் சார்பில் சோசியலிஸ்ட் முகாமை
சேர்ந்த சகோதர நாடுகளுக்கும் சென்று அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து
நமது மக்களின் தேசபக்தி போராட்டத்தை முழுமையாக ஆதரித்த அனைவருக்கும்
நன்றியை தெரிவிப்பேன்.
சீனாவில் டுபூ என்ற புகழ்மிக்க கவிஞர் கூறுவார் " எல்லாக் காலங்களிலும்
எழுபதை தொடுபவர் மிகச் சிலரே"
இந்த ஆண்டில் எனக்கு எழுபத்தொன்பது வயதாகிவிட்ட காரணத்தால் அந்த "மிகச்
சிலரில்" நானும் ஒருவன் என்று கூற முடியும். கடந்த சில ஆண்டுகளுடன்
ஒப்பிடும்போது எனக்கு உடல்நலம் சற்று பாதிக்கப் பட்டிருந்தாலும் என்
சிந்தனை முற்றிலும் தெளிவாக உள்ளது.ஒருவர் எழுபது வசந்த காலங்களுக்கும்
அதிகமாக பார்த்தபிறகு அவருடைய முதுமைக்கு தக்கவாறு உடல்நலம் கெடுகின்றது
இதில் வியப்பில்லை. இன்னும் எவ்வளவு காலம் நான் புரட்சிக்கும் பிறந்த
நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்வேன் என்பதை யாராலும் சொல்ல முடியாது
தானே!
நான் கார்ல்மார்க்ஸ், லெனின் மற்றும் இதர மூத்ண புரட்சியாளர்களுடன் சேரப்
போகும் கடைசி நாளை எதிர்நோக்கி இந்தச் சில வரிகளை எழுதுகிறேன்.
அப்போதுதான் நாட்டு மக்களுக்கும் கட்சித்தோழர்களுக்கும­­் உலகத்திலுள்ள
நண்பர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படாது.

முதலாவதாக , கட்சியை பற்றி :-

அதன் நெருக்கமான ஒற்றுமையினாலும்,
தொழிலாளர் வர்க்கம் , மக்கள் மற்றும் தந்தையர் நாட்டிற்கு முழுமையான
அர்ப்பணிப்பாலும் நம் கட்சி நிறுவப்பட்ட நாள் முதலாக நம் மக்களை
ஒற்றுமைபடுத்தி அமைப்பு ரீதியாக திரட்டி உறுதியான போராட்டத்தில்
வெற்றிமேல் வெற்றி அடைகின்ற வகையில் மக்களுக்குத் தலைமை தாங்க
முடிந்திருக்கிறது. "ஒற்றுமை" நம் கட்சிக்கும் மக்களுக்கும் சொந்தமான
மிகவும் உயர்ந்த மரபு, மத்திய கமிட்டியிலிருந்து கீழ் மட்டத்தில் செல்
அமைப்பு வரை எல்லாத் தோழர்களும் கட்சியின் ஒற்றுமை மற்றும் ஒரே சிந்தனையை
கண்ணின் கடுமணி போலப் பாதுகாக்க வேண்டும். கட்சிக்குள் பரந்த ஜனநாயகத்தை
அமைத்து விமர்சனம் மற்றும் சுய விமர்சனத்திற்கு முறைப்படியாகவும்
உறுதியோடும் கடைபிடிப்பதே ஒருமைபாட்டையும், ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு
சிறந்த வழி! நம் கட்சி ஆளும் கட்சியாக உள்ளது.கட்சியின் ஒவ்வொரு
உறுப்பினர்களும், ஊழியர்களும் புரட்சிகர ஒழுக்கத்தை ஆழமாக கடைபிடிக்க
வேண்டும். உழைப்பு,சிக்கனம், நேர்மை,நேர்கண்ணோட்டப­­்பார்வை பொதுமக்கள்
நலனுக்கு அக்கறை என முழுமையான அர்ப்பணிப்பு,தன்னலமி­­ன்மை ஆகியவற்றை
கொண்டிருக்க வேண்டும். நம் கட்சிகள் முற்றாக தூய்மையாக இருக்க வேண்டும்.
கட்சி மக்களின் தலைவன் விசுவாசமுள்ள ஊழியன் என்ற தகுதியை பெற வேண்டும்.
உழைக்கும் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்களும் நமது இளைஞர்களும்
மொத்தத்தின் திடகாத்திரமாக இருக்கிறார்கள். கஷ்டங்கள் பற்றி
கவலைபடுவதில்லை, நாட்டு முன்னேற்றத்தில் ஆர்வமுள்ளவர்களாக அவர்களுடைய
புரட்சிகர நற்பண்புகளை கட்சி பேணி வளர்க்க வேண்டும். சோஷியலிஸத்தை
கட்டுவதில் அவர்கள் நமது வாரிசுகளாக வளர்த்தெடுக்க வேண்டும். எதிர்கால
புரட்சித் தலைமுறையுடைய பயிற்சிகளையும்,கல்வி­­யும், மிக
முக்கியமானது,இன்றியம­­ையாதது. சமவெளிகளிலும்,மலைகளி­­லும்,வாழ்கின்ற
நமது உழைக்கும் பழங்குடி மக்கள் பல தலைமுறைகளாக துன்பங்களை மட்டுமே
நிலபிரபுத்துவ, மற்றும் காலனிய ஒடுக்குமுறை சுரண்டலை தாங்கிக்
கொண்டிருக்கிறார்கள் , இவற்றுடன் பல ஆண்டுகளாக நடைபெற்ற போர்களிலும்
வஞ்சிக்கப்பட்டிருக்க­­ிறார்கள்.எனினும் அவற்றையெல்லாம் உடைத்துக்கொண்டு
மகத்தான வீரம்,துணிவு,உற்சாகம­­், சுறுசுறுப்பு ஆகியவற்றை
காட்டியிருக்கிறார்கள­­். நம்மக்கள் என்றுமே என்மக்கள் , இவர்களை கட்சி
நிறுவப்பட்டதிலிருந்த­­ு நிபந்தனையற்ற விசுவாசத்துடன் கட்சிக்குப்
பாடுபடுகிறார்கள். நமது மக்களுடைய கலாச்சார வளர்ச்சித் திட்டங்களை கட்சி
தயாரிக்க வேண்டும். அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கின்ற போரும்
புரட்சியும் நீடிக்கலாம்,அப்படியா­­னால் நமது மக்கள் தமது உயிரையும்
உடைமைகளையும் இன்னும் அதிகமாக தியாகம் செய்ய வேண்டியிருக்கும். என்ன
நடைபெற்றாலும் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களை முழுமையாஃ முறியடிக்கின்றவரை
போராடுவது என்ற முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

நம் மலைகள்
எப்பொழுதும்
நம்முடையவை,

நம் ஆறுகள்
எப்பொழுதும்
நம்முடையவை,

நம் மக்கள்
எப்பொழுதும்
நம்முடன்
இருப்பார்கள்

துணைகொண்டு
அமெரிக்க
ஆக்கிரமிப்புகளை முறியடிப்போம்
நம் நாட்டை
மீண்டும் அமைப்போம் இன்னும் பத்து
மடங்கு அழகுடன்,,,

எத்தகைய துன்பங்கள், இடர்கள் வழிமறித்து நின்றாலும் இறுதி வெற்றி நமதே
என்றும் நம் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
ஒன்றைத் தெளிவாக உங்களுக்கு உரைக்கிறேன் தோழர்களே! அமெரிக்க
ஏகாதிபத்தியர்கள் வெளியேற்றப்படுவதிலும­­் நமக்கான விடுதலையில்
தாமதமாகுவதிலும், வடக்கு , தெற்கு உள்ள சகோதரர்கள் இணைவதில் ஏதேனும்
முரண்கள் ஏற்பட்டுவிட்டாலும் கவலை கொள்ளாதீர்கள் இந்த எழுபத்தொன்பது வயது
கிழவனின் "பிணத்தை" வைத்து புரட்சிசெய்ய உங்களுக்கு முழு
அதிகாரமளிக்கிறேன். என் பிணம் புரட்சிக்கு மட்டுமே பயன்படுவதையே நான்
விரும்புகிறேன்.
நமதுநாடு சின்னஞ்சிறிய நாடுதான் பிரான்ஸ், அமெரிக்கா என்னும் இரண்டு
பெரிய ஏகாதிபத்தியங்களை நமது வீரமிக்க போராட்டங்கள் மூலம் தோற்கடித்த
பெருமை நமக்குண்டு. உலகத்தின் தேசிய விடுதலை இயக்கத்திற்கு சிறந்த
பங்களிப்பு செய்த பெருமையும்கூட நமக்கு உண்டு.

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றி :-

என் மொத்த வாழ்க்கையையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அர்ப்பணித்தவன் நான்.
உலக கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றை யும்
வளர்ச்சியையும் பற்றி நான் பெருமைபடுத்துகின்ற அதே அளவுக்கு சகோதர
கட்சிகளிடையே தற்போது எழுந்துள்ள கருத்து வேறுபாட்டை பற்றி
வேதனைபடுகின்றேன். மார்க்சிய,லெனினியம் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வ
தேசியத்தின் அடிப்படையில் பகுத்தறிவுக்கும்,உணர­­்ச்சிக்கும்
பொருந்துகின்ற முறையில் சகோதர கட்சிகளுக்கு இடையில் மறுபடியும் ஒற்றுமை
ஏற்படுத்துவதற்கு நமது கட்சி தீவிரமான முயற்சிகளை செய்யும் என்று
நம்புகிறேன்.சகோதர கட்சிகளுக்கும் நாடுகளுக்கும் இடையில் மறுபடியும்
ஒற்றுமை ஏற்படும் என்று நம்புகிறேன்,எனது இறப்பின் பின்னாலும் அது
நிகழலாம் நிகழ வேண்டும்.

என்னைப் பற்றி :-

என் பலம் எதுவென்று எனக்குத் தெரியும் நான் கடைசி நாட்களை
எண்ணிக்கொண்டிருக்கிற­­ேன் என்பதும் அறிந்ததே! என் வாழ்க்கை
கம்யூனிஸத்தால் நிறைந்தது, பாட்டாளி மக்களின் வியர்வைத் துளிகளை
புரட்சியாக்குவதற்கு நான் தயங்கியதில்லை, இந்த உடலில் ஒட்டிக்கொண்டுள்ள
உயிருக்கு விலையேற்றப்பட்டவனில்­­லை நான். இப்போது நான் உலகத்தை விட்டு
பிறந்தாலும் "இன்னும் சில ஆண்டுகள் சேவை செய்ய முடியவில்லையை என்பதை தவிர
வேறு வருத்தம் எனக்கு இல்லை, நான் என்பதும் ஒருவிதத்தில் நீங்கள்தான்,
நான் மரணமடைந்த பிறகு பெரிய அளவில் எனக்கு இறுதிச் சடங்குகள் செய்வதை
தவிர்க்க வேண்டும் . அதற்காக மக்களுடைய நேரத்தையும் , பணத்தையும் வீணாக்க
வேண்டாம். முடிந்தளவு என் "பிணத்தை" வேறுபட்டுள்ள கம்யூனிஸட் கட்சிகளின்
ஒற்றுமைக்கான ஆயுதமாக்குங்கள். கடைசியாக மக்கள் எல்லோருக்கும்,மொத்த
கம்யூனிஸ்ட் கட்சிக்கும், என் நாட்டு பேரக்குழந்தைகளுக்கும­­் அளவற்ற
"அன்பை" தெரிவித்துக் கொள்கிறேன் . நம் கட்சி முழுமையும்,மக்களும்,­­நமது
முயற்சிகளை ஒன்றிணைத்து சமாதான,ஒன்றுபட்ட,சுத­­ந்திரமான, சனநாயக,வளமான
வியத்நாமை நிர்மாணித்து உலக புரட்சிக்குத் தகுதியான பங்களிப்பை செய்ய
வேண்டும் இது என் கடைசி விருப்பம்.
-ஹோசிமின்
19.5.1969

கடைசியாக வியத்நாமின் விடிவெள்ளி ஹோசிமின் 3.9.1969 காலை 9.47 மணியளவில்
தனது 79 வது வயதில் இந்த உலகத்தை விட்டுப் பிறிந்தார். 9.9.1969 அன்று
தோழர் லெதுவான் தலைமையிலான உறுதியேற்பு மற்றும் இரங்கல் கூட்டத்தில்
"ஹோசிமின் இறுதி ஆவணம்" வாசிக்கப்பட்டு உலகத்திற்கு
பிரகடனப்படுத்தப்பட்டது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...