தேகமது
செல்லரிக்கும்
எலும்புகளோ
கதை பேசும்
கல்லறைகள்
முகம் சுளிக்கும்
சுமக்கும் மண்ணோ
பதற்றமாகும்
தன் வெளியில்
காற்றோ
துர்நாற்றம் தெளிக்கும்
மிருகமாக
இவன் ஆனானென
மரணமே
சொல்லிவிட்டதே
வாழ்தலில் மனிதனாக
உயிர் வாழ்தலும்
சிறந்ததே
சிந்திக்க மறந்தாயோ
சிரிக்கிறதே
சுடு(ம்)காடுகள்,,,
0 comments:
Post a Comment