Monday, March 14, 2016

விசாரணை திரைக்காட்சிகளின் உண்மைகள் வெளிச்சத்திற்கு

விசாரணை படம் பார்த்து பதட்டமாவனவர்களின் கண்ணோட்டத்தில் இரண்டு விதமான
மனநிலைகளை காணலாம். ஒன்று அதுவரையில் விசாரணைக் கைதிகளை காவல்துறை
எவ்வாறு நடத்துகிறது என்று அறியாத மேட்டுக் குடியினர்களாகவும், இரண்டாவது
வாழ்நாளில் காவல் நிலையத்திலும்,நீதிமன­்றத்திலும் உள்நுழையவேக் கூடாது
என்கிற "நல்வர்கள்?" என சமூக அந்தஸ்தை பேணிக் காப்பவர்களாகவும்
அரியப்படுகிறார்கள், ஒருவேளை இவ்விரு வகையிலும் வராத உணர்வுப் பூர்வமான
பதற்றத்தை காட்டுபவர்கள், அதிகார வர்கத்திற்கு எதிரான போராடும்
மனநிலையில் இருந்தும் அவர்களை வழிநடத்த இங்கே "தலைமை" இல்லாமல் பூர்த்தி
செய்யப்படாத வெற்றிடத்தை புலம்பித் தள்ளியவர்களாக இருக்கலாம்,
அவர்களுக்காக சொல்ல வேண்டிய இரண்டு கடமைகள் இருக்குமேயானால் எதற்கும்
பயப்படாமல் அதிகார வர்க்கத்தையும் அவ்வர்க்கத்திற்காகவே­ பணி செய்யும்
காவல் துறையை நோக்கியும் "மனித உரிமை மீரல்களை புரிய உங்களுக்கு என்ன
அதிகாரம் இருக்கிறது? அரசமைப்பு சட்டம் உங்களுக்கு அதிகாரம்
வழங்கியிருக்கிறதா?
என்கிற இரண்டு கேள்விகளை துணிந்து கேளுங்கள் என்பதாகவே இருக்கிறது.
விசாரணை என்கிற படத்தில் திரையில் கண்ட காட்சிகள் இங்கே நம் தமிழகத்தில்
அதே அதிகார வர்க்கத்து காவல் துறையினரால் "தினக் காட்சிகளாக"
நிகழ்த்தப்படுவதற்கு நம்மால் ஆன எதிர்வினைகள் ஆற்ற கடமைபட்டுள்ளோம்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த வின்சென்ட் சுமதி தம்பதியின்
3-வது மகன் முகேஷ் (17). சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு
வீட்டில் முகேஷ் தூங்கிக்கொண்டிருந்த­ார். நள்ளிரவு 11 மணி அளவில் அங்கு
வந்த போலீஸார், வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த முகேஷை
அடித்து உதைத்து காருக்குள் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அவரை
கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவரது தலை, முகம் என உடம்பு
முழுவதும் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு, 'நாம் தேடிவந்தது இவன்
அல்ல' என்று பேசிக்கொண்ட போலீஸார், முகேஷை துரைப்பாக்கம் அருகே
சாலையிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். சாலையில் கிடந்தவரை அருகே
இருந்தவர்கள் மீட்டு தண்ணீர் கொடுத்து காப்பாற்றி, அவரது வீட்டில்
கொண்டுவந்து விட்டுள்ளனர்.
காயம் இருந்ததால் முகேஷை ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்
அழைத்து வந்துள்ளனர். 'போலீஸ் அடித்த தால்தான் காயம் ஏற்பட்டது என்று
கூறக்கூடாது' என அங்கு புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீஸாரும் அவர்களை
வற்புறுத்தியுள்ளனர்.­ மிரட்டல்
இதற்கிடையில் வின்சென்ட்டின் செல் போன் எண்ணுக்கு பேசிய ஒரு போலீஸ்
காரர், 'ஆள்மாறாட்டத்தால் தெரியாமல் நடந்து விட்டது. மேல் அதிகாரிகளிடம்
செல்ல வேண் டாம்' என்று கூறியிருக்கிறார். வேளச்சேரி காவல் நிலையத்தில்
இருந்து பேசிய ஒரு போலீஸ்காரர், 'சம்பவம் குறித்து பிரச்சினை
கிளப்பினால், முகேஷ் மீது பல வழக்குகள் தொடருவோம்' என்று
மிரட்டியிருக்கிறார்.­ இந்நிலையில், முகேஷை தாக்கிய போலீஸார் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது தாயார் சுமதி, சென்னை பெருநகர காவல் ஆணையர்
அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இங்கே வைக்கப்பட வேண்டிய முதல்
கோரிக்கை என்னவெனில் அதிகார வர்க்கத்தின் அடியாட்களான காவல்துறைமீது சட்ட
ரீதியான SC/ST வழக்கு பதியப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நிரந்தர
பணி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே,,, எப்பொழுதும் அரசு
அதிகாரிகள் செய்யும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இங்கே
கண்துடைப்புக்காக வெறும் "பணி இடை நீக்கம்" செய்யும் வழக்கத்தினை
பரிசீலனை செய்து அவ்வகையாக குற்றம் இழைப்போரை "நிரந்தர பணி நீக்கம்"
செய்வதே சமூக நீதியாகவும் , குற்றத் தடுப்பு முறையாகவும், மக்களுக்கும்
பாதுகாப்பாகவும் இருக்க முடியும்

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...