பெயரற்றவ(ளி)னின் பேரன்பு
அவ(ள்)ன் அசைவுகளற்றவனில்
இருந்து
ஒரு தும்பியின்
விரல் பிடித்து சில மணித் துளிகளை
கடந்து விடும் ஆசையில்
முற்றத்து பூஞ்செடிகளின்
மீது பற்று கொள்கிறான்...
துறப்பு என்பதன் பொருளில்
தன்னை அர்ப்பணித்து
தேடுகையில்
அவனை சூழ்ந்து வெறும்
தும்பிகள் மட்டுமே
தன் மெல்லிய சிறகுகளினால்
சிறை வைத்துவிடுகிறது
தும்பிகள் அனைத்தும் சேர்ந்து அவனை என்ன சொல்லி அழைக்கும்....
ஆழ்ந்த உறக்கத்தில் அத்துணை பெயர்கள் கனவுகளில் அவனுக்கு
மட்டும்....
0 comments:
Post a Comment