Friday, February 23, 2018

தஷ்வந்த் தூக்கில் தீர்வு கிடைத்திடுமா ?



அப்படி பார்த்தால் இச் சமூகத்தில் நிறைய தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட வேண்டியதாய் இருக்கும் என்பதுதான் கசப்பான உண்மை... அந்தளவுக்கான வன்மம், முறையற்ற பராமரிப்பு, ஒழுக்கம் தவறிய செல்லம்தான் இங்கு குழந்தை வளர்பாகிறது... அது போக பாலியல் குறித்தான விழிப்புணர்வு இங்கில்லை அந்தளவுக்கு மதங்கள் தங்கள் புனிதங்களை புகட்டி விட்டிருக்கிறது... ஆண்டாளை எப்படி தாசியென சொல்லலாம் என பொங்கியவர்கள் தங்கள் மதங்களுக்குள்ளேயான பாலியல் வஞ்சகங்களை மறைத்திடுகிறார்கள், போலவே  இதற்கான எதிர்வினை என ஆண்டாள் எப்படி "காமம்" பற்றி செய்யுள் எழுதலாம் என பொங்கியவர்களே இங்கு ஏராளம்... ஆக இங்கு இப்பொழுதும் காமம் ஒரு ரகசியப்படுத்துதலாகவே இருக்கிறது அதன் விளைவாகவே பருவத்தில் ஏற்படும் மாற்றங்களை குறித்து தங்கள் மகன், மகள் களுக்கு எடுத்துகூறுவதில் மிகப்பெரிய தயக்கம் இருக்கிறது... அதே மாதிரி எப்படியானாலும் சில மிருகத்தன்மை ஒட்டிக் கொண்ட மனிதர்களின் தொடுதல் எவ்வகையானது என்று தங்கள் பிள்ளைகளுக்கும் விளக்கிட தவறிவிடுகிறார்கள்... ஒரு தூக்கு இதையெல்லாம் சரி செய்யுமா என்றால் நிச்சயமாக இல்லை என்பேன்.. போலவே... ஏதேனும் ஒரு சம்பவம் தஷ்வந்துக்கள் மாதிரியாக நிகழ்ந்து அதில் பலரின் விமர்சனங்களை நன்றாக கவனியுங்கள் , குறி அறுக்க வேண்டும், கொலை செய்ய வேண்டும் என்றே இருக்கும் ஒருவரும் " நிகழ்ந்து விட்டது அடுத்து என்ன மாதிரியாக சமூகத்தை நகர்த்தப் போகிறோம்" என விமர்சனம் எழவே எழாது... இதுவும் கடந்து போகும் என்பதாகத்தான் எதுவும்,, இயலாமைக்கு " சவுதி தண்டனையை நடைமுறைப் படுத்த வேண்டுவோம்,,,
எழுதுவேன் இன்னமும்....

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...