Friday, September 21, 2018

பிரியமானவளே


அந்தி வானத்தில்
தவழும் பிறை
தோள் தொட்டு
தேடுவதற்குள்
என்னில் உட்புகுந்தாய்
அந்நேரத்தில் மலர்ந்த
மலரின்
ஸ்பரிசத்தை போல...
சொல்ல மறந்த கதைகள் என
ஏதுமில்லை நமக்குள்...
ஆம்...
நான் மரணித்த பிறகும்
உன் நினைவுகளினூடே
அவை அசைபோடுமல்லவா...
யாதொரு ஒளிவு மறைவுமற்ற
நேசத்தில் செதுக்கிய
காதலின் கூடு அது...
பிரியமானவளே...

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...