Friday, September 14, 2018

ராட்சஷி


எனக்குள் ஒலித்திடும்
ஜீவ நதிகளின் இசையினூடே
உன்னை தேடுகிறேன்
அனுதினமும் இம்சிக்கும்
உன் பேச்சொலிகளின் மயக்கத்தில்
நித்தம் அலைகிறேன் ஒரு
பித்தனாக...
பசி மறந்து... தூக்கம் மறந்து...
என் துக்கத்திலும் நீ.. கலந்து...
ஒவ்வொரு நொடிகளிலும்
உன் பெயரையே உச்சரித்து
வாழ்தல் பிடிக்கிறது‌‌.‌‌..
ஆமாம்...‌‌
காதல் எப்போது வந்தது எனக்குள்
என்று மட்டும் புலப்படவேயில்லை
இன்று வரையில்...
உனக்கும் அப்படித்தான்
என்றுணர்ந்து உச்சிமுகர்ந்து
மிச்சங்களை வாரி இறைக்கிறேன்
முத்தங்கள் என்றுணர்வாய் நீ...
மூச்சின் வெப்பம் தணிவதற்குள்ளாக
நாம் விழித்துக்கொள்ளுதல் வேண்டாம் விடிந்த பின்னாலும்... 
இமைகளை மூடிக்கொண்டே
நினைவுகளின் பகிர்தலில் ஒன்றாய்
படுத்திருப்போம்...
பேரன்பின் பெருங்கனவு நமக்குள்
காட்சிகளாகட்டும்
ராட்சஷியே.‌‌..

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...