எத்தனையோ பகலிரவுகளில்
உன் நினைவோடு வாழ்ந்திருக்கிறேன்
வாழ்கிறேன் வாழ்வேன்..
எந்த விடியலிலும்
உன் பார்வை என் மீது
பட்டு பிரகாசிக்கும் போது
புற்களில் மின்னும் பனித்துளிகள் போலாகிறது...
உன் இதழ்கள்
ஒற்றை வார்த்தை உதிர்க்காதா
என்று !
ஏங்கும் என் மனதிற்குள் எப்பொழுதும்...
அது கோபமா ! பாசமா !
என பிரித்தறிய தோன்றிடவில்லை...
என் காதலும் உன் காதலும்
நம் காதலாகி...
யாதொரு பிழையின்றி
தோன்றிய இருதயத்தில்
நம் நினைவுகளை ஊற்றி
என்றும் தனிந்து விடாது
நேசக்கற்று வீசிக்கொண்டேயிருக்கும்....
உறங்காத நம் இரவுகள் ஒவ்வொரு நாளும் கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது !
உன்னில் நானும் என்னில் நீயும்
எந்த ஒரு பரிச்சயமும் இன்றி !
நமக்குள் பேரன்பு
வருவதற்கான வழியை
காதலால் கண்டெடுத்தோம்
ராட்சஷியே....
0 comments:
Post a Comment