Sunday, October 07, 2018

கனவுகள் வருவதில்லை




யாதொரு கனவுகளும் எனக்குள்
வருவதில்லை
பிறைதேடி பகலிரவு முழுவதும்
உறக்கத்தை தேடி
நித்தம் அலையுமென்
ஆத்மார்த்தமான மனதிற்குள்
எதையோ அழியாச் சுடராய்
கட்டிவைத்துள்ளேன்
பேரன்பு எனக்குள் படர்ந்து
ஆராதிக்கும் பிசாசுகள் ஆனாலும்
ஏற்றுக்கொள்வேன்
அப்போதாவது சிறு கனவேனும்
வருமல்லவா....

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...