Monday, January 28, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம் நியாயமானதா ?




பிரச்சினை இதுதான் ... வெகுசன மக்கள் போராட்டம் நடத்துகின்றபோது "எனெக்கென்ன வந்துச்சு " என்கிற மனநிலையில் ஆசிரியர்கள் இருந்தமையாம் இன்று அவர்களுக்கு எதிராக  "அதிக சம்பளம்" என்கிற வரையறைக்குள் அடக்கி ஆசிரியர்களுக்கு எதிராக பொது சனங்கள் திரும்பியிருக்கிறது ...
இதனை எப்படி அணுகுவது என்று மற்ற அரசியல் இயக்கங்களுக்கும் விளங்கவில்லை .... அரசு மிகப்பெரிய அளவில் ஊதிய சுரண்டலில் ஈடுபட்டதை மறைக்க முயற்சிக்குமே தவிர அதனை சரிகட்டும் வேலையில் என்றுமே இறங்காது ... தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருக்கும் வெகு சன மக்களை ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பி விடுவதையே ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது அரசு ... இன்று தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு அவ்வளவு பெரிய போட்டி நிகழ்கிறதெனில் 2011 முதல் 2019 வரையிலான அதிமுக அரசே காரணம் என்பதையும் ஏற்க மறுக்கிறார்கள் ... இடையில் பகுதிநேர ஆசிரியர்கள் என்கிற போர்வையில் "அரசு வேலைக்கு கமிஷன்" எனவும் கொள்ளையடித்த ஜெயாவை நோக்கி  "இரும்பு மங்கை " என்று புகழ்ந்தும் அனுதாபங்களை மக்கள் தந்துவிட்டார்கள் ... இதன் நீட்சி "துப்புரவு பணியாளர்கள்" நியமனம் வரையில் கமிஷனுக்கு அரசு வேலை என்று இப்பொழுது வரையில் நீடித்துக்கொண்டுதானிருக்கிறது . முழுக்க முழுக்க முதலாளித்துவ ஆட்சியை நோக்கி பாய வேண்டிய முழக்கங்கள் எப்படி போராடும் இயக்கங்கள் , அமைப்புகள் , சங்கங்கள் மீது திருப்பிவிடுகிறதென உணரும் பட்சத்தில்  ஒரு மாநிலத்தை ஆளும் ஏகாதிபத்திய  கட்சிகள் எவ்வாறு தங்கள் சுய லாபத்திற்காக மக்களை பயன்படுத்துகிறார்கள் என்பது நன்கு விளங்கும் ... அதுமட்டுமின்றி தற்போது ஜாக்டோ ஜியோ அமைப்பு  போராட்டம் முதல் மாற்றுத்திறனாளிகள் போராட்டங்கள் வரையில் ஆளும் ஏகாதிபத்திய  அதிமுக அரசின் அணுகுமுறைகளை மக்கள் சற்று சிந்தித்திட வேண்டும் , அதுபோலவே ஆசியர்களும் , இதுவரையில் மக்கள் போராட்டங்களில் அடையாள ஆதரவு கூட எங்கும் கொடுத்ததில்லை ஜாக்டோ ஜியோ அமைப்பு என்பது அவர்களுக்கே தெரியும் .  ஏன் அவர்கள் குரலெழுப்ப வேண்டும் என்று கேள்விகள் முன்வைக்கப்படலாம் ... அதற்கு பதில் இன்று  ஆசிரியர்கள் போராட்டத்தை அரசுக்கு எதிராக இல்லாமல் அதே ஆசிரியர்களுக்கு எதிராக திருப்பிவிடும் ஆளும் அதிமுக அரசின் அரசியல் யுக்தியை அறிந்திடவே ஜாக்டோ ஜியோ மக்கள் போராட்டங்களில் குரலெழுப்புவதன் மூலம் அறிந்து கொள்ளலாம் . ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையில் அவனோடு "அரசியல் " என்பது இயல்பாகவே பயணிக்கத் தொடங்குகிறது என்கிற உண்மை எப்போது உணர்கிறோமோ அப்பொழுது சனநாயகத்திற்கு வித்திடும் நல்லாட்சியை நாம் தேர்தெடுக்க முடியும் . ஆகவேதான் "அரசியல் பழகு " என அழுத்தமாய் சொல்லப்படுகிறது . ஆண்டாண்டுகால  "உழைப்புச் சுரண்டல் " இன்றும் தொடர்வதற்கு அரசியல் அறிவின்மையே காரணமாக அமைகிறது .  குறைந்தபட்சம்  ஆசிரியர்களின் CPS  பணம் 50000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருக்கும் அரசை நோக்கி தயவுசெயது கேள்வி கேட்கலாம் ... ஏனெனில் இந்த ஊழல் வாதிகள் அவர்களுக்குள்ளாகவே தங்கள் இஷ்டம் போல சட்டமெழுதி "சட்டமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு " என இயற்றியபோது நாம் அமைதியாகவே வேடிக்கை பார்த்தோம் , அதுமட்டுமின்றி மக்களை ஆளும் எந்த அரசியல் அதிகார வர்க்கத்திற்கும் (மருத்துவம் , சட்டம், தவிர...)  "எங்களை ஆள இன்ன தகுதிதான் பெற்றிருக்க வேண்டுமென்கிற வரையறை இல்லாத போது அப்படியே எதற்கெடுத்தாலும் சட்டம் இயற்றும் அதிகாரம் அவர்களுக்கு சனநாயக ரீதியாக நாம் உரிமை தந்திருக்கிறோம்  அதனடிப்படையில் இவர்களும் TET , NEET , என பல்வேறு அடக்குமுறைகளை மாணவர்கள் மீதும் ஏவுகிறார்கள் . அப்படியே அந்த தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றாலும் மறுபடியும் "கமிஷனுக்கே அரசு வேலை " என்கிற சுழற்சிக்குள் மட்டுமே சுழலும் ஆளும் அதிகார வர்க்கம் . இங்கு இதன்படி எந்தவொரு அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்திடும் மனப்பான்மையில் அரசு இல்லை என்பதை உணர்ந்து கொள்வீர்கள் எனில் மொத்த குரல்களும் நிச்சயமாய் அரசுக்கெதிராகவே திரும்பட்டும் . 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற 17000 ஆசிரியர்களை இன்னமும் பணியமர்த்தவில்லை இந்த அரசு என்பது குறிப்பிடத்தக்கது .

ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் :


0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...