Monday, March 23, 2015

பெற்றோர்களே உயர்வாக தங்களை காட்டிக்கொள்ள பிள்ளைகளை பலியிடாதீர்கள்

எனது குடும்பம் அப்போது நடுத்தர
வர்க்க குடும்பம்தான்,அ ரசுடன்
இணைந்த தன்னாட்சி கிருஸ்த்துவ
பள்ளியில் நான் படித்தேன் . சிறு
வயதில் சைக்கிளை ஓட்டும்
பயிற்சிக்காக பக்கத்தில் இருக்கும் ஒரு
பாய் கடைக்குச்சென்று பள்ளி
வேளைநாளில் பெற்றோர் கொடுக்கும்
கைச்செலவு காசினை அப்படியே
சேமித்துவைத்து எப்போது சனிக்கிழமை
வருமென காத்திருந்து விடிந்தவுடனே
ஒரு மணிநேரத்திற்கு பத்துரூபாயென
பாயிடம் சைக்களை வாடகைக்கு
எடுத்துக்கொண்டு படாத
அடிகளெல்லாம் பட்டு அந்நாளை
கழிப்பது என்பதே அலாதி பிரியம் தான்
(வாடகை சைக்கிளுக்கு வெள்ளி இரவே
பலபேர் முன்பதிவு செய்துவிடுவார்க
ள்) அப்படியாக சைக்கிள் ஓட்டக்
கற்றுக்கொண்டு வீட்டில் சைக்கிள்
வாங்கிக்கொடுவென அடம்பிடித்தால்
அடிவிழும் . அடிவிழாத நேரம் அது
தேர்வு நேரமாகத்தான் இருக்கும்
நிபந்தனைகளுடன் சிரித்துச் சினுங்கி
கொஞ்சிபடியே அப்பாவும் அம்மாவும்
சொல்வார்கள் ."செல்லம் படிச்சி நல்லா
மார்க்கெடுத்து பத்தாவது பாஸாகி
ஏரியாவுல முதலாளா வருவியாம்
அப்பா உனக்கு சைக்கிள்
வாங்கித்தருவாரு ம்"இப்படியாக ஓடும்
பாஸாகியும் சைக்கிள் வராது
மதிப்பெண் குறைவு அதுயிதுவென
அவ்வப்போது திட்டும் விழும்.
ஒருவழியாக பன்னிரெண்டாம் வகுப்பு
சேரும்போதுதான் சைக்கிள் கையில்
கிடைத்தது.(உளவி யல் பையனோ
பொண்ணே பன்னிரண்டாம் வகுப்பு
போகையில்தான் சரியான வளர்ச்சி
பிள்ளைகள் பெற்றுவிட்டார்க ள்
என்பது என்போன்ற மகனை,மகளை
பெற்ற பெற்றோர்களின் எண்ணவோட்டம்)
பிறகு அந்த சைக்கிளை ஒருவாரம்
கண்ணுங் கருத்துமாக துடைத்துக்
கழுவி புத்தம் புதிதாக பாதுகாத்து
பின் கவனிக்கப்படாமல் அந்த
சைக்கிளுக்கு வாயிருந்தால் கத்திக்
கதறியழும் என்கிற நிலையில் ஒரு
ஓரமாக கிடத்திப் போட்டுட
வேண்டியதுதான். அதன்பின்னான
அடுத்த இலக்கு மோட்டார் சைக்கிள்.
சைக்கிளாவது கிடைத்தது மோட்டார்
சைக்கிள் வெறும் கனவுதான் "அது
அன்றையப் பேராசை"ஆனால்
உண்மையை விளக்கிப்
புரியவைப்பதில் பெற்றோர்கள்
சிறந்தவர்களாக தோன்றியது
அப்போதுதான்,, மோட்டார் சைக்கிள்
ஓட்ட உனக்கு பதினெட்டு வயசு
முடிஞ்சிருக்கனு ம்டா ,லைசென்ஸ்
வாங்கனும். சைக்கிளை விட
அதுக்கான செலவும்
பாதுகாப்புமுறைய ும் அதிகமாக
இருக்கும் . முக்கியமா சாலை விதியை
கடைபிடிச்சு ஓட்டனும் . இதெல்லாம்
கத்துகினு அப்புரமா மோட்டர்சைக்கள்
வாங்கனும் என்பார்கள். நியாயமான
கருத்துக்களின் மூலமாக
அடம்பிடித்தல் நின்றது. கல்லூரியில்
கால்பதிந்த நேரம் .இடமோ சென்னை
தங்கவில்லை தினமும் ரயில்
பயணம்தான் .ஒருநாளைக்கு சராசரியா
6மணிநேர ரயில் பயணம். இன்ப
அதிர்ச்சியை வழங்குவதில்
பெற்றோருக்கு நிகர் பெற்றோர்களே ஒரு
நாள் திடீரென மோட்டார் சைக்கிள்
வீட்டில். பல கட்டளைகள் போட்டுதான்
கையில் கொடுத்தார்கள். முக்கிய
கட்டளையாக சாலைவிதி
இருந்தது.இப்போத ு இக்காலச்சூழலுக்
கு வருவோம் ஒன்றரை வயதில்
சைக்கள் . தவறில்லை குழந்தை
வளர்ப்புக்கான அக்கரையாக
அதுவிருக்கிறது. பதினோருவயதில்
பெரிய சைக்கிள் அதுவும் மேற்சொன்ன
பதத்திலியே வந்துவிடுகிறது
தவறேதுமில்லை . ஆனால் பதினாங்கு
அல்லது பதினைந்து வயதில் மோட்டார்
சைக்கிள் இங்கேதான் பெற்றோர்கள்
மீதான தவறிருக்கிறது. "இதிலென்ன
தவறிருக்கிறது காசிருக்கிறது
வாங்கித்தருக்கி றோம் அதுவும் உங்கள்
காலகட்டம் வேறு இன்றைய
காலகாட்டம் வேறு காலங்கள்
எல்லாவற்றையும் புரட்டிப்
போட்டுவிடவில்லை யா என்ன ஐயா
குற்றஞ்சொல்ல வந்துவிட்டீர்கள ே என
கேட்கும் பெற்றோர்களின் மனநிலையை
கவனித்ததன்பால் கருத்துக்களை
முன்வைக்க வேண்டுமே.
சரியாகச் சொன்னீர்கள் பெற்றோர்களே
உங்களிடம் காசிருக்கிறது வாங்கிக்
கொடுக்கிறீர்கள் அதில் உள்ளேபுக
விரும்பவில்லை ஆனால்
காலக்கட்டத்தை நினைவுபடுத்தினீ
ர்களே அதிலேயே உங்களின் குறை
வெளிபடுகிறது.
காலங்கள் மாறினாலும் அன்று
நமக்கிருந்த அதே சட்டம்தானே
இன்னும் செயல்பட்டுக்கொண ்டிரு­
க்கிறது அதிலிருந்து நீங்கள்
தப்பித்துவிட முடியாது தானே.
அன்றிருந்த அதே மோட்டார் வாகனச்
சட்ட விதிகள் தானே இன்றும்
கடைபிடிக்கப்படு கிறது.
*பதினெட்டு வயதிற்குற்பட்ட எவரும்
சாலையில் இருசக்கரம் அதற்கும்
மேலான கனரக வாகனம் ஓட்டுதல்
தடை
*பதினெட்டு வயதிற்குற்பட்டோ ருக்கு
ஓட்டுநர் உரிமம் வழங்கத்தடை
*சாலை விதிகளை அனைத்து
மக்களும் பின்பற்றப்பட வேண்டும்
போன்றான சட்டவிதிகள் அன்றைய
காலத்திலிருந்து இன்றைய
காலத்திற்கு மாறவில்லைதானே
அப்படியேதான் இருக்கிரதல்லவா.
இதில் பல்வேறு சட்டவிதிகள்
இருப்பினும் பதிவிற்கு இதுவே
போதுமானதாக இருக்கிறது.இவ்வ ாறு
இருக்கையில் சமூகத்தில் அந்தஸ்தாக
இருக்கும் நீங்களே சட்டத்தை மீறி
உங்கள் குழந்தைகளுக்கு மோட்டார்
சைக்கிள் வாங்கிக்கொடுத்த ு பள்ளிக்கு
அனுப்பலாமா? உண்மையான
மனசாட்சியுடனே பதில்சொல்லுங்கள ்
பெற்றோர்களே,,, அதுவும் சாதாரண
மோட்டார் சைக்களிலில்லை
பெரியவர்களே ஓட்டத் திண்டாடும்
150 தொடங்க220 வரையிலான
குதிரைத்திறன்
கொண்ட மோட்டார் வண்டிகளையே
வாங்கித் தருகிறார்கள் இதன் விளைவு
பள்ளி மாணவர்களின் மூலமாக
சாலைவிபத்து மற்றும் பள்ளி
மாணவர்களுக்கே நிகழும் சாலை
விபத்துக்களால் பெற்ற பிள்ளைகளை
பறிகொடுத்துவிட் டு தேவையில்லாம்
மற்றவரின் மீது பழிபோட்டுவிட்டு
பெற்றோர்கள் தப்பித்துக்கொள் கிறார­
்கள்.சிந்தித்து ப் பாருங்களேன சாதாரண
விஷயம் தான் பெரியவர்கள் போல்
அல்லாமல் துள்ளி குதிக்கின்ற பருவ
வயதில் மோட்டார் சைக்கிளை
பாய்ச்சலோடுதான்
செயல்படுத்துவார ்கள் பிள்ளைகள்
இளங்குருதி பயமறியாது என்பார்கள்
அதன் படியே பணயம்
வைக்கப்படுகின்ற உயிர்
பலியாவதற்கு
பெற்றோர்களே காரணமாய் இருக்கலாமா
. உங்களால் நீங்கள் மட்டுமே இதனால்
நிம்மதியை தொலைத்துவிட வில்லை
ஒட்டுமொத்தச் சமூகத்தையும்
நிம்மதியற்ற வாழ்வுக்கு அழைத்துச்
செல்கிறோம் . விளையாட்டுப்
பிள்ளைகளின் குரும்பான ஆசைகளின்
விளைவுகளை நன்முறையில்
எடுத்துக்கூறி கொஞ்சநஞ்சமேனும்
நடக்கின்ற விபத்துக்குளை
தடுத்திடுதல் வேண்டாமா அது நம்
கடமையல்லவா,,, மீண்டும் மீண்டும்
சிந்தித்துப்பார ுங்கள் சின்ன
விஷயமிதுவல்ல என்று பெற்றோர்களே
உங்களுக்குத் தெரிய வரும்.
தற்போதைய தமிழகத்தில் சாலை
விபத்துக்களில் குறிப்பாக இருசக்கர
வாகன விபத்துக்களை ஏற்படுத்தும்
பள்ளி மாணவர்கள மற்றும் ஏற்பட்ட
விபத்துக்களில் பலியாகும் பள்ளி
மாணவர்கள் பெரும்பான்மையாக
இருக்கிறார்கள் இதில் இன்னும்
அதிர்ச்சியூட்டு ம்
விஷயமென்னவெனில்
பள்ளிமாணவர்களும ் குடித்துவிட்டு
வாகனம் ஓட்டுவது தான்.
ஒட்டுமொத்த சமூகத்தையும்
அதிர்ச்சிக்குள் ளாக்கும் இத்தகைய
செயல்களுக்கு நாமே இடம்
கொடுத்துவிடலாமா !
தற்போது 250 முதல் 550
வரையிலான குதிரைத்திறன் கொண்ட
மோட்டார் வண்டிகள் விற்பனைக்கு
வேறு வரப்போகிறதாம் இது
வளர்ச்சியின் குறியீடென்றாலும ்
பிள்ளைகளின் நலனில் அக்கரை கொண்ட
பெற்றோர்கள் நிச்சயமாக சில
விஷயங்களை பிள்ளைகளை புரிய
வைத்திட வேண்டிய பொருப்பு
நம்மிடையே இருக்கின்றது என்பதை
மறவாதீர்கள் . இந்த பதிவு அனைத்து
விதமான பொருளாதரத்திலுள ்ள
பெற்றோர்களுக்கு ம் பொருந்தும்
என்பதையும் குறிப்பிட
வேண்டியுள்ளது . பிள்ளைகளை
வளர்ப்போம் ,பிள்ளைகளை காப்போம்,
பிள்ளைகளை
வாழவைப்போம்,வார ுங்கள்
பெற்றோர்களே!,,
ி

5 comments:

  1. Very good message. Thanks. You can actually write more like this that are useful than writing about caste, etc

    ReplyDelete
  2. பையன் காரோட்டுவதில் , பத்தடி தூரம் கடைக்குப் போவதற்கு பைக் ஓட்டுவதைப் பார்த்து பரவசமடையும் தாய்மார்கள் உருவாகி யிருக்கிறார்கள்

    ReplyDelete
  3. அவ்வாறான பெற்றோர்கள் ஆடம்பரச் சிந்தனையிலிருந்து வெளிவர வேண்டும்

    ReplyDelete
  4. தேவையான பதிவு ! பலரும் படிக்க வேண்டும் மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும் ! ஆனால் இதையே
    பலரும் படிக்கவில்லையே! என்ன செய்வது?

    ReplyDelete
  5. என்றேனும் ஒருநாள் கவனித்தே ஆக வேண்டுமல்லவா அதனால் கவலையில்லை தோழர்!
    வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...