Friday, November 20, 2015

யாழ் நூலகம்

காற்றசைவின்
சப்தங்களையும்
மறந்து போயின
மரங்கள்

புத்தகங்களை
புரட்டும் கைகள்
இசைத்துக்
கொண்டிருந்தது
ஓர் அழகான
அனுபவத்தை

உள்ளே
மேசை நாற்காலியில்
வாழ்க்கைப் பாடம்
கற்கும் பள்ளிச்
சிறுவர்களும்
கல்லூரிக்
கனவாளர்களும்
ஒரு புரத்தில்

தான் பெற்ற
ஏற்கனவே அனுபவித்த
வாழ்க்கையின்
மனச்சாரல்களை
அசைபோட்டும்
இனி வாழப்போகும்
காலத்திய கனவுகளை
அலசியும்
ஆத்மார்த்தமாய்
புத்தகம் வாசிக்கும்
முதியோர்கள்
ஒரு புரத்தில்

எழுதியும்
எழுதப்படாமலும்
எழுத்தின் மூச்சினை
எப்போது வேண்டுமாலும்
உட்கொள்ளப்படலாம்
என்கிற ஆவலோடு
ஆங்காங்கே குறிப்பெழுத
வைத்திருக்கும்
பேனாக்களும்
நோட்டுகளும்
அவரவரிடத்தில்

தன் அறிவுக்கு எது
வேண்டுமென்பதை
ஏற்கனவே முடிவு
செய்துவிட்ட
மூளையின் சொல்படி
புத்தக தலைப்புகளையும்
எழுதிய
படைப்பாளியையும்
தேடி நகரும் புத்தக
மேய்ப்பர்கள்
ஆங்காங்கே

யாருக்கு என்ன
வேண்டும் எவ்விடத்தில்
எந்த புத்தகம் உள்ளது
எத்தனை புத்தகம்
சுற்றுலா சென்றுள்ளது
வாசிக்கப்படும்
புத்தகங்களை
குறிப்பெடுப்பது
சீர்மரபில்
அலமாரிகளில்
புத்தகம் அடுக்குவதென
அத்தனை பெருஞ்சுமை
வேலைகளையும்
ஓர் கால்முளைத்த
குழந்தை ஓடியாடி
துள்ளிக்குதிப்பதை போல
சிமரமின்றி செய்து
முடிக்கும் காப்பாளர்கள்
ஒரு புரத்தில்

அதுவரையில் அமைதியாகத்தான்
இருந்தது அந்த பூமியும்
அந்த நூலகமும்
அது சுற்றியிருந்த
மரங்களும்

அப்போதுதான்
வீசினார்கள்
அந்த முதல்
பெருநெருப்பு
தீப்பந்தத்தை
எமது
யாழ் நூலகத்தில்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...