Sunday, November 22, 2015

நடிகைகளின் விபச்சார ஈடுபாடும், முத்தப்போராட்ட முக்கிய குற்றவாளியும்

முற்போக்கு என்றாலும் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்பதும்
பிற்போக்கு என்றும் தளவளையத்திற்குள் வந்துவிடுகிறது. அந்த வகையில் கடந்த
(2014) ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தென்னிந்திய
ஊடககங்களாலும் , முற்போக்காளர்களாலும்­­ பெரிதும் கவரப்பட்ட ஓர்
போராட்டம்தான் "கிஸ் ஆஃப் லவ்" எனும் முத்தப் போராட்டம்.
சென்னைப்பெருநகரத்து உயர்படிப்பாளர்களான IIT மாணவர்கள் இந்த முத்தப்
போராட்டத்தால் தமிழகத்தை திரும்பி பார்க்கச்செய்தார்கள்­­ போலவே
தொடங்கப்பட்ட கேரளத்தில் அதன் தாக்கம் பரவலாக்கப்பட்ட நிலையில் , ஏன்
எதற்கு இந்தப் போராட்டம் , இதன் பின்புல அமைப்பாளர்கள் யார்? இந்துத்துவ
சங்பரிவார
அமைப்பை எதிர்க்க கையாளப்பட்ட போராட்டமெனில் எந்த வகையில் அது
இந்துத்துவத்தை எதிர்க்கிறது, என்கிற எவ்வித முன்யோசனை முயற்சிகளையும்
மேற்க்கொள்ளாமல் சமூக வலைதளங்களும் தங்கள் பங்கிற்கு ஆதரவு பதிவுகள்
இட்டு இந்திய அளவிற்கு "முத்தப் போராட்டத்தினை எடுத்துச் சென்றார்கள்"
இது இந்துத்துவ பார்ப்பானியத்தின் அடாவடிச் செயல்களுக்களுக்கான அல்லது
போலி கலாச்சாரத்திற்கான எதிர்ப்பு வகை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டால­­ும்
எதிர்ப்புக்கு முந்தைய அல்லது பிந்தைய இயக்க வகையினர் யாரென்பதை மறந்தும்
அறிய முற்படாமல் விட்டதன் விளைவுகளுக்காக இன்று முத்தப்போராட்ட
ஆதரிப்பாளர்கள் அவமானப்பட்டு உதட்டை கடித்துக்கொள்வார்கள்­­ என்பது
நிச்சயம். கேரளாவில் சமீபத்தில் சங்பரிவார அமைப்புகளை கண்டித்து பொது
இடங்களில் கட்டிப்பிடித்து முத்தமிடும் போராட்டம் நடத்திய கிஸ் ஆஃப் லவ்
என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் "ராகுல் பசுபாலன்" என்பவனும் அவரது
மனைவியான கேரள மாடல் ரஷ்மி ராயரும் விபசார தொழிலில் ஈடுபட்டதாக கேரள
காவல்துறை கைது செய்திருக்கிறார்கள்.­­
இவர்களோடு மொத்தம் எட்டு பேர், ஆன்லைனில் விபசாரம் செய்ததாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பசுபாலன் காவல்துறையிடம் வாக்குமூலம் அளிக்கையில் பல
அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்திருக்கிறான்­­. அவன் கூறுகையில்,,,
ஏழு வருடங்களுக்கு முன்பு வேலைக்காக சென்னை சென்றிருந்தேன். அப்போது
அங்கு ரஷ்மியுடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம். திருமணம்
செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்தோம்.
அப்போது இருவரும் சேர்ந்து விபச்சார தொழிலில் ஈடுபட முடிவு செய்தோம்.
ஆன்லைன் மூலமாக இதைச் செய்ய ஆரம்பித்தோம். அதற்கு நல்ல வரவேற்பு
இருந்தது. அதனால் கொச்சிக்கு சென்று இன்னும் விரிவாக இந்த தொழிலை செய்ய
நினைத்தோம்.
இந்தத் தொழிலில் மாதம் ரூ. 20 லட்சம் வரை வருமானம் கிடைத்தது" என்று
சொல்லுகிறான். மேலும் அவன் கூறுகையில்,,, திரைத்துறையில் புகழ் பெற்ற
நடிகைகள் பலரை வைத்து தான் விபசாரம் செய்ததாகவும். குறிப்பிடுகிறான்.
காவல்துறை வாக்குமூலத்தில் "எங்களுக்கு புகழ் பெற்ற பல நடிகைகளின்
அறிமுகம் உண்டு. அவர்களும் எங்களுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மலையாளத்தில் பிரபலமாக உள்ள நடிகைகள் பலரையும் நாங்கள் தொழிலில்
ஈடுபடுத்தியுள்ளோம். நடிகையுடன் ஒரு இரவைக் கழிக்க 2.25 லட்சம் ரூபாய்
கட்டணம் வசூலித்தோம்" எங்களுக்கு தமிழக திரையுலகிலும் தொடர்பு உண்டு.
மிகப் பிரபலமாக இருக்கும் தமிழ் நடிகைகள், சின்னத்திரை நாடக
நடிகைகள்,விளம்பர நடிகைகள் பல பேரை நாங்கள் இத்தொழிலில்
ஈடுபடுத்தியிருக்கிறோ­­ம். என்று தெரிவித்திருக்கிறான்­­. விபச்சாரத்தில்
ஈடுபட்ட குறிப்பிட்ட தமிழ் நடிகைகள் மற்றும் கேரள நடிகைகளின் விவரங்களை
பசுபாலன் காவல்துறைக்கு தெரிவித்திருப்பதாகவு­­ம் செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஷ்வரி ,
விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் நடிகைகளின் விவரங்களை கொடுத்திருந்தாலும் ,
அப்போது அந்த விவகாரம், அதிரடியாக மூடப்பட்டது. விவரங்களை தெரிவிக்க
கடும் எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதப்
போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் போராட்டத்தில்
ஈடுபட்ட நடிகர் ரஜினி அவர்கள் நடிகைகளுக்கு ஆதரவாக கடுமையாக
விமர்சித்தார் என்பதும் கவனத்திற்கு,,, இதனிடையே பசுபாலன் என்கிற
விபச்சாரன் கைதானதை தொடர்ந்து தமிழ் திரையுலகம் நிச்சயமாக அடையாளங் கண்டு
அதன்பின்னரே ஆதரிக்கவோ, எதிர்க்கவோ முற்போக்காளர்கள் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு பாடமாக அமைந்து விடுகிறது. அவலங்களை
முன்னெடுத்தவனே ஒரு கொடுமையான சமூக அவலத்திற்கு காரணமாய்
இருந்திருக்கிறான் அதனை ஆதரித்த குற்றத்திற்காக முற்போக்கும் குற்றவாளிக்
கூண்டில் நிற்கிறது எனும் போது அவமானப்படுவதைத் தவிர வேறென்ன இருக்கப்
போகிறது. முற்போக்கு மறுபரிசீலனை தேவைப்படும் ஒன்றாக இங்கே இருக்கிறது.
தொடர் தற்கொலைகள், தொடர் விபச்சார தொழிலென திரையுல நடிகைகளின் சமூக
அவலங்களுக்கும்,ஒடுக்­குமுறைகளுக்கும் நல்லதொரு தீர்வுகள் முன்னெடுத்து
அவர்களின் மறுவாழ்வுக்கான அலோசனை நடவடிக்கைகள் இங்கே தேவையாக இருக்கிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...