Wednesday, February 24, 2016

நக்சல்பாரிகள் தீவிரவாதிகளில்லை, தோழர் சிவலிங்கத்தை விடுதலை செய்!

எங்கெல்லாம் அதிகார வர்க்கத்தின்
அடக்குமுறைகள்
கையாளப்படுகின்றதோ அங்கெல்லாம்
புரட்சி என்பது தவிர்க்க
முடியாதொன்றாக அமைந்துவிடுகிறது.
அந்த வகையில் அடிமை பட்டிருக்கும்
மக்களின் உரிமைக்காகவும்,
நீதிக்காகவும் போராடும் மிகப்பெரும்
மாண்பை பெற்ற இயக்கம்தான்
"நக்சல்பாரி" இயக்கம். பெரும்பாலும்
அதிகார வர்க்கங்கள் கட்டவிழ்க்கும்
வன்முறைக்கு அதே வன்முறை
தீர்வாகாது என்பது நாம்
கொண்டிருக்கும் கோட்பாடாக இருக்கிறது
என்பதால் அவ்வப்போது ஆயுதம்
ஏந்துதல் குறித்தான நக்சல்பாரிகள்
நடிவடிக்கைகளில் நமக்கு உடன்பாடு
இல்லையென வைத்துக்கொண்டு சில
விமர்சனங்களையும் அவர்கள் முன்
வைக்கிறோம். ஆனால் தீவிரவாதிகள்
எனும் வளையத்திற்குள்
நக்சல்பாரிகளை அடக்குவது
முறையற்ற பார்வையை
கொண்டிருக்கும். தொடர்ந்து
ஒடுக்கப்பட்ட பாட்டாளி தொழிலாளர்
வர்க்கத்தின் உரிமைகளுக்காக போராடி
வரும் நக்சல்பாரிகளை தீவிரவாதிகள்
எனும் வளையத்திற்குள் யார்
கொண்டுவருகிறார்கள் எனப் பார்த்தால்
தன் முதலாளிய கார்ப்பரேட் பலத்தால்
இந்திய நாட்டின் பாட்டாளி தொழிலாளர்
வர்க்கத்தின் உழைப்பை சுரண்டுதல்,
அரசு அதிகாரத்தை கைப்பற்றுதல்,
கைப்பற்றப்பட்ட அரசு அதிகாரத்தை
பயன்படுத்தி சட்ட ஒழுங்கை
சீர்குலைத்தல், நீதித்துறையை
விலைக்கு வாங்குதல், எங்கும்
தனியார்மயத்தை தராளமாக்குதல்,
கல்வியை வியாபாரமாக்குதல் என
தொடர்ந்து தன் சர்வாதிகாரத்தை
நிலைநிறுத்தும் ஈனச்செயல் புரியும்
முதலாளிய பணமுதலைகள்தான்
நக்சல்பாரிகளை ஒரு தீவிரவாத
இயக்கமாக கட்டவிழ்த்து அதன் முதல்
தனக்கு எதிராக திரும்பும் வர்க்க
புரட்சியை அடக்கி ஒடுக்குகிறது.
இதனடிப்படையில் காலங்காலமாக
மக்களுக்காக போராடும்
நக்சல்பாரிகளின் விவசாய உரிமை
மீட்பு, நில அபகரிப்புக்கு எதிரான
முழக்க முன்னெடுப்பு, போன்ற
அதிதீவிர புரட்சிப் போராட்டங்களை
தீவிரவாதிகள் என
கொச்சைபடுத்துகிறது ஆளும் அதிகார
வர்க்கம்.
இந்நாட்டில் வெள்ளை ஆட்சிக்கு
ஆதரவாக வெள்ளை ஆட்சியாளர்களின்
உயரிய பதவி சுகங்களை அனுபவிக்க
முனைப்பு காட்டியவர்கள் போலியான
தேசபக்தியை கொண்டு இந்தியத்தை
பிளவுபடுத்த பல்வேறு திட்டங்களை
தீட்டி அதையும்
செயல்படுத்துபவர்கள்
தீவிரவாதிகளா? இல்லை மக்களுக்காக
போராடுபவர்கள் தீவிரவாதிகளா? என
நீதிமன்றங்கள் மறுபரிசீலனை
செய்யும் கட்டாயத்திற்கு
தள்ளப்பட்டுள்ளார்கள். அவ்வாறு
தள்ளப்பட்ட நீதித்துறையானது தனது
கடமையிலிருந்து மீறி
மீண்டும் அநீதிகள் பக்கம் நிற்கின்றது
என்பதற்கு தோழர் சிவலிங்கம்
அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்
தண்டனையே சான்றாகவும் அமைந்து
விடுகிறது. 1980ல் வட ஆர்க்காடு
மாவட்டத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்
காலத்தில் நடந்த நக்சல் ஒழிப்பு என்ற
பெயரில் எம்ஜிஆர் மற்றும் தேவாரம்
ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
கந்துவட்டிக்காரர்கள். மக்கள் விரோதிகள்
கோலோச்சிய காலம். ஆதிக்க, அதிகார
வர்க்கத்தை எதிர்த்து. ஏழை
விவசாயிகளை, ஒடுக்கப் பட்ட
மக்களை அணிதிரட்டிப் போராடிய நக்சல்
அமைப்பினரை ஒடுக்க காவல்
துறையினர் தனியாக அனுப்பட்டனர்.
வட ஆர்க்காடு மாவட்டத்தில்
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை
பகுதியில் நக்சல் அமைப்பின் அரசியல்
செயல்பாடுகள் திவிரமாக இருந்த
காலம். அப்போது சிவலிங்கம்,
தமிழ்வாணன், நொண்டி பழனி,
சாமிநாதன் உள்ளிட்டோர் நக்சல்
இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக
இருந்தனர்.
கூடப்பட்டு பகுதியில் இரட்டை
கொலை மற்றும் பல்வேறு கொள்ளை
சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு
இருந்தாக அதிகார வர்க்கத்தால் வழக்கு
ஜோடிக்கப்பட்டு. தலைமறைவாக
இருந்த இவர்களை போலீசார் தீவிரமாக
தேடிவந்த நிலையில் கடந்த 1980ம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி
ஏலகிரி கிராமத்தில் நக்சல் தலைவர்கள்
பதுங்கியிருப்பதாக திருப்பத்தூர்
தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்த
நிலையில்,
அந்த இடத்தை சுற்றிவளைத்து
சிவலிங்கம் உள்ளிட்ட 4 பேரை கைது
செய்தனர். சிவலிங்கத்தை தனியாக
காரில் ஏற்றிக்கொண்டு இன்ஸ்பெக்டர்
பழனிச்சாமி தாலுகா காவல் நிலையம்
நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
திருப்பத்தூர் கலைஞர் நகர் அருகே கார்
வந்தபோது மறைத்து வைத்திருந்த
வெடிகுண்டை காவல்துறை மீது வீசி
விட்டு அவர் தப்பிச் சென்றார். என்றும்
கூறப்பட்ட நிலையில் இந்த
சம்பவத்தை அடுத்து 'ஆபரேஷன்
அஜந்தா' தொடங்கப்பட்டு நக்சல்
இயக்கம் மீது தொடர் தாக்குதல்
நடந்தது.
இதில் பல்வேறு இடங்களில் 17
நக்சல்கள் இயக்கத்தினர்
சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால்
அதிர்ச்சியடைந்த நக்சல் இயக்க
தலைவர்கள் தமிழ்வாணன்,
சிவலிங்கம், சாமிநாதன், நொண்டி பழனி
உள்ளிட்டோர் ஆந்திர மாநிலத்துக்கு
தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் தமிழ்வாணன்,
சிவலிங்கம், சாமிநாதன் உள்ளிட்டோர்
கியூ பிரிவு போலீசாரால் கைது
செய்யப்பட்டனர். கடந்த 30
ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த
நக்சல் தலைவர்கள் கைது
செய்யப்பட்டதால் ஆபரேஷன் அஜந்தா
முடிவுக்கு வந்ததாக அதிகார வர்க்கம்
அறிவித்தது. நக்சல் வேட்டை என்ற
பெயரில் அப்போது காவல்துறை
காட்டாட்சியும்,மனித உரிமை
மீறல்களை எந்த அனுமானத்தாலும்
சொல்லிவிட முடியாது அந்தளவிற்கு
சர்வாதிகாரம் தன்எழுதமுடியாத
வன்முறையினை மக்கள்மீது
பிரயோகித்தது .சட்டம், நீதிமன்றம்
செயல்பாடுகள் அனைத்தும்
காவல்துறையின் கட்டுபாட்டுக்
கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர். தோழர்
சிவலிங்கத்தை 2009ல் கைது செய்த
காவல் துறை. சிறையில்
அடைத்தது.சிறையில் இருந்து
பிணையில் வெளிவந்தார் தோழர்
சிவலிங்கம்.
பிணையில் வந்து எழுபது
வயதாகியும் மக்கள் மீதான பற்றுதல்
குறையாத போராளி
சிவலிங்கம்.அண்மையில்கூட
பாலாற்றில் மணல் அள்ளுவதற்கு
எதிராக போராடி காவலர்களின்
குண்டாந்தடிகளுக்கு இலக்கானவர்
அப்படிப் பட்ட மக்கள் போராளியை
நீதிமன்றங்கள் முறையாக
வழக்குகளை நடத்துவதும்
இல்லை,வழக்கினையும் சரியாக
விசாரிப்பதும் இல்லை நீதியின்
கைகளும் கண்களும் எப்போதும்
கட்டியே இருக்கின்றன. நீதியின்
பெயரால்,சட்டத்தின் பெயரால் ஏழை
மக்கள்,ஒடுக்கப்பட்ட மக்கள் சிறையில்
அடைப்பதும் இயல்பாகிவிட்டது.
அதிகார வர்க்கத்தின்
செயல்பாட்டாளர்களாக மாற்றிக்கொண்ட
நீதிமன்றம் தோழர் சிவலிங்கத்திற்கு
ஐந்து(ஆயுள்) வாழ்நாள்
தண்டனையும் பத்து ஆண்டுச் சிறைத்
தண்டனையும் வழங்கியுள்ளது. இந்த
நீதிக்கு எதிரான தீர்ப்பை மாண்பமை
கொண்ட நீதிமன்றம் மறுபரிசீலனை
செய்து தோழர் சிவலிங்கத்திற்கு
வழங்கப்பட்ட ஐந்து ஆயுள்
தண்டனையை திருப்ப பெற்றுக்கொள்ள
வேண்டுமென்று உரிமை முழக்கம்
இங்கே முன்வைக்கப்படுகிறது.

2 comments:

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...