Sunday, June 12, 2016

சாலை விபத்துகள் , தமிழகம் முதலிடம் பெருமையா?

தமிழ்ச் சமூக நிலத்தில் எங்கு பார்த்தாலும் மது பாட்டில்கள், தண்ணீர்
பிளாஸ்டிக் உறைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், ஊறுகாய் அல்லது கறி பகோடா
சிதறல்கள், இவைகளே நிரம்பி வழிகின்றன. நீங்கள் எங்கேனும் பயணப்படுகையில்
இவைகளை பார்க்காமல் நகரவே முடியாது. அப்படியான சூழலில் இது உங்களுக்கு
சர்வ சாதாரணமான விஷயமாகத்தான் தெரியும். ஆனால் அதேவேளையில் "மனித உயிர்"
என்பது மதிக்கப்பட வேண்டியது எனும் வாசகத்தை மட்டும் ஏதோவொரு கோணத்தில்
பிடித்துக் கொண்டிருப்பீர்கள் கண்களை மட்டும் மூடிக்கொண்டு,,, இங்கே
மதுவை ஆதரித்துக் கொண்டே மனித உயிர் மதிக்கத்தக்கது என இரட்டை
நாக்குகளோடும் அதையே நாகரீகமென்றும் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிற­து.
அதனாலோ என்னவோ!
குடிபோதை சாலை விபத்துகளை கண்காணாது விட்டுவிடுகிறோம். அதன் விளைவு சாலை
விபத்துகளில் தமிழகத்தை முதலிடத்தில் பிடிக்க வைத்திருக்கிறோம். இனி
பெருமை பட்டுக் கொள்ளுங்கள் மிகவும் இலகுவாக மனித உயிரை பறித்தெடுக்கும்
முதன்மை மாநிலம் எங்கள் தமிழகமென்று,,,
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில்
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து குறித்தான அறிக்கை இவ்வாறு
கூறுகிறது : கடந்த ஆண்டில் (2015) தமிழகத்தில் மட்டும் 69059 சாலை
விபத்துகள் நடத்துள்ளது அதில் 400 பேர் உயிரிழப்பு
இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக 400 பேர் சாலை விபத்தில்
பலியாகின்றனர். தமிழகத்தில் 69059 விபத்துகள் கடந்த ஆண்டில் நாட்டிலேயே
அதிகபட்சமாக தமிழகத்தில் 69059 சாலை விபத்துகள் நேரிட்டுள்ளன. இதன் மூலம்
சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது. மேலும் தமிழகத்தை
பொருத்தமட்டில் பெரும்பாலான சாலை விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம்
ஓட்டுவதில் நிகழ்ந்திருக்கிறது. இதில் அதாவது 50% த்திற்கு மேல்
பாதிக்குப் பாதியான விபத்துகள் மதுபோதையால் நிகழ்ந்திருக்கிறது.
"உயிரிழப்பு" என்கிற எண்ணிக்கையைப் பொறுத்தவரை, உத்தரபிரதேசம்
முதலிடத்தில் உள்ளது. 201‌5-ம் ஆண்டில், உத்‌தரபிரதேசத்தில் சாலை
விபத்துகளில் 17,666 பேர் உயிரிழந்துள்ளனர். பெருநகரங்களைப் பொறுத்தவரை
மும்பையில் அதிகபட்சமாக 23,46‌8 விபத்துகள் நேரிட்டுள்ளன. டெல்லியில்
அதிகபட்சமாக 1,622 பேர் சாலை விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். என
அறிக்கை தெரிவித்திருக்கிறது.­ மேலும் இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக
இதில் எந்த மாற்றமும் இல்லை , ஒவ்வொரு ''ஒரு மணி நேரத்திற்கும் 57
விபத்துக்கள் நடைபெறுகிறது. இதில் 17 பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக
54 சதவிதம் பேர் 15 வயது முதல் 34 வயதுடையவர்களாக இருக்கிறார்கள்.
இந்த அளவிற்கு போரினாலோ, தொற்று நோயாலோ, தீவிரவாதிகள் தாக்குதலாலோ மக்கள்
சாகடிக்கப்படுவதில்லை­ என தெரிவித்திருக்கிறார்­ . பிறகென்ன மதுவால்
தமிழ்ச் சமூகம் சாலை விபத்துகளில் சிக்கி முதலிடம் பெற்றிருப்பதற்காக
அந்த மதுவையே டாஸ்மாக் என்கிற பெயரில் அரசே விற்பதற்காக இனி தமிழக மக்கள்
தாராளமாய் விழா எடுக்கலாம். பொதுவாக மிதமான குடியில் வாகனத்தை
செலுத்துவது தவறில்லை எனவும் இதுவே சகஜமான வாழ்க்கை எனவும், கவுரவத்தை
காக்கிறது எனவும் மக்களின் பொதுபுத்தியாகிப் போயிருக்கிறது. குடியிலென்ன
மிதமான குடி? மொடாக்குடி? என தெரியவில்லை, குடிப்பதே உடலுக்கு தீங்கென
இருக்கின்றபோது அதில் நியாயப்படுத்துதல் ஏனோ மனதை உறுத்தவில்லையா? இதில்
நிதானக் குடிகாரர்களை இச்சமூகம் அங்கீகரிக்கிறது என்பது மிகவும் வேதனையான
விஷயமாக இருக்கிறது. 50% த்திற்கு மேலான இந்த குடிகாரர்களை தவிர்த்து
மற்றவர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் பெரும்பாலும், ஏதோ மன உளைச்சலில்
வாகனம் செலுத்துபவர்களாகவும்­, சாலை விதிகளை மதிக்காதவர்களாகவும்,­வாகனம்
ஓட்டும் போது வெட்டி பந்தா காட்டுபவர்களாகவும், அதிவேகப் பயணப்
பிரியர்களாகவும், வாகனம் ஓட்ட முறையற்ற பயிற்சியற்றோர்களாகவு­ம்,
தூக்கத்தில் வாகனம் செலுத்துபவர்களாகவும்­ இருக்கிறார்கள் .
(இவைகளனைத்தையும் மதுப் பிரியர்கள் ஒரே மூச்சாய் செயல்படுத்துவார்கள்
என்பது வேறு விஷயம்) ஒரு தாய் தனது வயிற்றில் 10 மாதம் சுமந்து பாலூட்டி,
அக்குழந்தையின் நலனுக்காக தன்னுயிரை துட்சமென தூக்கிப்
போட்டுவிட்டுத்தான் ஒரு மனிதனாக்குகிறாள். அந்த பிள்ளை சாலையில் அடிபட்டு
ரத்த வெள்ளத்தோடு உயிருக்குப் போராடுவதை எந்த தாயாலும் தாங்கிக் கொள்ளவே
முடியாது. உண்மையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களாலும், மேற்கண்ட
மற்ற இதர நிலை கொண்டவர்களாலும் ஒருபாவமும் அறியாத அப்பாவி பொது மக்கள்
பெரிதும் பாதிப்படைகிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். "கவனக்
குறைவு" என்பதிலேயே மேற்கண்ட செயல்பாடுகள் பொருந்திப் போகிறது. இக் கவனக்
குறைவில் போக்குவரத்து துறை அதிகாரிகள் லஞ்சம் , ஊழல் போலி வாகன
உத்திரவாதங்கள் இடம் பெறாது, ஏனெனில் அது கவனக் குறைவு இல்லை திட்டமிட்ட
படுகொலையாக கருதப்படுகிறது. தமிழ்ச் சமுகம் தன் வாழ்கையின் வாழ்வுத்
தன்மையின் உன்னதமறிந்து சாலை விபத்துகளை தவிர்க்கத் தேவையான அத்தனை
முயற்சிகளையும் மேற்கொண்டு சமூக வாழ்வியலில் மனித உயிருக்கான மதிப்பை
பேணிக் காக்க வேண்டும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...