Friday, June 10, 2016

எழுவர் விடுதலைக்கான பேரணியில் சில மாற்றங்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எவ்வித தொடர்புமற்று ஆனால் கடந்த 25
ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதியாக தனிமை சிறையில் வாடும் தோழர்
பேரறிவாளன் , சாந்தன் , நளினி உள்ளிட்ட எழுவரின் விடுதலைக்காக நாளை (ஜூன்
11) வேலூரிலிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டையை நோக்கி "வாகனப் பேரணி"
நடக்கவிருந்ததில் சில சட்ட சிக்கல் மற்றும் போக்குவரத்து நெரிசலை
கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை வேலூரிலிருந்து
தொடங்குவதற்குப் பதிலாக சென்னை எழும்பூரில் இருந்து பேரணியாகச் சென்று
முதல்வரிடம் மனு அளிக்கப்பட இருப்பதாக தோழர் பேரறிவாளனின் தாய்
அற்புதம்மாள் தெரிவித்திருக்கிறார்­. பேரணியானது பகல் 1 மணிக்கு
ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து துவங்குகிறது. சமூக விடுதலையை நோக்கி
சென்னையை முற்றுகையிடும் நம் தோழர்கள் 12 மணிக்குள் களத்தில் இருப்பது
நல்லது. இப்பேரணியின் மூலம் நீதியை கொன்று அழித்துக் கொண்டிருக்கும்
ஆதிக்க அதிகார வர்க்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை நாம் தந்துவிட
வேண்டும். முன்னதாகவே இடதுசாரிய இயக்கங்களிடமும், திராவிட
இயக்கங்களிடமும் எழுவர் விடுதலைக்கான பேரணிக்கு ஆதரவு வந்தவண்ணம்
இருக்கிறது. இது நமக்கு ஆறுதலை அளித்திருக்கிறது. நாளையோடு (ஜூன் 11)
தோழர் பேரறிவாளனின் சிறைவாசமானது 25 ஆண்டுகளை நிறைவடைகிறது. அரசியல்
அதிகாரத்தை கைப்பற்றி பதவி ருசி பார்த்தோர்களின் திட்டமிட்ட ராஜீவ்
காந்தி கொலை சதிக்கு காரணமானோர்கள் சுதந்திரமாக பதிவி சுகத்தோடும், பண
பலத்தோடும், அதிகார பலத்தோடும் நீதியை விலைக்கு வாங்கி சுகபோகமாய்
வாழ்கிறார்கள். ஆனால் எந்த குற்றமும் செய்யாமல் போலியாக சித்தரிக்கப்பட்ட
வழக்கில் நம் ஏழு தமிழர்கள் ஆயுள் தண்டனையை அனுபவித்துக்
கொண்டிருக்கிறார்கள் என்பது நீதியின் மீதான அவநம்பிக்கையை தெளிவாக
உணர்த்துகிறது. இந்த விசித்திர நீதித்துறையுலகில் வருமாணத்திற்கு அதிகாக
சொத்து சேர்ப்பது குற்றமில்லை என்பதும் , குமாரசாமிகளின் கணக்குப்
பாடங்களும், இத்தியாதி,,, இத்தியாதி,,, என நீளும் பாசித நீதிகளின்
மத்தியில்தான் நாமும், நம் ஏழு தமிழர்களும் தினந்தினம் செத்துக்
கொண்டிருக்கிறார்கள்.­ அதிகார வர்க்கத்தின் பிடியில் இருக்கும்
பார்ப்பானிய நீதித்துறையை முடிந்தளவிற்கு மீட்டெடுத்தலை இந்த எழுவர்
விடுதலைக்கான பேரணியில் அணிதிரள் மூலம் முட்டி மோதிட வேண்டியது மிக
அவசியமாக இருக்கிறது. ஆகவே தோழமைகள் பெருந்திரளாய் பேரணியில் கலந்து
கொண்டு சென்னையை திணரடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இங்கே பேரணிக்கு அழைப்பு விடுப்போர் ஏன் அதற்கு,,, இதற்கு,,, போராட்டமோ ,
பேரணியோ நடத்தவில்லையென சிலர் விவாதங்களை கிளப்பலாம் , அதனை
பொருட்படுத்தாது நாம் பேரணியை வெற்றியடைய செய்திடல் வேண்டும்.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...