Wednesday, June 08, 2016

விஜய் சேதுபதி எழுவர் விடுதலையை பற்றி பேசக்கூடாதென சொல்வதற்கு நீங்கள் யார்?

என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது இந்த தமிழ்ச் சமூகம். திரைத் துறையில் ஒருவரின் அணுகுமுறை சமூக நலனை நோக்கி வருகின்றபோது அதனை இலாவகமாக ஏற்று அரசியல்படுத்தி ஊக்குவிக்கத் தெரியாமல் இருக்கும் இதே தமிழ்ச் சமூகம்தான் அப்படியானவர்களை கூத்தாடிகள் என்று வசைபாடியும், கேலிசெய்தும், கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி ஒருபடி மேலேபோய் ஏதோ இவர்கள்தான் சமூகத்தை காக்கும் காவற்குடிகளாகவும் இவர்களாலே சமூக விடுதலை பேசப்படுவதாகவும் புளங்காகிதம் கொண்ட சில போலித் தமிழ்தேசிய அசிங்கங்கள் அவ்வாறு சமூக நலனை பற்றி திரைத்துறையில் ஒருவன் பேசினாலே "நீ மூடிட்டு போடா வந்தேறி நாயக்க மயிறு" நாங்க போராடிக்கறோம் என்று வீர வசனங்களை அவிழ்த்து விடுகிறார்கள். உண்மையில் அம்மாதிரியான தமிழ்த்தேசியர்களின் பேச்சை கேட்டு கேட்டு போரடத்துதான் போகிறது. திரைத்துறை என்றில்லை ஒரு சாதாரண பாமரன் ஒருவனின் கருத்துகள் சமூக விடுதலையை நோக்கி பயணிக்கிறதென்றால் அதனை கேட்டு அக்கருத்தின் சிந்தனைகளை உள்வாங்கி முற்போக்குடன் அரசியல் படுத்துவதே ஆகச்சிறந்ததாக அமையும். 10 இளை(ஞி)ஞர்களில் 1 இளை(ஞி)ஞன் முற்போக்குச் சிந்தனை பெற்றிருந்தாலும் அந்த ஒரு நபரை வைத்து பத்து பேரை அரசியல்படுத்த முடியாமல் போனதால்தான் இன்று சாதிய தீவிரவாதத்தாலும் மத தீவிரவாதத்தாலும் பெருங்குடி மக்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் . "ஒரு தாய்க்குத்தான் தெரியும் பிள்ளைக்கு எதை தர வேண்டும்" என வசனங்களை பேசி பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டிய பாலின் விலையை உயர்த்தி டாஸ்மாக் எனும் சாராயக் கடைகள் மூலம் சமூகத்தை சீரழித்து ஆட்சியில் மீண்டும் அமர்ந்திருக்கும் அதிமுக அரசிற்கு 25 ஆண்டு காலம் தன் மகனை பிரிந்து வாழும் உண்மையான ஒரு தாயின் வலியென்ன தெரிந்துவிடவாப் போகிறது. ஆனாலும் ஆட்சியில் அமரவைத்து அழகு பார்க்கிறோமே உங்களின் புத்திக்கு நம்மை ஆளுவது பார்ப்பானியம் என்பது உறைக்கவில்லையா? நடிகர் விஜய் சேதுபதி இவ்வாறு கூறியிருக்கிறார் : " பேரறிவாளன் 25 வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுவும் தனிமைச் சிறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவருடைய அம்மா அற்புதம் அம்மாள் தன்னுடைய மகனை சிறைக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். 'இன்று வரையில் தான் நிரபராதி' என பேரறிவாளன் சொல்லிக் கொண்டு வருகிறார். அவரை விசாரணை செய்த போலீஸ் அதிகாரியும், 'பேரறிவாளன் நிரபராதி' என சொல்லியிருக்கிறார். பிறகு ஏன் அவரை விடுதலை செய்ய இவ்வளவு நாள் தாமதம் என்று தெரியவில்லை. 25 வருடங்கள் தனிமைச் சிறை என்பது மிகவும் கொடுமையானது. எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக வேலூரில் இருந்து கிளம்பும் பேரணியில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். பேரணிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இதிலென்ன தவறு இருக்கிறது? பொய்யாக ஜோடிக்கப்பட்டு கொலைக்கு உடைந்தையாக பேட்டரிகள் விநியோகம் செய்தாரென ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக தனிமை சிறையில் தன் வாழ்நாளை தொலைத்து நிற்கிறார் தோழர் பேரறிவாளன். அவரோடு சேர்த்து குற்றவாளிகளாக சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்கு குரலெழுப்புவது என்பது மனிதாபிமானம் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கின்றபோது அதிலொருவனாய் விஜய் சேதுபதியும் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாது வருகிற 11-ம் தேதி, வேலூரில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி, விடுதலை கோரிக்கைப் பேரணியில் தானும் கலந்துகொள்வதாய் கூறியிருக்கிறார். திரைத் துறையில் இதற்குமுன் இயக்குநர் பா. இரஞ்சித் தனது ஆதரவை பதிவு செய்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டுதலுக்கும் உரியது. இவர்களின் ஆதரவினை வைத்தே அரசியலாக்கி எழுவரின் விடுதலைக்கு ஆதரவான அதிர்வலைகளை உறுவாக்கலாம். ஆனால் இந்த போலித் தமிழ்தேசியர்களோ மீண்டும் மீண்டும் நடிகர்களை கூத்தாடிகளாக வசைபாடி ஏதேதோ டி.என்.ஏ சோதனைகளாம் செய்து விஜய் சேதுபதியை வந்தேறி என்றும், நாயக்கச் சாதியனே! என்றும் தமிழ்த்தேச துரோகி என்றும் வசைபாடுகிறார்கள். அதேவேளையில் தனது சுயசாதி ஓட்டில் ஜெ புகழோடு வென்ற கருணாசுக்கு எதிராக எவ்வித விமர்சனமும் அவர்களிடத்தில் எழுந்ததாக தெரியவில்லை, இதனையே நாம் இந்துத்துவ பார்ப்பானிய தமிழ்த்தேசியம் என்கிறோம். எங்கே? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியான சு சாமியையும் ,ஜெயாவையும் எதிர்க்கச் சொல்லுங்களேன் பார்ப்போம்? அது முடியாது காரணம் தமிழ்த்தேசியத்தை இயக்குவதே பார்ப்பானியமாகத்தான்­ இருக்கிறது. உண்மையில் பேரறிவாளன்,சாந்தன் உள்ளிட்ட எழுவர் விடுதலையாகி எழுவரும் ஒரே பொது மேடையில் பேசினால் அழியப்போவது போலித் தமிழ்த்தேசியமாகத்தான­் இருக்கும். அதனாலோ என்னவோ அந்த எழுவரின் விடுதலைக்கு யார் ஆதரவு தெரிவித்தாலும் உடனே பதற்றமாகி பொங்கி எழுந்து டி என் ஏ சோதனை மூலம் பொங்கல் வைக்கிறது போலித் தமிழ்த்தேசியம். இந்த பொங்கலெல்லாம் பார்ப்பானியத்திற்கான­ படையலாகத்தான் இருக்கிறது. முன்பெல்லாம் "விஜய் சேதுபதி" என்று கூகுள் தேடுபொறியில் சுட்டினால் அந்நடிகரின் படம்,படம் சார்ந்த கதாபாத்திரம்,பாடல்கள­் என தேடிக் கொடுக்கும் கூகுள், ஆனால் இப்போது தேடினால் "விஜய் சேதுபதி சாதி,ஜாதி" என்று தொடர்புடையதில் இடம் பெறுகிறது "இதற்குத்தானே ஆசைபட்டீர்கள் பாலகுமாரர்களே" என்ன கருமம்டா இது! என வெறுப்போடு முகம் சுளிக்க வைக்கிறது உங்களின் பித்தாலட்ட தமிழ்த்தேசியம்.

2 comments:

  1. அருமையான அலசல்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...