Sunday, November 30, 2014

"நிலவும் நிழலும்"

வானத்து முழு நிலவின் உடல் முழுதும் வழியும் சீழுடனே கலந்த குருதி வாடை! பாவம் படுத்திருக்கிறாள் கடைசி காலத்தை எண்ணியபடியே! இதயம் எழுப்பிய அதிர்வுகளைத் தாங்கிக்கொண்டே அருகே சென்றேன்! அழுகையும்,அலறலும் ஒருசேர! படுக்கையில் கிடந்த நிலவின் வலிமுனுகலை கேட்க இருகாதுகள் போதவில்லை! அவசரமாதலால் அவசியமான மருந்தை எடுத்துத் தடவ எத்தணிக்க! அருகிலேயே அதட்டியது அக்குரல்! அடேய்!! நிறுத்து அவளைத்தொடாதே என்றொரு குரல்! குரலே காட்டிவிட்டது அதன் திமிறை! திரும்பி பார்க்கையில்!...

பணப்பேயா பறத்தை!

எத்தனை மொழிகள் அத்தனையும் நானறிவேன்! என் மொழி போலிச் சினுகல் மட்டுமே! நவநாகரீக டாட்டூக்களை கண்டதும் கோபமெனுக்கு! எவனோ! எப்போதோ! வைத்த சிகரெட் சூடுகளை விடவா அழகானது அவையென்று! வீசிவிட்ட பணம் தெருவீதிக்கு வந்துவிட்டாலும்! தேவாங்கு பார்வையுடனே பார்ப்பார்கள்! இது தாசியின் பணமென கல்லாப்பெட்டியும் கண்ணடிக்கும்! ஆடைகள் வாங்கவே ஆடைகளை களைந்தேன்! அவசர அவசரமாய் இறங்கிய அவனுறுப்பு அனுபவித்ததில் அத்துணை மனைவியரின் வலைகளையும் நானறிவேன்! பணப்பேயா பறத்தை! பட்டிமன்றம்...

சில கல்லறைகள்

வெட்கத்தில் பனிதுளிகள் பூக்களின் அரும்பிதழ் -முத்தம் ___ கல்லறைக்கு வர்ணம் பெயருக்கு பின்னால் -பிணங்கள் ___ ஒரே அலங்கோல காட்சி அழுகையில் அரசு -மருத்துவமனை ___ கருவிழிதனை காதலுக்கு கொடுத்தாயோ இப்படி சிவந்துள்ளது -முகம் ___ எத்தனை வசைச்சொற்கள் பிறந்தது குற்றமா? -பெண் ___ அடுப்படியில் பூனை துள்ளி குதித்தது -டாஸ்மாக் ___ வாடாத முகம் வட்டமிடும் கழுகுகள் நிரந்தர இடம் ஊரெல்லையில் -கல்லறை ___ காதலும் அறிவியலே வாழ்க்கையில் எத்தனை -கண்டுபிடிப்பு ___ ஒரு குறையுமில்லை...

Friday, November 28, 2014

ஹைக்கூ "பாலைவன நிலவு"

இறுதி முடிவு முதல் சந்தித்த இடத்திலே தொடங்கிற்று! இனி சுமப்பது நினைவுகளைத்தானோ! _____ தாகம் தணிக்காத இரவுகள் நிலவின் மீதான -கோபம் _____ கைகளை கழுவிய உறவுகள் பறவைகளை நம்பியே -தனிமரம் _____ வெட்கத்தில் செங்காந்தள் அழகை ரசித்தது கார்த்திகை மாதம் _____ அஞ்சலி செலுத்தும் தேனீக்கள் வரிசையாக வாகனம் மோதிய வண்ணத்துப்பூச்சிகள் _____ என் மீதான இரக்கத்தை கைவிடு கைநழுவியபின் காதலை நினைத்தே வாழ்கிறேன்! _____ உள்ளம் உறங்கவில்லை ஊரெல்லையில் ஓலம் நாய்கள் ஜாக்கிரதை...

ஹைக்கூ "மூன்று கோடுகள்"

"மூன்று கோடுகள்" நடிக்க தெரியாத நாணல் வலைந்து கொடுக்கும் -வாழ்வு _____ புழுதியுடனே! பறந்த மண் தேடியும் கிட்டாத விளைநிலம் _____ பனிதுளிகளே இரவோடு ஆடுங்கள் கண்திறந்தான் கதிரவன் _____ விடிந்ததும் கானவில்லை கணவன் , மனைவியரை மூன்றாம் கோட்டில் தனியே -குழந்தை _____ எல்லாம் கண்துடைப்பு நாடகமோ! சாலையோர -சந்திப்புகள் ______ வீதியெங்கும் ஊமையான மொழி இனி எட்டாக்கனியா நம்தமிழ் _____ அதோ! கடைசிக் கல்லறையில் காதல் பிழைத்துக் கொண்டது -சாதிமதம் __...

Thursday, November 27, 2014

ஹைக்கூ "நேற்றைய காற்று"

"நேற்றைய காற்று" விடியும் பூமி எழமுடியாத அதிகாலை -உறக்கம் _______ வீதியெங்கும் அகல்விளக்கு காலியான கூடை தீராத வறுமை _______ தென்றலில் தலைகோதும் காற்று காதல் இனி வசப்பட்டுவிடும் _______ நிராசைகளை நீரில் கழுவியது நிலா இனி எல்லா இரவுகளுக்கும் பரிசாகும் வெள்ளி ______ பனிகளை பாருங்கள் படரும் கொடிகள் ஒட்டியானமாகும் ______ அவளின் வருகையை உணரவைத்த காற்றிற்கு நன்றி! _______ மேடை முழுதும் அலங்கார விளக்குகள் காற்றிற்கு வேலையில்லை ஏமாந்து போன முகம் _______ நாட்டிற்கும்...

Thursday, November 20, 2014

ஈழத்தலைவரின் படைச்சிறப்பு

ஈழத்தின் இணையில்லாச் சொந்தம் மேதகு தலைவர் பிரபாகரனின் 26 Nov பிறந்தநாளை தமிழகம் இதுவரைக் கண்டிராத முறையில் கொண்டாடப்பட வேண்டும். அதன் மூலம் ஈழத்துரோகிகளை இணங்கான வேண்டும். இதோ! மேதகு தலைவர் அவர்களின் மரபுவழிப் படைப்பிரிவுகளைத் தான் இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விடுதலைப்புலிகளின் மரபுவழி இராணுவக் கட்டமைப்புக்கள் "தரைப்படைகள்" * இம்ரான் பாண்டியன் படையணி. * ஜெயந்தன் படையணி. * சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி. * கிட்டு பிரங்கிப் படையணி. *...

Monday, November 17, 2014

தண்ணீர் சிற்பங்கள்!

தண்ணீர் சிற்பங்கள் நெடுஞ்சாலைக் கழுவி நெடுந்தூரப் பயணம் ஏதோ! தடுக்கிறதே! ஓ! அணைக்கட்டா! குழந்தை வயிற்றில் உதைக்கும் உணர்வினை போல் நானுனை உணர்ந்தேன்! எங்கே? நம் விளைநிலச் சொந்தங்கள் ஒளித்து வைத்து விளையாடாதேயடி கள்ளி! திறந்து காட்டு தீரட்டும் விவசாயப்பசி அடடே! கண்ணத்தில் முத்தமிடும் முகம் யாருடையது? ஓ? மீன்குஞ்சுகளா! பாசத்தில் பாசாங்கில்லா பாசப்பிறவிகள் நீங்கள்தானே! துள்ளி குதிப்பதன் காரணமென்னவோ! வானம்பாடி வாசலை நோக்கி வருவதைக் கண்டீரோ! எங்கே? நம்...

Wednesday, November 05, 2014

ஹைக்கூ "இருகயிறு"

*தூரத்தில் நிலவொளி மங்கிற்று திட்டியபடியே மேகத்தை கடக்கிறது காதலிரவுகள்!* __________ *பயத்தில் பதுங்கிய கிராமம் எச்சரிக்கையா? ஊரெல்லையில் -நாய்கள் ஓலம்* __________ *பசி வயிற்றுக்கு ஏது நிம்மதி! பானையை திறந்தால் நீருக்கு பதிலாக கண்ணீரே நிரம்புகிறது!* __________ *வீசும் புயலுக்கு இரையான குடிசைகள் ஆங்காங்கே காத்திருக்கும் ஆறடி நிலங்கள்* __________ *விரக்தியில் ஏழை தற்கொலைக்கு தயாராகிறது -பசும்பால்* __________ *வெற்றிடத்து சமையல் காற்றும் காசானது உறையில்...

Monday, November 03, 2014

சிறுமிகளைச் சீரழிக்காதீர்கள்!

சமீப காலங்களில் இந்திய தேசியத்தில்அதிகப்படியானவண்முறைகளுக்கு உட்படுத்தப்படும்சிறுவர்சிறுமிகளை இச்சமூகம்கண்டுகொள்ளவே இல்லை ஆங்காங்கே ஆசிரியர்களின்அத்துமீறல் "குடி"மகன்களின்வெறியாட்டமென சிறுவர்சிறுமிகள்அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள்அடிக்கடி இச்சமூகம்அழிவை நோக்கியே பயணிக்கிறது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளப்படுகிறதுநம் பண்பாட்டு நெறியடிப்படையில்"மாதா,பிதா,குரு,தெய்வம்"எனச்சொல்வதுண்டுஅம்மை அப்பனுக்கு அடுத்தப்படியாக ஆசானும்அதன் பிறகே தெய்வம் எனபோதிக்கப்படுகிறது...

Sunday, November 02, 2014

ஆற்று மணலின் வேண்டுகோள்!

நதிகளைத் தேடி கடல் அலையும் காலமிது கானாமல் போனதேன்? "விளைநிலங்கள்" செய்நன்றி சேற்றுப்புழுதியிலே சிக்கித் தவிப்பதுவோ! புதையுண்டு கிடக்கிறது நம் சீவ ரகசியம்! பிரித்தாளும் சூழ்ச்சியில் பிரியாமல் கைகோர்க்கும் கயவர்கள் இவர்கள் தானோ! உயரத்திலேற்றி ஊஞ்சலாடிய மணலோ! உருகுலைந்து கண்ணீரை அத்தார்ச்சாலையில் தெளித்தபடியே! ஒப்பாரி வைக்கிறது ஆற்றுமணல்! காதும் செவிடா? கண்ணும் குருடா? கடைசியாக கையெடுத்து வேண்டுகோள் வைக்கிறது மணல்! கொஞ்சம் திரும்பியாவது பாருங்கள்!...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...