Showing posts with label வன்கொடுமை. Show all posts
Showing posts with label வன்கொடுமை. Show all posts

Thursday, March 14, 2019

பொள்ளாச்சியில் நிகழ்த்தப்பட்ட பெண்கள் மீதான வன்கொடுமை குறித்து ...






சமூக வலைத்தளங்களில் இரண்டு நபர்களை ஒரு நான்கு,  ஐந்து பேர் சூழ்ந்து கொண்டு தாக்குவதும் குடும்பப் பெண்களை இப்படி சீரழிக்கிறாயடா பாவி என்று கல்லை எடுத்து அவர்கள் காலை உடைப்பது போன்ற ஒரு தாக்குதல் காணொளிக் காட்சியை பார்த்து இருப்பீர்கள்...

நாமெல்லாம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளியை காவல்துறை தாக்குகிறது என்று புரிந்து வைத்திருந்தோம்...

ஆனால் அந்த குற்றவாளிகளை தாக்குவது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் என்பதை காவல்துறை மறைத்துவிட்டார்கள்...

ஆம் இப்பொழுது மாட்டியுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவன் தனது நெருங்கிய நண்பனின் தங்கையை வஞ்சகமாக பேசி வரவழைத்து  பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது மட்டுமல்லாமல்
அதை அப்படியே படமாக பிடித்திருக்கிறான்.

சிறிது காலம் கழித்து எதர்ச்சையாக திருநாவுக்கரசின் போன் ஏதோ ஒரு சூழலில்  அவனின் நண்பர் கையில் கிடைக்கிறது, அவர் இதில் உள்ள வீடியோக்களை பார்க்கும்போது இது நமது நண்பனின் தங்கை ஆயிற்றே என்று அந்த வீடியோவை தனது போன் போனிற்க்கு மாற்றுகிறார்.

அதை தன் நண்பனிடம் அந்த வீடியோவை காட்டி தனது தங்கையிடம் விசாரிக்கிறார்..! அழுது கொண்டே நடந்த சம்பவங்களை சொல்லுகிறார் அந்தப் பெண்,

நன்பனின்  தங்கை என்றும் பாராமல் சீரளித்த திருநாவுக்கரசுவை தூக்கிக்கொண்டு வந்து அடித்து துவைத்து எடுக்கிறார்கள்...
(இந்த வீடியோதான் வளை தளங்களில் வருகிறது)

இந்த செய்தி பஞ்சாயத்தாக அந்தப் பகுதியைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரிடம் செல்கிறது,  அவரும் நண்பனின் தங்கையை இப்படி செய்கிறாயே என்று கண்டித்து தற்காலிகமாக சமரசம் செய்கிறார்.

மனம் ஆறாத அந்தப் பெண்ணின் அண்ணன் இவனை விட கூடாது என்று கூறி அந்த முக்கிய பிரமுகரிடம் மீன்டும் செல்கிறார்... அவரும் வேறு வழியில்லாமல் பேசாமல் நீ காவல்துறையில் புகாராக கொடு என்று வழிகாட்டுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனும் திருநாவுக்கரசு மற்றும் திருநாவுக்கரசு நண்பர்கள் போன்களை காவல்துறையிடம் ஒப்படைத்து புகாராக கொடுக்கிறார்.

அந்த மொபைல் போன்களை ஆராய்ந்த காவல்துறையினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது ஏராளமான வீடியோக்கள், கற்பழிப்பு காட்சிகள்,  விதவிதமான பெண்கள் என அந்த மாவட்ட காவல் துறையே உறைந்து போய் நின்றது.

அதிர்ந்து போன காவல்துறை இந்த பிரச்சினையை எப்படி தொடங்குவது இதில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தனை பேருமே முக்கிய அரசியல் கட்சியைச்  சேர்ந்த பொறுப்பாளர்கள்...

கிளை நிர்வாகிகளில்  இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் வரை, வார்டு மெம்பரிலிருந்து நகர மன்ற தலைவர்கள் வரை மிகப்பெரிய செல்வவான்களின் கைகள் இதில்  இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில்...

மனசாட்சியுள்ள சில காவல்துறை நபர்கள் இது மிக மோசமான இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான சம்பவங்கள் உள்ளடக்கிய பிரச்சனை இது...

நிச்சயமாக இதை இவர்கள் விசாரித்து உண்மையை கொண்டு வர மாட்டார்கள்..! வேண்டுமானால் இதில் உள்ள படங்களை காட்டி தொடர்புடைய நபர்களிடமும், பாதிக்கப்பட்ட பெண்களிடமும் பணம் பிடுங்க மட்டுமே பயன்படுத்துவார்கள் என்கின்ற காரணத்தினால் இந்த செய்தியை எப்படியாவது வெளியே கொண்டுவர வேண்டும் என்கின்ற அக்கறையோடு சில காவல்துறையினரே இந்த செய்தியை வெளியே கசிய விட்டார்கள்.

எந்த அரசியல் முக்கிய நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை காவல் நிலையத்தில் புகார் கொடு என்று அனுப்பி வைத்தாரோ அவரின் மகனும் இதில் ஒரு முக்கிய குற்றவாளியாக மாறுவார் என்று பாவம் அவருக்கு தெரியாது.

இந்த பாலியல் வண்கொடுமையில் தொடர்புடையவர்கள் அனைவருமே நெறுங்கிய நன்பர்கள் வட்டத்திலும்
குடும்பரீதியாகவும் நெறுக்கமுள்ளவர்கள்தான்..!

இதில் கல்லூரி மாணவிகள் மட்டும் அல்ல குடும்பப் பெண்கள் 40 வயதைத் தாண்டிய பெண்கள் என்று பலரும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்,

இது இன்று நேற்று அல்ல ஏறக்குறைய ஏழு அல்லது எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பிரச்சனையாகும்.

கல்லூரிகளிலும், முகநூலிலும் நைச்சியமாகப் பேசி, பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை உடலுறவுக்கு உட்படுத்தி, அதை வீடியோவாக எடுத்து அந்தப் பெண்ணுக்கே அதை காட்டி,  மிரட்டி உன் நண்பர்களையும் அறிமுகப்படுத்து, இல்லை என்றால் இதை நான் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உன் மானத்தை கெடுத்து விடுவேன் என்று மிரட்டி பனிய வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பண்ணைகளும், மிராசுகளும், ஜமீன்களும் அவர்களின் வாரிசுகளான மைனர்கள் என்று அழைக்கப்படுபவர்களும் ஆண்டாண்டு காலமாக பெண்களை தூக்கிக் கொண்டு போய் கேள்வி கேட்பாரில்லாமல் தனது பாலியல் இச்சைக்கு பயண் படுத்திக் கொள்வார்கள், இதை நாம் வரலாறுநெடுகபார்த்ததுதான்

வளர்ச்சியும், தொலைத்தொடர்பு வசதியும் பெருகிய இந்த காலத்தில் அன்றைய மைனர் வாழ்க்கை இன்று வேறு ஒரு பரிணாமத்தில் பயணிக்கிறது.

இன்று ஒருபடி மேலே போய் மிகப்பெரிய செல்வந்தர்கள் என்று சொல்பவர்கள் கூட தன் பாலியல் இச்சைக்கு பெண்களை வன்புணர்ந்தாலும், அதை படமாக எடுத்து பிற நண்பர்களிடம் காட்டி ரசிப்பதும்,  தன் குலப் பெருமை பேசி எவ்வளவுப் பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறோமோ அந்த அளவிற்கு என் பராக்கிரமத்தைப் பார் என்கின்ற வக்கிர புத்தியும் மேட்டுக்குடி மைனர்களிடம் பெருகி இருப்பதையே இந்த பொள்ளாச்சி சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

பெரியார் சொல்வது போல் ஒருவன் எவ்வளவு படித்து இருக்கிறானோ அந்த அளவிற்கு அவன் அயோக்கியனாக இருக்கின்றான் என்பார், அதுமட்டுமல்லாமல் படித்தவன், பணக்காரன் பதவிகாரன் இவர்கள் மூவரும் சமூகத்திற்கு கேடானவர்கள் என்பார், இதைத்தான் இந்த பொள்ளாச்சி சம்பவம் நமக்கு உறுதிப்படுத்துகிறது...

Sunday, January 06, 2019

குஜராத் மாடல் இதுதானா மோடி அவர்களே ?





குஜராத்தில் தலித் ஒருவரை போலீசார் காலணிகளை நாவால் சுத்தம் செய்ய வைத்த கொடூரச் சம்பவம் நடைபெற்று உள்ளது.

#குஜராத்
ஜனவரி 03, 2018, 04:56 PM

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அம்ராய்வாடியை சேர்ந்த 40-வயது தலித் ஹர்ஷத் ஜாதவ் காவல் நிலையத்தில் கொடூரமான முறையில் டிசம்பர் மாதம் 29-ம் தேதி நடத்தப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் 15 பேரை காலணியை (ஷூவை) நாவால் சுத்தம் செய்ய ஹர்ஷத் ஜாதவ் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹர்ஷத் ஜாதவ் சாய்பாபா நகரில் டிவி பழுதுபார்க்கும் பணியை செய்து வருபவர்.

 டிசம்பர் 29-ம் தேதி அப்பகுதியில் இருக்கும் சாய்பாபா கோவிலில் கூட்டம் மற்றும் பதட்டமான நிலை இருந்து உள்ளது. என்ன காரணம் என தெரிந்துக் கொள்வதற்காக ஹர்ஷத் ஜாதவ் சென்று உள்ளார். அங்கு நடக்கும் விஷயம் என்ன என்று கேள்வியை எழுப்பி உள்ளார், ஆனால் அவர் கேள்வி எழுப்பிய நபர் கான்ஸ்டபிள் என்பது பின்னர்தான் தெரியவந்து உள்ளது.

போலீசார் வினோத்பாய் பாபுபாய் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். கான்ஸ்டபிள் எந்தஒரு காரணமும் இன்றி ஹர்ஷ்த் ஜாவதை திட்டிஉள்ளார், அடித்து உள்ளார். போலீஸ் அடியை தடுக்க முயன்ற ஹர்ஷ்த் ஜாதவின் கை விரல்களில் அடி விழுந்தது. அவருடைய மனைவி மற்றும் தாயார் ஓடி சென்று காப்பாற்ற முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அவர்கள் தடுக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அவர்கள் மூவரையும் போலீஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றது. அங்கு அவருடைய ஜாதியை கேட்ட போலீசார், தங்கள் 15 பேருடைய காலணியையும் நாவால் சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

வினோத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் கட்டயப்படுத்தப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது. காவல் நிலையத்தில் மிகவும் மோசமான நிலையில் அவர் நடத்தப்பட்டு உள்ளார், இதனை வெளியே சொல்லக்கூடாது எனவும் அவரை போலீஸ் மிரட்டிஉள்ளது. இப்போது இவ்விவகாரம் வெளியே தெரியவந்து சர்ச்சையாகி உள்ளது. பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கையில் எழும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது எனவும் தெரியவந்து உள்ளது.
--

இதைத்தான் குஜராத் மாடலாக இந்தியாவை உறுவாக்குவோம் என்றாரா மோடி....

Wednesday, February 24, 2016

கொத்தடிமைகளின் அழுகை செவியை மூடிக்கொண்ட இந்தியம்

சுதந்திர இந்தியாவில் தலித்திய பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல்
பழங்குடியினர்க்காக (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) 1989 இல்
இயற்றப்பட்டது. அதே சுதந்திர இந்தியாவில் 1976ல் கொத்தடிமை முறை ஒழிப்பு
சட்டம் இயற்றப்பட்டது . இவ்விரண்டு சட்டங்களையும் இங்கே குறிப்பிட
வேண்டிய அவசியமிருக்கிறது. பெரும்பாலும் இந்திய சமூகத்தில்
பொருளாதாரமற்று, ஏழை உழைப்பாளர் வர்க்கங்களாக தினக்கூலி தொழிலாளர்களாக
தங்கள் உடலுழைப்பை முதலாளியர்களுக்கு கொடுத்துவிட்டு முதலாளியர்களால்
பிரயோகிக்கப்படும் எல்லாவித கொடுமைகளையும் அனுபவிக்கும்
பெரும்பான்மையானோர் தலித் மற்றும் பழங்குடியின மக்களாக இருக்கிறார்கள் .
அதாவது பட்டியலின மக்கள். உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்காக
உறுவாக்கப்பட்ட இவ்விறு சட்டங்களும் மத்திய,மாநில மற்றும் நீதித்துறையால்
முறையாக நிறைவேற்றப்படுகிறதா?­ என்றால் முற்றிலுமாக சட்ட புறக்கணிப்புகளே
இங்கே நடைமுறையில் இருக்கிறது என்பது உண்மையாக இருக்கிறது. இதற்கிடையே
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக வன்கொடுமையில்
ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் புதிய சட்டம்
ஜனவரி.26 .2016 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. வன்கொடுமையால்
பாதிக்கப்பட்ட தலித்தின மற்றும் பிற்படுத்தப்பட்டோருக­்கான வழக்குகளை
விரைவுபடுத்துவதற்காக­ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும், பிரத்யேக அரசு
வழக்குரைஞர்களை நியமிக்கவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எஸ்.சி. / எஸ்.டி. மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்
திருத்த மசோதா (2015) நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு.
அந்தச் சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 2015
டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார்.
இதுகுறித்து மத்திய அரசிதழில் கடந்த 1-ஆம் தேதி அறிவிப்பு வெளியான
நிலையில் இன்னமும் முழுமையாக நீதி நிலைநாட்டப்படவில்லை என்பதே
மிகப்பெரும் அநீதியாக இருக்கின்றது. வன்கொடுமை சட்டம் அலைகழிக்கப்படுவது
போலவே இந்தியத்தில் கொத்தடிமை சட்டமும் மிக மோசமான நிலையில் மந்தமாகவும்
அல்லது செயல்படாமலும் இருக்கிறது என்பதற்கான சாட்சியாக மும்பை சம்பவம்
நமக்கு உணர்த்துகிறது. தலித் அருந்ததியர் சமுகத்தை சேர்ந்த மாரிமுத்து
என்கிற 15 வயது சிறுவனை மும்பை பகுதியில் கடந்த 7 மாதமாக மிட்டாய்
கம்பெனியில் கொத்தடிமையாக வேலைக்கு அமர்த்தி அச்சிறுவனை அடிமையாக
வைத்திருந்தது மட்டுமல்லாது , அந்த சிறுவனை மிட்டாய் கம்பெனி உரிமையாளர்
ரஞ்சித் தேவர் என்பவர் கடுமையாக அடித்து சித்ரவதை செய்து உடலில்
கொதிக்கும் எண்ணையை எடுத்து ஊற்றி உள்ளார்.தற்போது இந்த சிறுவன்
சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறான். என்கிற
சம்பவம் உண்மையில் சக மனிதர்களுக்கு வலிக்க வில்லையா? அல்லது வலியானது
பழகிப்போனாதால் அப்படியே கடந்துபோக பழகிக்கொண்டார்களா? எனும் கேள்வி
நம்மிடையே எழுகிறது.
மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி வன்கொடுமை தடுப்புச்
சட்டத்திலும், கொத்தடிமைகள் தடுப்புச் சட்டத்திலும் கைது
செய்யப்படவேண்டியவர் என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும் .
இம்மாதிரியான பல்வேறு சம்பவங்கள் இந்திய நாட்டில் நிகழ்ந்துக்கொண்டுதான­்
இருக்கிறது. இதனால் பாதுகாப்பற்ற நீதித்துறைமீது நம்பிக்கையற்ற
கொத்தடிமைகளின் நிலமை மிகமோசமாக இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு
ஆஸ்திரேலியா அமைப்பான வாக்ப்ரீடீ பவுண்டேஷன் நவீன அடிமை முறை குறித்து
162 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. இந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 3
கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளனர். எனவும் அவர்களில் 76 சதவீதம் ஆசியாவை
சேர்ந்தவர்கள். 3.78 சதவீதம் அமெரிக்கர்கள் எனவும் மிகமோசமான நவீன அடிமை
முறை பட்டியலில் "இந்தியா" 4வது இடத்தில் உள்ளது எனவும் இந்தியாவில்
மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைப்பதற்காக
கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும்
இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத­ு. இது உலக கொத்தடிமைகளில் 50
சதவீதம் ஆகும். எனவும் அதிர்ச்சி ஆய்வறிக்கையினை வெளியிட்டிருந்தது.
ஒருபுறம் சாதிய ரீதியான அடிமையையும், இன்னொருபுறம் பொருளாதார ரீதியிலான
அடிமையையும் அனுபவிக்கும் சாமானியர்களான கொத்தடிமைகளின் நிலைமை போகப்போக
மிகமோசமான சூழலுக்கு இட்டுச் செல்லும் என அச்சப்பட வைக்கிறது இன்றைய
கொத்தடிமைகளின் வாழ்வு நடவடிக்கைகள்.
ஒவ்வொரு சமூகத்திலும் நிலவி வருகிற கருத்துக்கள்
ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே என்று மார்க்ஸ் குறிப்பிடுகின்றார் .
அதாவது முதலாளித்துவத்தின் கருத்துக்களே இங்கே ஏற்கப்படுகிறது அது
சாமானியனுக்கு எதிராக,,, இந்திய அரசு இதற்கான தீர்வழிகளை கொண்டுவந்து
சட்டங்களை கடுமையாக்குவது மட்டுமில்லாது அச்சட்டங்களை உடனடியாக
செயல்படுத்தவும் முனைந்திட வேண்டும்.

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...