Showing posts with label புனைவுகள். Show all posts
Showing posts with label புனைவுகள். Show all posts

Sunday, August 06, 2023

வார்த்தைகளை துடைத்தெறிதல்


 

நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ... 

குழந்தையானது

சிந்தாமல்  சிதறாமல்  உணவருந்தாது நாமறிவோம்... 

குழந்தையின் பிஞ்சு உதடுகளில் ஒட்டியிருக்கும் கடைசி பருக்கையினை தன் முந்தானையால் துடைத்து விடும் தாயின் சுத்தம் தான் நம் சிந்திய வார்த்தைகளின் துடைத்தெறிதல் ... 


எல்லாம் கடந்த பின்னாலும் ஒரு பின்னிரவில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஓர் குரல் ... 


அது நீ விட்டுச்சென்றதும் நான் தேடாமல் விட்டதுமான வார்த்தைகளின் குரலாக கூட இருக்கலாம் ... 


எது எப்படியோ.... 


பசியாறிய குழந்தை தாய்மடி தஞ்சம் புகுவது போல ... உன் மடியில் நானும் என் மடியில் நீயும் 

மிச்சமிருக்கும்                                                    பேசிய வார்த்தைகளினூடே 

தஞ்சமாகிறோம் ....

Sunday, April 28, 2019

பேரன்பு பெருங்காதல் ...




நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக துளிர்விட செய்கிறவள்(ன்)
நீ ...

சொட்டும் நீரிதழ் ததும்பும்
முத்த ஏக்கங்களை குழைத்து
என் மேல் பூசும் வாஞ்சையுடன்
உதித்துவிடும் " இச் "
சப்தங்களின் ஊடே
நீரிதழை ஆழ் மனதிற்குள் ஒளித்து வைக்கிறாய் ...

நீ என்னை நேசிப்பதும்
நானுன்னை நேசிப்பதும் தயக்கமின்றி இலகுவாக அடையாளங் கண்டு நயத்தோடு நெளியும் அழகியலின் ஊற்றாக கட்டிப்பிடித்து
கொண்டும் உரசிக்கொண்டும்
உள்ளம் நனைய ஒரு யுகம் கடந்து நீளும் கடற்கரையோர நுரை ததும்பலில் குழைத்து செதுக்கி காதலென்கிறோம் ...

வாழ்வு புசிக்கும் நரைமுடி கண்டு தளர்ந்த நிலையில்
முதிர் பருவ தவிப்புகள்
நமக்கில்லை ...

கடந்து வந்த பாதைகளின் நினைவுகளினூடே
என் கரம் பற்றி நீயும்
உன் கரம் பற்றி நானும்
மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்கிறோம் ...

எப்பொழும் அசாத்தியமானது
பேரன்பென பிதற்றுபவர்களை
ஆகாயத்தை காட்டி
மிதந்து வரும் மேகங்களில் நம் முகங்களை காட்சி படுத்துகிறோம் ...

வாழ்தலும் பேரன்பின்பால்
என விளங்கிக்கொள்ளும்
எல்லா திசைகளிலும்
நாம் உயிர்வாழ்கிறோம்
என் பேரன்பு கொண்ட ராட்சஷியே ...

Saturday, March 09, 2019

ஆழிசை




ஆகையால் ...

கடற்கரை  காற்றில் விட்டுச்சென்ற
உன் அன்பை தேடி சுடும் மணலில்
என் காயங்களை மறந்து
ஆற்றும் மருந்தாய்
நின் கால்தடம் என்னில் பூசி
அழையா விருந்தில்
அரிதாக முளைக்கும் அதே ‌... கண்ணசைவுகளினூடே
பிரம்படி பட்டு நெளியும்
புழுபோல  சுருண்டு
எங்கோ யாருமற்ற கடற்கரையில் கண்ணயர்ந்து நின் நினைவுகளை செதுக்கிக் கொண்டிருக்கிறேன் ...

இதோ ... இந்த ... ஆழிசை ...
அவ்வப்போது என் சுயத்தை மீட்கிறது
நீ ... விட்டுச்சென்ற எச்சங்களை ...
எனக்குள் தத்தெடுத்துக்கொண்டே ...

Thursday, April 23, 2015

கொசு வத்திச் சுருளை எப்படி பிரித்தெடுப்பது?

அனேகமாக என்ன மேற்படிப்பு படிக்கலாம், மேற்படி என்ன பாடத்தை
பத்தாம்வகுப்பு முடித்தவர்கள் எடுக்கலாம் இதற்கிடையே ஐ ஏ எஸ், டி என்
பிஎஸ்ஸி , கேட், வாட்டு, நோட்டு என நீண்ட பட்டியியலில் "கொசுவத்திச்
சுருளை உடைக்காமல் பிரித்தெடுப்பது எப்படி?"யென்று கோடை சிறப்பு பயிற்சி
வகுப்புகளை ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள் அந்தளவிற்கு மனுஷனை
பாடாபடுத்துகிறது இந்த "கொசு" என்னாமா கடிக்கிறது, வலிதாங்க முடியாமல்
கத்திய கதறல் சத்தங்கூட கேட்காமல் பக்கத்தில் வேறு மனைவி தானே
புலம்புகிளாள் "என்னங்க நாளைக்கு கல்யாண் ஜுல்லரி புதுஸா தெறக்கலாங்களால்
கண்டிப்பா போறோம்" ன்னு அவளை புலம்ப வைத்து தூக்கம் தொலைய வைத்த கொசுவை
என்னதான் செய்வது! "நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலடா
மருந்தடிச்சி கொல்லுங்கடா" என்பது போல இந்த கல்யாண் ஜூல்லரி
விளம்பரத்தையும் தலைவிதியேன்னு பார்க்கவும் வைத்துவிடுகிறார்கள்
கொசுப்பாவிகள்.இவற்றுக்கெல்லாம் இடையில் வீட்டில்வேறு ராமாயணம் ஓடுகிறது
,பாட்டி இல்லாத குறையை பையன் போக்குகிறான் , காதல்தூதாம் காலை விடிவதுகூட
தெரியாத காதல் கைபேசி கிசுகிசு, தெளிவா கேட்டது ஒன்று படத்திற்கு
போகிறார்களாகளாம் படத்த்தலைப்பு "ஓடிப்போவது எப்படி" இதற்கு ஏன் இப்படி
விடிய விடிய பேசுகிறார்களென்று தெரியவில்லை,அவர்களுக­்கு முன்பே
"தடுப்பது எப்படி" (காதலையும் சேர்த்து பிரிப்பதையும் கலந்து) எனும்
படத்தை எனக்கு காட்டிவிட்டான் காதல் பட நாயகன் என்பதை எப்படி
புரியவைப்பதென்று மண்டையில் ஒரே ஜிந்தனை ஓட்டம்.சரி மின்விசிரியை போட்டு
கொஞ்ச கொசுவையும் விரட்டிவிடலாமென்று பார்த்தால் அந்த மின்விசிரியிடமே
மோகலீலையில் கொஞ்சிகொஞ்சி பேசுகிறது கொசு, காரணம் கரண்ட் இல்லை என்பதே
,,,
இந்த அரசும் அரசியல்வாதிகளும் அடுத்தவர் ரத்தத்தை உறுஞ்சுவதெப்படி என்று
நமக்கு முன்னரே கோடை சிறப்பு பயிற்சி வகுப்பில் பாடம் பெற்றார்கள்
போலும், சரி கொசுமருந்தாவது அடித்தார்களா என்று பார்த்தால் அதிலும்
வெறும் புகை மட்டுமே, கொசுமருந்தை ஊழலுக்கு விற்று
விட்டார்களே,,எல்லாவற­்றையும் விட்டுத்தள்ளி விளம்பரத்தில் வரும்
தொழில்நுட்ப கொசுவிரட்டிகளை வாங்கி உபயோகித்தால் "கரடியே காறி துப்பியது"
போல தொழில்நுட்பத்தை காறி துப்பிவிட்டு சந்தோஷமாய் திரிகிறது கொசு, அட
போங்கடா நீங்களும் உங்க தொழில்நுட்பமும் என்று புலம்பி புதிய உலகை
தேடிப்போகிறேனென்று தெருமுக்கு டாஸ்மாக்கில் சாராயத்தை வாங்கி குடித்து
கடிக்கும் கொசு வலியில் நிவாரணம் தேடினால் அடிச்சது போலிசரக்காக
இருக்கிறது போனது பணம் வந்தது உடலுக்கு நோய். குடல் வெந்து குப்புர
படுத்தாலும் காதை குடைந்து எழுப்புகிறது கொசு. என்னதான் வழியென்று
வீதியையும்,வீட்டையும­்,விதியையும் நோட்டமிட்டத்தில் விடாது கருப்பு போல்
ஆங்காங்கே குப்பைகள்,தேங்கிய கழிவுநீர்நிலைகள். இனி
கொசுத்தொல்லையிலிருந்­து விடுதலை அனைத்தையும் அப்புறப்படுத்தியதில்­,,,
ஒருவழியாக கொசுத்தொல்லையிலிருந்­து மீண்டுவந்து படுத்தால் குரட்டைச்
சத்தத்துடனே மீண்டும் புலம்புகிறாள் மனைவி, "என்னங்க பக்கத்துவீட்டு மாமி
பட்டுப்புடவ போல எப்பங்க வாங்கித்தருவீங்க" போச்சுடா "எனக்கு
நடிக்கத்தெரியாது" என்கிற உணர்ச்சியோடு "என்கிட்ட புடவ வாங்க
பணமில்லடி"என்று எப்படி புரியவைப்பேன், இதற்காக சிம்புவிடமோ இல்லை
பப்லுவிடமோதான் கோடை பயிற்சிக்கு போக வேண்டும். எல்லாம் முடிந்து
காலையில் எழுந்து தொலைகாட்சி பட்டனை தட்டினால் ஓடுகிறது விளம்பரம் ,
எர்வாமேட்டின்,டேபிள்­மேட், அமேஸான் காடு,அது இதுவென்று தாங்கமுடியாத
தலைவலிக்கு மத்தியில் வந்துபோகிறது அந்த மகத்தான வாக்கு "ஐயோ!!! ராமா
என்ன ஏன் இந்த கழிசட கூடல்லாம் கூட்டுசேர வைக்கிற"
கொசுமுதல்,கொள்ளையடித­்தல் வரையிலான அனைத்திற்கும் ஒரே நிவாரணி
காமெடியும்,கவுண்டமணி­யும், சிரிப்பும்தான் என்றுச் சொன்னால் அது
மிகையாகாது.

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...