Showing posts with label ஆணவக்கொலை. Show all posts
Showing posts with label ஆணவக்கொலை. Show all posts

Saturday, June 29, 2019

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவப் படுகொலை



          சாதிதான் சமூகமென்றால்
          வீசும் காற்றில் விசம்
          பரவட்டும் - தோழர் பழனி பாரதி


கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கனகராஜூம், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். ஆனால், கனகராஜ் காதலித்து வந்த பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் காதலுக்கு கனகராஜ் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, கனகராஜின் சகோதரர் வினோத், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளார்.


இதனிடையே, திருமணம் செய்துகொள்வதற்காக கனகராஜ் மற்றும் அந்தப் பெண் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி, அவர்கள்  தங்கியிருந்த இடத்துக்கு வினோத் மதுபோதையில் சென்றுள்ளார். `அந்த சாதிப் பொண்ணை நீ திருமணம் செய்யக் கூடாது' என்று சொல்லி, கனகராஜிடம் வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வாக்குவாதம் முற்றி, வினோத் அரிவாளால் கனகராஜையும் அவர் காதலித்த பெண்ணையும் வெட்டி வீழ்த்தியிருக்கிறான்.

இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அந்தப் பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பிழைப்பதற்கு 10 சதவிகிதம்தான் வாய்ப்பு உள்ளது என்று கூறி, அவருக்கு செயற்கை சுவாசம் மூலமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், கடுமையான காயங்களால் அந்தப் பெண்ணின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.


சாதி வெறிகள் தமிழக மண்ணில் மிகவும் வேகமாக வளர்வதை இந்த ஆணவப் படுகொலை காட்டுகிறது , சுயசாதி வெறியில் கொலைகளை நிகழ்த்தும் மிருகங்கள் உண்மையில் இம்மண்ணில் வாழத் தகுதியற்றவர்களே ... சாதியம் இருக்க வேண்டும் ஆனால் சாதிவெறி இருக்க கூடாது என்கிற போலியான பிம்பங்களை முதலில் அழித்தொழித்தல் வேண்டும் "சாதியே வெறி தான் " என்பதை தயவுசெய்து அடித்தள மக்களிடம் உணர்த்தப்பட வேண்டும் , சாதி ஒழிப்பு என்பது மிகத்தீவிரமாக எடுத்துச்செல்ல சாதி மறுப்பு காதல் திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் ...

Monday, December 31, 2018

கௌசல்யா -சக்தி இதற்கு விளக்கம் கொடுக்காதது ஏன்?




இவையெல்லாம் சட்டப்படி நியாயமில்லாதது , ஏன் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையமோ நீதிமன்றதையோ நாடவில்லை என்பது வியப்பாக உள்ளது...

கொளத்தூர் மணி அவர்களும் தியாகு அவர்களும் செய்திருப்பது பச்சையான கட்ட பஞ்சாயத்து...

முன்னதாக வந்த செய்தி..

தியாகு -- கொளத்தூர் மணி அறிக்கை

சக்தி- கவுசல்யா தொடர்பாக…

1)   சக்தி-கௌசல்யா திருமணத்துக்குப் பின் சக்தி மீது எழுந்த
குற்றச்சாற்றுகளும் அவை குறித்து சமூக ஊடகங்களில் இடம் பெற்ற கருத்துகள்,
எதிர்க் கருத்துகளும் கவலைக்குரிய முறையில் வளர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில், அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசித் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தோழர் பாரதி மற்ற நண்பர்களையும் இணைத்துக் கொண்டு முன்முயற்சி செய்தார். அவர்கள் இந்தச்
சிக்கலில் முதன்மைத் தொடர்புள்ள இருதரப்பினரிடமும் ஒப்புதல் பெற்று,
ததேவிஇ தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் -விடுதலைக் கழகத்
தலைவர், கொளத்துர் தா.செ. மணி ஆகிய எங்கள் இருவரிடமும் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர். நாங்கள் இருவரும் 27/12/2018 காலை 10 முதல் இரவு 9 மணி வரை திவிக அலுவலகத்தில் அமர்ந்து, சக்தி-கௌசல்யாவையும், சக்தி மீது
குற்றச்சாட்டு கூறியவர்கள், சான்றளிக்க முன்வந்தவர்கள், சக்தி-கௌசல்யா
திருமணத்தில் தொடர்புள்ளவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் விசாரித்தோம்.

முதன்மைத் துயரர் ஒரு பெண், பெயர் வெளியிட இயலாத நிலையில் அவரை ’அந்தப்
பெண்’ என்று மட்டும் குறிப்பிடுவோம்.

2)   அந்தப் பெண்ணைக் காதலித்து வந்த சக்தி அவரைக் கைவிட்டுப் போய்க்
கௌசல்யாவை மணந்து கொண்டார் என்பது முதல் குற்றச்சாட்டு. காதலை மாற்றிக் கொள்ள அவருக்கு உரிமை உண்டென்றாலும், இந்தக் குறிப்பிட்ட நேர்வில் சக்தி அவரைக் கைவிடுவதும் வேறு பெண்ணிடம் செல்வதும் பிறகு மீண்டும் வந்து நம்ப வைத்து ஒன்றுசேர்வதும், மீண்டும் திரும்பிப் போவதுமாக ஒரு முறைக்கு மேல்
நடந்திருப்பதும், இந்த வகையில் அந்தப் பெண்ணுக்கு உடல் வகையிலும் உள்ள
வகையிலும் கடுமையான மன உளைச்சல் தந்திருப்பதும் குற்றம் என்று கருதுகிறோம்.

3)சொந்த வாழ்வில் ஆணவக் கொலையால் பாதிப்புற்ற கௌசல்யா நீதிக்காக
நடத்திய போராட்டத்தையும், ஆணவக் கொலைகளுக்கு எதிரான இயக்கத்தில் அவர் வகித்த பங்கையும் சமூக நீதி ஆற்றல்களோடு சேர்ந்து நாமும் வரவேற்றோம். சங்கர் மீதான காதலையே நினைத்துக்கொண்டு கௌசல்யா காலமெல்லாம்
கைம்பெண்ணாகவே வாழ வேண்டும் என்ற பத்தாம்பசலி நிலைப்பாட்டிலும் எமக்கு உடன்பாடில்லை. அவர் மீண்டும் காதல் மணம் புரிவது வரவேற்கத்தக்கது என்ற கருத்திலும் மாறுபாடில்லை. ஆனால் சக்தி மீது கொண்ட காதலும், அவரை மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமும் கருதி சக்தியின் செயலைக் கண்டிக்கத் தவறியது கௌசல்யாவின் பிழையாகும்.

4) நிமிர்வு கலையகத்தின் தலைமை ஆசான் என்ற இடத்தைப் பயன்படுத்தி சக்தி தன்னிடம் பயிற்சி பெற வந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. இப்படி ஒரு குற்றச்சாட்டின் பேரில் ஒரு முறை நிமிர்வு கலையகத்திலிருந்து நீக்கப்பட்டுச் சிறிது காலம் கழித்து
மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு
திருநங்கையும் சக்தி மீது பாலியல் சீண்டல் குற்றம் சுமத்தியுள்ளார்.
சக்தி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்புவதற்காக வேறு பெண்களைப் பற்றி அவதூறு செய்தார் என்ற குற்றச்சாட்டும்
முன்வைக்கப்பட்டது.

5)எம்மிடம் புலனாய்வுப் பொறிமுறையோ நீதி உசாவலுக்குரிய பொறிமுறையோ
முடிவுகளைச் செயலாக்குவதற்கான சட்ட வலிமையோ இல்லாத நிலையிலும், தமிழ்க் குமுகம் தந்திருப்பதாக நாங்கள் நம்பும் அற வலிமையையும் அனைத்துத்
தரப்பினரும் கொண்ட நம்பிக்கையையும்  துணைக்கொண்டு இயன்ற வரை எமது
கடமையைச் செய்து முடித்துள்ளோம். தொடர்புடைய அனைவரும் இடம்பெற்ற பொது அவையிலும் கலந்தாய்வு செய்தோம். சான்றியமளிக்க வேண்டிய சிலரிடம் தொலைப்பேசி வழியாகவும் உண்மையறிய முயன்றோம். முடிவுகளை அடைவதிலும் தீர்ப்பை வரைவதிலும் மனிதி செல்வி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத் தோழர் வளர்மதி, ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கத் தோழர் பார்த்திபன் ஆகியோரும்
எங்களுக்கு உதவினர். முடிவுகளைப் பொது அவையில் அறிவிக்குமுன் ’அந்தப்
பெண்’ணிடமும் கருத்தறிந்தோம். இந்த விசாரணையில் அடைந்த முடிவுகளையும் தீர்ப்பையும் பொது வெளியில் பணிந்தளிக்கிறோம்.

முடிவுகள்:

1) அந்தப் பெண்ணுக்கு மோசமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அநீதிக்குப்
பொறுப்புக்கூற வேண்டியவர் சக்தி, அந்தப் பெண்ணும் சரி, சக்தி-கௌசல்யாவும் சரி, எங்களிடம் தந்த விளக்கங்களில் அடிப்படையான முரண்பாடு ஏதுமில்லை. பொது அவையிலும் அந்தப் பெண் தொடர்பாகத் தன் மீதான குற்றச்சாற்றினை சக்தி
ஒப்புக்கொண்டார். கௌசல்யாவும் தன் பிழையைப் புரிந்து ஒப்புக்கொண்டார்.

2)சக்தி தன் மீதான மற்றப் பொதுவான குற்றச்சாற்றுகளை மறுத்து
விளக்கமளித்தார். எதிர்த்தரப்பினரும் குற்றச்சாற்றுகளை வலியுறுத்தி
விளக்கமளித்தனர். நீண்ட காலக்கழிவு, வதந்திகளின் ஊர்வலம், தனிமனித
விருப்புவெறுப்புகள் ஆகிய காரணிகளின் மூட்டத்தில் எந்த ஒன்றையும் மெய்ப்பிக்கவோ பொய்ப்பிக்கவோ அறுதியான இறுதிச் சான்று இல்லாத நிலையில்
நாங்கள் இவ்வாறு முடிவெடுக்கிறோம்: தனது ஆற்றலை வியப்புடன் மதிப்போரை அதனைக் கொண்டே மடக்கும் போக்கு சக்தியிடம் இருந்து வந்துள்ளதை ஊகிக்க
முடிகிறது.

பொதுவாழ்வில் பாலின பேதமற்று செயல்படும் ஆர்வத்தோடு வரும் பெண்களுக்கு இவ்வகைப் போக்கு பெரும் தடையாகும் என்பதும் -  பொதுவாழ்வில் இயங்கும்
பெண்கள் மீதான பொதுப்புத்தியில் உள்ள அவநம்பிக்கையை அது மேலும்
அதிகப்படுத்தும் என்பதும் – பல்வகைத்  தடைகளைத் தாண்டி சமூகப் பணியாற்ற
வரும் பெண்களுக்கு குடும்பத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் மேலும் மேலும்
இறுகும் என்பதுமே மெய்ந்நிலையாகும்.

தீர்ப்பு:

1) சக்தி தன் குற்றங்களுக்காகப் பொது அவையில் மன்னிப்புக் கோர வேண்டும். கௌசல்யாவும் பொது அவையில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.*

(*இது அப்போதே நடந்து முடிந்தது.)

2)சக்தி நிமிர்வு கலையகத்திலிருந்து வெளியேற வேண்டும்.

3)இன்றிலிருந்து ஆறு மாதகாலம் சக்தி எந்தப் பொதுநிகழ்ச்சியிலும்
பறையிசைக்கக் கூடாது.

4)தண்டம் (இழப்பீடு) என்ற வகையில் சக்தி ஆறு மாத காலத்துக்குள் மூன்று
இலட்சம் உருவாய் செலுத்த வேண்டும்.

5)இந்தத் தீர்ப்பில் எந்தப் பகுதி குறித்தும் மேல்முறையீடு செய்ய
விரும்பினால் மூன்று மாதத்துக்குப் பின் அவ்வாறு செய்யலாம்.

தொடர்புடைய அனைவரும் இந்தத் தீர்ப்பை செயலாக்குவதில் உளமார ஒத்துழைப்பது அறத்தின் கட்டளை. முடிவுகளை அறிவித்த பின்னரும் தேவையற்ற செயல்களில்
ஈடுபடுவது --- தேவையற்ற விமர்சனங்களைப் பொதுவெளியில் வைப்பது அல்லது சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவது --– போன்ற செயல்பாடுகள் முடிவை
மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதைத் தெளிவாக
அறிவிக்க விரும்புகிறோம்.

                                   தோழமையுடன்,

                     தியாகு /கொளத்தூர் மணி

                                             சென்னை
                                              29/12/18

Saturday, February 24, 2018

இன்னொரு கயர்லாஞ்சி கொடுமைகள்





இதோ இன்னொரு கயர்லாஞ்சி..!

விழுப்புரம் அருகே நிலத்தை அபகறிக்க முயன்றவர்களை எதிர்த்த குற்றத்திற்காய்...நடு இரவில் வன்னிய சாதிவெறி மிருகங்கள் கணவனை இழந்த தாயையும், மகனையும் கொன்றுவிட்டு , பதினான்கு வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறது..!
அந்த தாயும், மகளும் , பலரால் வண்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மருத்து அறிக்கை கூறியுள்ளது..!

ஆண் மகன் நாளைக்கு சொத்துக்கு வாரிசாக வந்துவிடுவானென கருதி கழுத்தையருத்து கொன்று இருக்கிறார்கள்.அடுத்தவன் சொத்தை அபகறிக்கும் திருட்டு கூட்டங்களிக்கிடையேதான் தலித் சமூகம் இன்றும் வாழ்ந்து கொன்டிருக்கிறது. சிறுவனை கொலை செய்தல் , பெண் குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தலில்தான் உங்களின் சாதிவெறி இருக்கிறதெனில்.. அச்சாதியாதிக்கத்தை ஆணவப்படுகொலைகளை தடுத்து சம உரிமைக்காக தலித் ஆதிக்கம் எழுந்து நிற்குமேயானால் அந்த தலித் ஆதிக்கத்தை ஆதரிப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது... இங்கே முழுக்க முழுக்க சாதியத்தாலே கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் என்றுமே மனிதன் கொடூர மிருகமாகத்தான் இருக்க முடியும்.. சாதியத்தை அதன் வேரான ஹிந்துத்துவ பார்ப்பனியத்தை... அதனை வளர்த்தெடுக்கும் இடைசாதி ஆதிக்க வெறியினை அம்பேத்கரை விடவும் , பெரியாரின் கைத்ஊடி விடவும், மாவோவின் எதிர்வினையை பயன்படுத்துகையில் அடித்து விரட்ட இயலும் என்றே தோன்றுகிறது... ஆம்
" நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்கிறான்" என்பதே அது.....

Friday, February 23, 2018

ஏது இங்கே மனிதத்தன்மை





Suba Veerapandian ஐயாவின் "கருப்பு வெள்ளை " யில் ஒன்று சொல்வார்... கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்று சொல்லாதீர்கள் "ஆக்கிரமித்தார் " அல்லது அடிமைபடுத்தினார் என்பதுதான் உண்மை இதை அங்கே மிச்சமிருக்கும் பழங்குடி ஆதிக்குடிகள் கேட்டுக்கொண்டதாக சொன்னார்... ஆக இங்கே எல்லோரும் " வந்தேறிகள்"தான் ஆதி பழங்குடி இனத்தவர்களே பூர்வக்குடிகள்... எதற்கு இதை சொல்கிறேன் என்றால் அந்த கேரள பழங்குடி  இளைஞன் மது ன்று பெயர் கொண்ட இளைஞனை  200 ரூபாய் திருடியதற்காக அடித்தே கொன்றார்களே ! அவர்களுடன் மிருகங்களைக்கூட  ஒப்பிடாதீர்கள்... ஏனெனில் மிருங்கள் தங்கள் பொது எதிரியான " பசியுடன் " மட்டுமே போரிடுமே தவிர... இவ்வாறு கொலை செய்யாது.

Thursday, June 02, 2016

தொடரும் சாதி ஆணவக்கொலைகள் - கொலையாகின்றன காதல் திருமணங்கள்

தமிழ்ச் சமூகத்தில் ஆகப்பெரிய நவ நாகரீக தன்மையில் புத்துயிர் பெற்றுக்
கொண்டிருக்கிறது ஆணவக் கொலைகள் என்றால் அது மிகையாகாது, இளவரசன் கொலை
இல்லாநிலையானதும் கோகுல் ராஜை கொன்ற யுவராஜ்களுக்கு ஜாமீன் கிடைப்பதும்,
விஷ்ணுபிரியாக்களின் மரணங்களில் இந்துத்துவ சாதிவெறி வாழ்வதும், உடுமலை
சங்கரை கொலை செய்தோர்கள் பேரும் புகழோடும் ஆண்டை பெருமை பேசுவதும், காதல்
திருமணம் நடத்தி வைத்தமைக்காக நிறைமாத கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்ட
போது கருவில் இருந்த சிசுவிடமே தன்சாதிப் பெருமையை திணித்தும் தங்கள்
இந்துத்துவ சாதிவெறியாட்டத்தை சுதந்திரமாக அதுவும் அரசின் பேராதரவோடு
இங்கே நிகழ்த்தப்படுகின்றபோ­­து உண்மையில் வாழ்வதற்கு தகுந்த இடமா இந்த
தமிழ்மண் என எண்ணத் தோன்றுகிறது. இந்துத்துவ பார்ப்பானியத்தின் அதிதீவிர
வளர்ச்சியின் சிறுதுளிகள்தான் ஆவணக்கொலைகள் என்பதை பெரியார் மண்ணென்று
மூடி மறைக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை, எந்த பெரியாரிமும் அதி
நுணுக்கமாக தமிழ்ச் சமூகத்தை அணுகவில்லை என்பதையே மேலுமொரு சாதி
ஆணவக்கொலை உணர்த்துகிறது. அண்ணல் அம்பேத்கரை பின்பற்றுவதாகச் சொல்லும்
தலித் இயக்கங்களும்,திராவிட­­ இயக்கங்களும், முரண்பட்டு நின்றாலும்
முழுவதாய் ஏற்காமல் பாதிகிணற்றில் தொங்கும் மார்க்ஸிய இயக்கங்களும்
"தமிழ்மண் பகுத்தறிவு புகுத்தப்பட்ட மண்" என்பதிலிருந்து வெற்றிடமாக
இருக்கும் அந்த "பகுத்தறிவு" என்பது மேலும் மேலும் "புகுத்தப்பட வேண்டிய"
மண் என்பதற்கு தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையினை
உணர வேண்டிய தருணம். நீதித்துறையில் கடந்த ஆறு ஆண்டுகளாக தலித்
நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவேயில்லை­­" என்கிறபோது
தலித்துகளுக்கெதிராக நிகழ்த்தப்படும் சாதியாதிக்க ஆணவக் கொலைகளில் எப்படி
நீதியை நிலைநாட்ட முடியும்,ஆணவக் கொலைகளை செய்வது ஒரு நாகரீக
நடவடிக்கையாகவும் அது சமுதாயத்தில் ஒரு அந்தஸ்த்தை,மரியாதையை­­,கவுரவத்தை
கொடுக்கும் எனும் ஆதிக்கச் சாதி வெறியர்களின் புரிதலை, பொதுபுத்தியை
நீதிபதிகள் நியமனத்திலிருந்தே அறிந்துகொள்வீர்களானா­­ல் இங்கே எப்போதோ
புரட்சிக்கான விதைகள் போடப்பட்டிருக்கும். தாலி காத்த சிறுதெய்வ குலதெய்வ
குத்துவிளக்கு அம்மன்களும், காளிகளும், இன்னும் என்னென்னவோ குத்துக்
கல்களும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் சாதி மறுத்து காதல் திருமணம் புரிந்த
பெண்களின் தாலிக்கு பாதுகாப்பை கொடுக்க முடியவில்லை, எனும்போது இன்னமும்
குலதெய்வமென குத்திக்கொண்டு கும்மிடுவது அம்மணமாக அலைவதற்கு சமமானதென
தலித்துகள் உணர்வார்களா? கண்ணுக்குத் தெரிந்து தினந்தினம்
செத்துக்கொண்டிருக்கு­­ம் சாதிமறுத்த காதலர்களுக்குத் தேவையான
பாதுகாப்பையும் சாதியாதிக்கத்திற்கு எதிராகவும் இந்துத்துவ
பார்ப்பானியத்திற்கு எதிராகவும் கலகக்குரல்கள் எழாதவரையில்
இளையராஜாக்களும் செத்துக் கொண்டேதான் இருப்பார்கள். சாதியம்
வளர்ந்துக்கொண்டேதான்­­ இருக்கும், நீதிதேவதையின் கழுத்தும்
துண்டிக்கப்பட்டுக்கொண்டேதானிருக்கும். மேலும் ஒரு ஆணவக் கொலை
தமிழச்சமூக மண்ணில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
காதல் திருமணம் செய்த வாலிபர் துடிக்கத் துடிக்க அடித்துக்கொலை
செய்யப்பட்டிருக்கிறார் . அவரது உடலை வாங்க மறுத்திருக்கிறார்கள்
உறவினர்கள், வேறென்ன ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு நீதியின்
கடைசி சண்மானம் அதுதானே,,,திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம்
புரூன்ஸ்நகர் கல்லகத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இளையராஜா. இவர்
சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் லாரி டிரைவராக பணியாற்றினார். இளையராஜாவும்
அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தியும் (17) காதலித்து வந்தனர். கடந்த வாரம்
இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதையறிந்த ஆனந்தியின் அண்ணன் அருண், வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு
திரும்பி வந்தார். இளையராஜாவை சந்தித்த அவர், '' நான் முறைப்படி திருமணம்
செய்து வைக்கிறேன்' என்று கூறினார். இதையடுத்து ஆனந்தியை அவருடன்
வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இளையராஜா, நண்பர் பாலாஜி,அருண் ஆகியோர்
கல்லகத்திலிருந்து புறப்பட்டு கல்லக்குடிக்கு சென்று மது அருந்தினர்.
அப்போது, அருணுடன் சிலர் சேர்ந்து, இளையராஜாவையும், பாலாஜியையும்
சரமாரியாக தாக்கினர். தப்பியோடிய பாலாஜி கல்லக்குடி போலீசில் தகவல்
தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது
தலை நசுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இளையராஜா கொலை
செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவில் 22 மாநிலங்களில் சாதி ஆணவக் கொலைகள்
நடப்பதாக ஒப்புக்கொண்டுள்ளன. இந்த விஷயத்தில் அவ்வப்போது ஏதோ நீதியை தக்க
வைப்பதாக தலித்துகளை ஏமாற்றும் வகையில் உச்சநீதிமன்றமும் ஆணவக் கொலைகள்
குறித்து தனது வேதனையையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகிறது.
2013-லிருந்து இதுவரை தமிழகத்தில் தோராயமாக 83 ஆணவக் கொலைகள்
நடந்துள்ளதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்ற
சூழலில் சாதியாதிக்க பார்ப்பானிய இந்துத்துவத்திற்கு எதிராக குறிப்பாக
இடைநிலை சாதி வெறியர்களுக்கு எதிராக போராட்டங்கள், கூர்வாளினைபோல
முன்னெடுக்க தமிழ்ச்சமூக முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்.
முக்கியமாக சாதியத்திற்கு எதிராக எல்லாவிதமான ஆயுதங்களையும் இதன்மூலம்
பிரயோகப்படுத்துதல் அவசியமாக இருக்கிறது. இங்கே மாவோயிஸம்
மாற்றியெழுதப்பட்டால் மட்டுமே சாதிவெறிகள் ஒழியும். எதிரிகள் ஆயுதங்களை
தீர்மானித்தெடுக்கும் முன்னரே நமது கைகளில் ஆயூதங்களை ஏந்தி வர்ணாசிரம
மனு தர்மத்தை? அழித்தொழித்தலே முதல்வேளையாக நமக்கிருக்கும் கடமையாக
இருக்கிறது.

Friday, May 13, 2016

மேலும் ஒரு சாதி ஆணவக் கொலை நெல்லையில்,,,

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தலித் இளைஞர்
விஸ்வநாதன், இவர் இரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்
தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சாதிய ஆதிக்க பிரிவைச் சேர்ந்த சங்கர்
என்பவரின் மகள் காவேரியை காதலித்து வந்துள்ளார். இதற்கு காவேரியின்
வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி விஸ்வநாதனும்
காவேரியும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். இந்நிலையில்
காவேரியின் தந்தை விஸ்நாதனின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல்
விடுத்துவந்தார். இதுகுறித்து விஸ்வநாதன் குடும்பத்தினர் காவல் துறையில்
புகார் அளித்தனர். ஆனால் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ஆத்திரம் அடங்காத காவேரியின் தந்தை வெள்ளியன்று விஸ்வநாதனின்
சகோதரி கல்பனாவை வெட்டிக்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி
மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடுமைலையில் சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்தி
அதிர்ச்சியலைகள் அடங்குவதற்குள் தமிழகத்தில் மேலும் ஒரு சாதி ஆணவக் கொலை
அறங்கேறி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தீக்கதிர்

Tuesday, March 15, 2016

சாதியால் செத்தாயே சங்கரா!

ஊழிக்காற்றில் உலர்ந்து
எங்கும் சிதறியோடும்
சருகுகளில்
படிந்து கிடக்கிறது
சங்கரா
உன்
உறைந்த ரத்தம்

சாதியால்
செத்துக்கிடக்கிறாயே
சங்கரா

நாடகக் காதல்
திருமணமே
உன்னை மண்ணில்
சாய்த்ததென்று
சாதி இந்துக்கள்
சாவகாசமாய்
பேசுகிறார்களே

தன்சாதிக்கு பெருமை
சேர்க்கும் ஆவல்
அவர்களிடத்தில்

உன் குருதி வாடையில்
கொஞ்சம் தேநீர்
கலந்து கொடு
சாதிமறுப்பு மணங்கள்
அருந்தட்டும்

சங்கரா நீ
இறந்து கிடக்கிறாய்
உன் காதலெனும்
ஆன்மாவை கத்தியால்
குத்திக் கிழித்த
சாதிவெறியர்களின்
கல்லறையில்
கொலையென்பது
கௌவரமென முதலில்
இடம்பிடித்துவிட
பொதுப்பெயராகிறதது
கௌரவக் கொலையென

மன்னித்துவிடு
சங்கரா

உன் காதல்
மனைவியையும்
எங்களால் காப்பாற்ற
முடியாது

நீ மரணம் தழுவிய
கணத்திலிருந்தே
அரசாயுதங்கள்
அவள்
கழுத்தில் கத்தியை
அழுத்திப்
பிடித்துவிடும்
அதிகாரத்தை
கொடுத்து விட்டோம்

பெயருக்கானதிங்கே
பெரியார் பூமியென்பதை
என்றோ நீ
உணர்ந்திருந்தால்
காதலை வெறும்
மயிறென்றுதானே
எழுதியிருப்பாய்

எனக்குத் தெரியும்
சங்கரா
காதலிக்க பிறந்தவர்கள்
சாதிக்கு பிறந்தவர்கள்
இல்லையென்பது

ஒன்று மட்டும் என்னை
குற்றத்தில் நிந்திக்கிறது
சங்கரா

இந்த பிணங்களின்
வரிசையில் நானுமோர்
பிணமாகி கிடக்கிறேன்

உனக்கும் எனக்குமோர்
வேற்றுமையுண்டு

உன் கண்கள் மூடியதும்
கல்லறை தானாக
திறந்து இருட்டுக்குள்
வலிக்கான
மருந்திடுகிறது

நான் கண்களை திறந்தே
வைத்திருக்கிறேன்
வெளிச்சத்தில்
காட்சிகளை
தொலைத்துவிட்டு
கல்லறையில்
உயிரோடு படுத்துறங்கி
கண்டும் கானாது
கடந்துபோகப்
பழகியிருக்கிறேன்

யார் குற்றவாளி
என்பதை காலத்திடம்
ஒப்புவித்து
கடைசியாக
சென்றடைகிறேன்
அடுத்த சூடான
செய்திகளைத் தேடி

நானுமிங்கே
நயவஞ்சகனாக
நடமாடுகின்றேன்
நடிக்கவும்
செய்கின்றேன்

என்றேனும் இளவரசன்
கோகுல்ராஜ் அடுத்து
நீயென
உங்களின்
புனிதக் காதலென்னை
கண்ணத்தில் அறையும்

அப்போதும் நான்
விழிப்பதென்பது
சந்தேகமே சங்கரா!

எங்களையும்
எங்களோடு புனிதக்
காதலையும்
கொலை செய்தான்
இவனென
கைகாட்டிவிடு

தண்டனைகளை
தாராளமாய் ஏற்கிறேன்

உனதுயிர் தியாகத்தை
புரட்சியாக்காத
நானும்
கொலைகாரன்தானே!

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...