Friday, December 13, 2024

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை
வருமானமோ !
வயிற்றுப்பசியோ !
வறுமையோ !
வாழ்வாதாரத்தையோ !
வீட்டுக் கடனையோ !
பிள்ளைகளின் பசி பரிதவிப்போ
இவையெல்லாம் கடந்து ...
பூச்சந்தையில் வந்திறங்கியும்
கேட்பாரற்று பெருமழையில்
வாடியும் , கசங்கியும்
சகதியில் கிடக்குமே
நமக்கு சோறிடும் "பூக்கள்"
என்றே சோர்ந்து நொந்து 
போனாள் பூக்காரி ...
பூ கட்டும் நாரொன்றை
தன் கையில் ஏந்தியபடியே !!!

0 comments:

Post a Comment

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...