Showing posts with label மாவோ. Show all posts
Showing posts with label மாவோ. Show all posts

Wednesday, May 01, 2019

தொழிலாளர் தினம் இந்தியாவில் ...



                   உலகத் தொழிலாளர்களே
                    ஒன்று சேருங்கள் - மாவோ

முதலாளித்துவ வர்க்கம் , தொழிலாளர் வர்க்கம் என இரு வர்க்கங்களின் மூலம் சாதிய மனோநிலையில் இங்கு கொட்டிக்கிடக்கிறது , பெரு முதலாளியர்களின் சுரண்டல்கள் பொருளாதார ரீதியிலான ஆக்கிரமிப்புகள் என அனைத்தும் ஹிந்துத்துவ சாதியத்தினுள் சுழன்றுக்கொண்டே இருக்கும் . முதலாளித்துவத்திற்குள் ஏற்படும் மோதல்களும் இவ்வகையில்தான் கட்டமைக்கப்படுகிறது , சாதியப் படிநிலையில் தனக்கு கீழான‌ஒருவன்  தனக்கு நிகராக முதலாளிய பலம் பெறுவதை அதே முதலாளித்துவ வர்க்கம் ஏற்றுக்கொள்வதில்லை , அதேபோல
தொழிலாளர் வர்க்கம் தனக்கு கீழான சாதிய படிநிலை கொண்ட சக தொழிலாளர்களை நசுக்குவது அல்லது அடிமைபடுத்துவதிலேயே குறியாக இருக்கும் வேளையில் இங்க தொழிலாளர் ஒற்றுமை சிதைக்கப்படுகிறது . இந்தியாவை பொறுத்த வரையில் இரண்டு வர்க்கங்கள் என்பதை தாண்டி மூன்றாம் வர்க்கமாக "சாதிய முரண்" இடம்பெறுவதை    சோஷியலிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டு கொள்வதில்லை என்பதே எதார்த்த நிலை .
ஒரு சமூகம் தன் அடிமை நிலையிலிருந்து மீண்டெழுந்து சோஷியலிஸத்தை விரும்பதாக  தன் நிலையிலிருந்து அது மீண்டெழ முதலில் சாதிய வர்க்கம் பேதங்களிலிருந்து மீண்டெழ வேண்டும் . இந்த நிலையிலிருந்து பார்த்தோமானால் ,
 இந்தியாவில் எந்தவொரு தொழிற்சங்கங்கமும் அதன் பின்னணியில் இயக்கப் பொருளாக இருப்பது சாதிய படிநிலை கொண்ட தொழிற்சங்கங்களாகவே காணப்படுகிறது . போலவே அதன் அடுத்த நிலையிலிருந்து ஆணாதிக்கம் என்கிற பதத்திலும் வந்து ஒட்டிக் கொள்கிறது .  சோஷியலிஸ கம்யூனிஸ்ட் எப்பொழுதும் பெண்ணடிமை தளத்தை உடைத்தெறிந்து விடுதலில் தனக்கான ஓரிடத்தை கொண்டிருக்கிறது என்பது வரலாறு , பெண் சுதந்திரம் , பெண்களுக்கு சம உரிமை , பெண்களுக்கு வாக்குரிமை , ஆணாதிக்க எதிர்ப்பு என எல்லா தளங்களிலும் கம்யூனிஸ சித்தாந்தங்கள் இல்லாமல் பேசிவிட முடியாது , ஆனால் இன்றளவும் நீளும் பெண்ணடிமைத்தனம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு பெருந்தடையாக இருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை . எனவே இந்த மே 1 தொழிலாளர் தினத்தில் சாதிய மனோபாவத்திலிருந்தும் , ஆணாதிக்க மனோபாவத்திலிருந்தும் தொழிலாளர் வர்க்கம் விடுதலை பெற்று ஒரு முழுமையான சோஷியலிஸ , சமத்துவ தொழிலாளர் வர்க்கம் உருவாகி முதலாளித்துவ எதிர்ப்புக் களத்தை உறுவாக்கிட நாம் அனைவரும் "தோழன் " என்கிற முறையில் சக மனிதர்களாக களம் அமைத்திட வேண்டும் .
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக ...
மேதின வாழ்த்துகள் ...

Saturday, February 24, 2018

இன்னொரு கயர்லாஞ்சி கொடுமைகள்





இதோ இன்னொரு கயர்லாஞ்சி..!

விழுப்புரம் அருகே நிலத்தை அபகறிக்க முயன்றவர்களை எதிர்த்த குற்றத்திற்காய்...நடு இரவில் வன்னிய சாதிவெறி மிருகங்கள் கணவனை இழந்த தாயையும், மகனையும் கொன்றுவிட்டு , பதினான்கு வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறது..!
அந்த தாயும், மகளும் , பலரால் வண்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக மருத்து அறிக்கை கூறியுள்ளது..!

ஆண் மகன் நாளைக்கு சொத்துக்கு வாரிசாக வந்துவிடுவானென கருதி கழுத்தையருத்து கொன்று இருக்கிறார்கள்.அடுத்தவன் சொத்தை அபகறிக்கும் திருட்டு கூட்டங்களிக்கிடையேதான் தலித் சமூகம் இன்றும் வாழ்ந்து கொன்டிருக்கிறது. சிறுவனை கொலை செய்தல் , பெண் குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தலில்தான் உங்களின் சாதிவெறி இருக்கிறதெனில்.. அச்சாதியாதிக்கத்தை ஆணவப்படுகொலைகளை தடுத்து சம உரிமைக்காக தலித் ஆதிக்கம் எழுந்து நிற்குமேயானால் அந்த தலித் ஆதிக்கத்தை ஆதரிப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது... இங்கே முழுக்க முழுக்க சாதியத்தாலே கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் என்றுமே மனிதன் கொடூர மிருகமாகத்தான் இருக்க முடியும்.. சாதியத்தை அதன் வேரான ஹிந்துத்துவ பார்ப்பனியத்தை... அதனை வளர்த்தெடுக்கும் இடைசாதி ஆதிக்க வெறியினை அம்பேத்கரை விடவும் , பெரியாரின் கைத்ஊடி விடவும், மாவோவின் எதிர்வினையை பயன்படுத்துகையில் அடித்து விரட்ட இயலும் என்றே தோன்றுகிறது... ஆம்
" நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்கிறான்" என்பதே அது.....

Saturday, July 02, 2016

மாவோ எனும் மாமனிதன்

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சியினை விரும்பும் கம்யூனிஸ பாட்டாளி
வர்க்கத் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற ஒருங்கிணைத்தலை
,வழிநடத்தும் பண்பு கொண்ட ஒரு தலைமை வாய்ப்பதற்கு அவர்களின் புரட்சிக்கு
ஏற்ற வெற்றிபெற்ற செயல்திட்டங்களே உதாரணமாய் அமைகின்றது. அந்த வகையில்
ஓர் தலைமை மட்டுமே செயல்திட்டத்தினை தொழிலாளர் வர்க்கத்தோடு இணைந்து
புரட்சியை வகுத்து செயல்படுத்த முடியும். மார்க்ஸியம், லெனினியத்திற்கு
செழிப்பூட்டும் வகையில் பாட்டாளி வர்க்கத்தின்
மீது அக்கறையோடு செயல்பட்ட கம்யூனிஸ சீன புரட்சியாளர்தான் தோழர் மாவோ
எனும் மாசேதுங் . "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என சோஷியலிஸ வேட்கையினை
கம்யூனிஸப் பாதையை கொண்டு சீனத்தை செதுக்கினார் மாவோ, வெறும் சிற்பங்களாக
அல்லாமல் ஒவ்வொரு சிற்பத்திற்குள்ளும் சமூகம், சகோதரத்துவம், பெண்ணியம்,
சோஷியலிஸம், கம்யூனிஸமென தொழிலாளர் வர்க்கத்தின் அத்துணை உரிமைகளையும்
அவர்களுக்குள் புகுத்தி புரட்சிகர கம்யூனிஸத்தை சீன தேசத்திற்கு
மட்டுமல்லாது மற்ற ஏனைய உலக தேசங்களுக்கெல்லாம் கம்யூனிஸ சித்தாந்தத்தின்
ஆகப் பெரும் முன்னுதாரணமாய் எடுத்துச் சென்றவர் மாவோ. ஏனைய கம்யூனிஸ்ட்
தலைவர்களுடன் ஒப்பிடுகையில் தலைவர் மாவோ அவர்கள்
மார்க்சிய லெனினிசத்தை மிகவும் இலகுவான முறையில் சீனாவிற்கும் உலகிற்கும்
விளக்கினார். சீனாவில் ஒருசக்திமிகு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி, அதன்
தலைமையில் ஒரு கட்டுப்பாடான விடுதலைப்படையை உருவாக்கி, பல்வேறு
கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்டிருந்த மக்களையும் கட்சிகளையும் பொது
எதிரிக்கு எதிராக ஒரு பரந்த ஐக்கிய முன்னணி மூலம் அணிதிரட்டி
ஏகாதிபத்தியத்தையும், பிரபுத்துவத்தையும், தரகுமுதலாளித்துவத்தையும்
இறுதியில் தோற்கடித்தமை ஓர் அளப்பறிய சாதனையாகும்.
ஒரு நீண்ட மக்கள் யுத்தத்திற்கு தேவையான மூல உபாயங்களையும்,
தந்திரோபாயங்களையும் வகுத்து கிராமங்களை முதலில் விடுவித்து இறுதியில்
நகரங்களை கைப்பற்றி முழுத்தேசத்தையும் விடுதலை செய்து மக்கள் ஜனநாயகத்தை
ஏற்படுத்தியதுமற்றுமொரு சாதனையாகும். அதனடிப்படையிலேயே மாவோயிஸத்தின்
பாதை கிராமங்களை நோக்கியதான பாதை என்பார்கள்.
அரைக்காலனித்துவ, அரை நிலப்பிரபுத்துவ நாடொன்றில் சகல ஏகாதிபத்திய விரோத
சக்திகளையும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலமையின் கீழ்
ஐக்கியப்படுத்தி ஜனநாயகப் புரட்சியை வென்றெடுத்து, அதன் அடுத்தகட்டமான
சோசலிசத்தை ஏற்படுத்த வழிவகுத்தமை, விடுதலைக்காக போராடும் அனைத்துலக
மக்களுக்கும் ஒரு பாடமாக அமைகிறது.
சீனாவை சுயசார்பின் மூலம் ஒரு பலம் மிக்க சோசலிச நாடாக்க நடவடிக்கை
எடுத்தமை, சோவியத் யூனியன் தலமையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில்
உருவெடுத்த நவீன திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தமை
என்பன மூலம் மாக்சிய லெனினியத்தையும், புரட்சிகர
இயக்கங்களையும் வளர்த்தெடுத்து உலகின் அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கு
வழிகாட்டியாக மாவோ விளங்கினார். மாவோ சாதனையாளனல்ல உலக சரித்திரத்தை
புரட்டிப்போட்ட ஒரு சாதாரண கம்யூனிஸ பற்றாளன். அவரின் சாதனைகளை வெறும்
சாதகமாகவே பயன்படுத்துவது என்றுமே அபத்தமாக இருக்கும். புரட்சிகர
சோஷியலிஸ கம்யூனிஸத்திற்கு ஒரு பகுத்தறிவாளனாய், புரட்சியாளனாய் மாவோவை
பின்பற்றுதலே உலகின் ஆகச் சிறந்த பல சாதனை புரட்சிகளுக்கு வழிகாட்டுதலாக
அமையும்.

- 26 December 2011 அன்று எனது பேஸ்புக் (facebook) பதிவிலிருந்து,,,

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...