"தூக்கிலிடும் முன் கடைசி ஆசை என்ன?'' என பகத்சிங்கிடம் கேட்டார்கள்.
"பேபி" கையால் ரொட்டி வேண்டும் என்றார். சிறை அதிகாரி அதிர்ந்து போனார்.
காரணம் பேபி என்ற பெண் சிறையில் மலம் அள்ளுபவர். ஆனால் பகத்சிங், 'அவர்
தான் ரொட்டி செய்து தர வேண்டும் என உறுதியாய் கூற, பேபி அழைத்து
வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர், ரொட்டி செய்து தர மாட்டேன்", எனக்
கூறுகிறார். " என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில்
சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுபவரே தாய் என்றால்,
ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள், தாயினும் மேலானவர் என்று
சொன்னார் பகத்சிங். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது லாலா
லஜபதிராயின் உயிரிழப்புக்குக் காரணமான பிரிட்டிஷ் காவலதிகாரியைச்
சுட்டுக் கொன்ற காரணத்துக்காகவும், பாராளுமன்ற வெடிகுண்டு
தாக்குதலுக்காகவும், பொய்வழக்கான கொள்ளை, திருட்டு என வெள்ளை ஆட்சி
புனைந்த வழக்குகளால் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூன்று பேரும்
பாகிஸ்தானின் லாகூர் சிறையில் 1931, மார்ச் 23-ஆம் தேதி
தூக்கிலிடப்பட்டனர். இதில் பாராளுமன்ற வெடிகுண்டு தாக்குதலை இன்குலாப்
ஜின்தாபாத் முழக்கத்தோடும் ,தார்மீக பொறுப்போடும் ஏற்றுக்கொண்டு
குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். போலவே தூக்கிலிடும் முன்பு இறுதியாக அவரது
நெருங்கிய உறவினர் ஒருவர் மூலமாக "மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து
விடு 23 வயதிலேயே சாகவேண்டுமா, இனி நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள அரசு
உத்திரவாதம் அளித்துள்ளது" என்று சொல்லவைத்தது வெள்ளைக்கார அரசு
அதற்கு பகத்சிங் ஒரு பார்வையத் தான் பதிலாகத் தந்தார். அந்தப் பார்வையின்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு. இன்று (23.3.2016) அம்மூவரின் நினைவு நாள்.
அப்படியே அந்தமானுக்குப் பயணமாவோம்,,,
சிறைவார்டன் பொதுவாக ஒரு அறிக்கை ஒன்றை சிறையில்
பொதுமண்டபத்தில்ஒட்டுகிறார், அதில் ":இனிமேல் சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபடமாட்டேன், மனப்பூர்வமான மன்னிப்புக் கடிதம் எழுதி எனது
குடும்பத்தார் ஒரு சாட்சிக்கடிதத்துடன் வழங்குகிறேன் என்று
எழுதித்தரவேண்டும், அப்படித் தந்தவர்களுக்கு உடனடியாக சிறையிலிருந்து
விடுதலை செய்ய பிரிட்டீஷ் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று அந்த
அறிக்கையில் உள்ளது,
460 சிறைக்கைதிகளில்வெறும் 7 பேர் மட்டுமே எழுதிக்கொடுத்து அந்தமான்
சிறையிலிருந்து விடுதலையானார்கள். அதில் சாவர்கரும் (RSS) ஒருவர். "பாரத் மாதா
கி ஜெய்" என்பதற்கும்
"இன்குலாப் ஜின்தாபாத்"
என்பதற்குமான புரிதலை இனி அவரவர் பார்வைக்கே விட்டுவிடுதல் நல்லது.
Showing posts with label பகத்சிங். Show all posts
Showing posts with label பகத்சிங். Show all posts
Wednesday, March 23, 2016
பகத்சிங் நினைவு நாளில் எங்களின் முழக்கமும்,சபதமும்,
இன்று தோழர் பகத்சிங் அவர்களின் நினைவுநாள்
(மார்ச் 23, 1931) ஏகாதிபத்திய வெள்ளை ஆட்சிக்கு எதிராகவும் இந்திய
சூழலியல் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் "நான் ஏன் நாத்திகனேன்" எனும்
மிகப்பெரிய பொக்கிஷ நூலை தன் தண்டனை காலத்திலேயே எழுதி, தூக்குமேடையை
முத்தமிட்டு முழங்கிய அந்த "இன்குலாப் ஜிந்தாபாத்" முழக்கத்திற்கு
மத்தியில் முதலாளிய ஏகாதிபத்தியம் மிரண்டடித்து ஓடித்தான்போனது, காலங்கள்
மாறினாலும் காட்சிகள் அப்படியே உயிர்த்திருப்பது இந்தியாவின் சாபக்கேடே
அன்றி வேறில்லை, தோழர் பகத்சிங் வெள்ளை ஆட்சிக்கு எதிராக மட்டும் கலகம்
செய்யவில்லை, ஆண்டாண்டு காலமாக இந்தியத்தில் புரையோடிருக்கின்ற
பார்ப்பானிய சாதி இந்துக்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் கலகம் செய்தார்
என்பதில் இருக்கிறது அவரின் உண்மையான தேசபக்தி ஆகவேதான் "பாரத் மாதா கி
ஜெய் " என பார்ப்பானிய ஆர்எஸ்எஸ், பிஜெபி, முழக்கமிடுகின்றபோதெல்லாம்
தோழர் பகத்சிங்கின் "இன்குலாப் ஜிந்தாபாத்" நேரடியாக மோதி
பார்ப்பானியத்தை ஓடவிடுகிறதென்று சொன்னால் அது மிகையாகாது. தற்போதைய
இந்துத்துவத்தின் பார்ப்பானிய ஆட்சிகால
மனித உரிமை மீறல்களையும், சாதி இந்துக்களின் வெறிச்செயல்களையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம், ரோகித் வெமுலாவை கொலை செய்து தூக்கில்
மாட்டி நாடகமாடிய கும்பல்கள்,கன்னையா குமாரை தேச விரோதியென முத்திரை
குத்தும் கும்பல்கள், அட்லக்கை கொலை செய்த கும்பல்கள் என இந்த சாதி
இந்துக்களான பார்ப்பானிய ஆர்எஸ்எஸ்,பிஜெபி கும்பல்களின் வன்முறை மற்றும்
மனிதக்கொலைகள் இரண்டாண்டு ஆட்சி கால லட்சனத்தை வெளிச்சமிடுகிறது.
சமத்துவம்,சகோதரத்துவம் விரும்பும் இந்தியத்தில் இன்று எங்கு காணினும்
சாதிவெறி,மதவெறி,பெண்ணடிமை,பாட்டாளி விவசாய தொழிலாளிகள் தற்கொலை,கடன்
வாங்கிய தொழிலதிபர்கள் தலைமறைவு,சாதி ஆவணக்
கொலைகள்,தீண்டாமைகள்,வன்புணர்வு,மனித உரிமை மீறல்,தனியார் மயக் கொள்கை,
கல்வி வியாபாரம், தாராளமயக் கொள்கை, உலகமயமாதல், நில அபகரிப்பு, அணுவுலை
ஆதரவு, இத்யாதி இத்யாதி என நீளும் அன்றை வெள்ளை ஆட்சிக்கு சற்றும்
குறைவில்லாமல் கட்டவிழ்த்து சுதந்திரமாக சுரண்டலை
ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்தியத்தை ஆளும் பிஜெபி, மற்றும் ஆர்எஸ்எஸ்
பிறகு அவர்களுக்கு ஒத்தூதி உழைக்கும் அரசு அதிகாரிகளான ஆட்சியர்கள்
மற்றும் காவல்துறைகளுக்கு எச்சரிக்கையை பகிரங்கமாக தெரிவித்துக்
கொள்கிறோம் . ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி தூண்டுதலின்
மத்திய அரசு ஆராய்ச்சி படிப்பு மாணவர் ரோகித்வெமுலா மீது ஒருதலைப்பட்சமான
நடவடிக்கை எடுத்து. கல்வி பயிலும் வாய்ப்பு மற்றும் நீதி நெறிகளுக்கு
மாறாக ரோகித்வெமுலாவிற்கு முற்றிலும் மறுக்கப்பட்ட நிலையில் . இந்துத்துவ
சாதி ஆதிக்க கொடுமைகளால் ரோகித்விமுலா தற்கொலை செய்து கொண்டார்.
ரோகித்வெமுலாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய அமைச்சர்கள் மற்றும்
துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,
மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு காரணமான ஐதராபாத் பல்கலைக்கழகத்தின்
துணை வேந்தர் அப்பா ராவ் மீண்டும் பணிக்கு திரும்பியதற்கு எதிர்ப்பு
தெரிவித்தும் எங்கள் பகத்சிங்கின் மாணவர்களை நேற்று (மார்ச்22.2016)
கண்மூடித்தனமாக தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளீர்கள். ஒன்றை தெளிவாக
புரிந்துகொள்ளுங்கள் அரசப் பயங்கரவாதிகளே, உங்களின் "பாரத் மாதாகி ஜெய்"
முழக்கத்திற்கு முன்னால் எங்களின் "இன்குலாப் ஜிந்தாபாத்" "ஜெய்பீம்"
முழக்கங்கள் ஒருபோதும் மண்டியிடாது. நாங்கள் மார்க்ஸின் பேரக்குழந்தைகள்,
லெனினின் வளர்புகள், அம்பேத்கரின் பிள்ளைகள், பெரியாரின் பரப்புனர்கள்,
பகத்சிங்கின் மாணவர்கள் என்பதை நீங்கள் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை,
அன்றைய நாள் வரும்போது எங்களின் கைகளில் கல்வி ஆயுதமாகும், உங்களின்
கரங்களில் விலக்கிடப்படும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். தமிழக
ஆளும் திராவிட கட்சிகளே இப்போதும் சொல்ல கடமைபட்டிருக்கிறோம் நினைவில்
கொள்ளுங்கள் "பெரியாருக்கு பின்னால் திராவிடம் திருடப்பட்டு விட்டது"
என்பதை உரக்கச் சொல்வோம் உரிமைகளை மீட்டெடுப்போம்.
இன்குலாப் ஜிந்தாபாத்!
ஜெய்பீம்!
திராவிடத்தால் எழுந்தோம்!
(மார்ச் 23, 1931) ஏகாதிபத்திய வெள்ளை ஆட்சிக்கு எதிராகவும் இந்திய
சூழலியல் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் "நான் ஏன் நாத்திகனேன்" எனும்
மிகப்பெரிய பொக்கிஷ நூலை தன் தண்டனை காலத்திலேயே எழுதி, தூக்குமேடையை
முத்தமிட்டு முழங்கிய அந்த "இன்குலாப் ஜிந்தாபாத்" முழக்கத்திற்கு
மத்தியில் முதலாளிய ஏகாதிபத்தியம் மிரண்டடித்து ஓடித்தான்போனது, காலங்கள்
மாறினாலும் காட்சிகள் அப்படியே உயிர்த்திருப்பது இந்தியாவின் சாபக்கேடே
அன்றி வேறில்லை, தோழர் பகத்சிங் வெள்ளை ஆட்சிக்கு எதிராக மட்டும் கலகம்
செய்யவில்லை, ஆண்டாண்டு காலமாக இந்தியத்தில் புரையோடிருக்கின்ற
பார்ப்பானிய சாதி இந்துக்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் கலகம் செய்தார்
என்பதில் இருக்கிறது அவரின் உண்மையான தேசபக்தி ஆகவேதான் "பாரத் மாதா கி
ஜெய் " என பார்ப்பானிய ஆர்எஸ்எஸ், பிஜெபி, முழக்கமிடுகின்றபோதெல்லாம்
தோழர் பகத்சிங்கின் "இன்குலாப் ஜிந்தாபாத்" நேரடியாக மோதி
பார்ப்பானியத்தை ஓடவிடுகிறதென்று சொன்னால் அது மிகையாகாது. தற்போதைய
இந்துத்துவத்தின் பார்ப்பானிய ஆட்சிகால
மனித உரிமை மீறல்களையும், சாதி இந்துக்களின் வெறிச்செயல்களையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம், ரோகித் வெமுலாவை கொலை செய்து தூக்கில்
மாட்டி நாடகமாடிய கும்பல்கள்,கன்னையா குமாரை தேச விரோதியென முத்திரை
குத்தும் கும்பல்கள், அட்லக்கை கொலை செய்த கும்பல்கள் என இந்த சாதி
இந்துக்களான பார்ப்பானிய ஆர்எஸ்எஸ்,பிஜெபி கும்பல்களின் வன்முறை மற்றும்
மனிதக்கொலைகள் இரண்டாண்டு ஆட்சி கால லட்சனத்தை வெளிச்சமிடுகிறது.
சமத்துவம்,சகோதரத்துவம் விரும்பும் இந்தியத்தில் இன்று எங்கு காணினும்
சாதிவெறி,மதவெறி,பெண்ணடிமை,பாட்டாளி விவசாய தொழிலாளிகள் தற்கொலை,கடன்
வாங்கிய தொழிலதிபர்கள் தலைமறைவு,சாதி ஆவணக்
கொலைகள்,தீண்டாமைகள்,வன்புணர்வு,மனித உரிமை மீறல்,தனியார் மயக் கொள்கை,
கல்வி வியாபாரம், தாராளமயக் கொள்கை, உலகமயமாதல், நில அபகரிப்பு, அணுவுலை
ஆதரவு, இத்யாதி இத்யாதி என நீளும் அன்றை வெள்ளை ஆட்சிக்கு சற்றும்
குறைவில்லாமல் கட்டவிழ்த்து சுதந்திரமாக சுரண்டலை
ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்தியத்தை ஆளும் பிஜெபி, மற்றும் ஆர்எஸ்எஸ்
பிறகு அவர்களுக்கு ஒத்தூதி உழைக்கும் அரசு அதிகாரிகளான ஆட்சியர்கள்
மற்றும் காவல்துறைகளுக்கு எச்சரிக்கையை பகிரங்கமாக தெரிவித்துக்
கொள்கிறோம் . ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி தூண்டுதலின்
மத்திய அரசு ஆராய்ச்சி படிப்பு மாணவர் ரோகித்வெமுலா மீது ஒருதலைப்பட்சமான
நடவடிக்கை எடுத்து. கல்வி பயிலும் வாய்ப்பு மற்றும் நீதி நெறிகளுக்கு
மாறாக ரோகித்வெமுலாவிற்கு முற்றிலும் மறுக்கப்பட்ட நிலையில் . இந்துத்துவ
சாதி ஆதிக்க கொடுமைகளால் ரோகித்விமுலா தற்கொலை செய்து கொண்டார்.
ரோகித்வெமுலாவின் தற்கொலைக்கு காரணமான மத்திய அமைச்சர்கள் மற்றும்
துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,
மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு காரணமான ஐதராபாத் பல்கலைக்கழகத்தின்
துணை வேந்தர் அப்பா ராவ் மீண்டும் பணிக்கு திரும்பியதற்கு எதிர்ப்பு
தெரிவித்தும் எங்கள் பகத்சிங்கின் மாணவர்களை நேற்று (மார்ச்22.2016)
கண்மூடித்தனமாக தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளீர்கள். ஒன்றை தெளிவாக
புரிந்துகொள்ளுங்கள் அரசப் பயங்கரவாதிகளே, உங்களின் "பாரத் மாதாகி ஜெய்"
முழக்கத்திற்கு முன்னால் எங்களின் "இன்குலாப் ஜிந்தாபாத்" "ஜெய்பீம்"
முழக்கங்கள் ஒருபோதும் மண்டியிடாது. நாங்கள் மார்க்ஸின் பேரக்குழந்தைகள்,
லெனினின் வளர்புகள், அம்பேத்கரின் பிள்ளைகள், பெரியாரின் பரப்புனர்கள்,
பகத்சிங்கின் மாணவர்கள் என்பதை நீங்கள் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை,
அன்றைய நாள் வரும்போது எங்களின் கைகளில் கல்வி ஆயுதமாகும், உங்களின்
கரங்களில் விலக்கிடப்படும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். தமிழக
ஆளும் திராவிட கட்சிகளே இப்போதும் சொல்ல கடமைபட்டிருக்கிறோம் நினைவில்
கொள்ளுங்கள் "பெரியாருக்கு பின்னால் திராவிடம் திருடப்பட்டு விட்டது"
என்பதை உரக்கச் சொல்வோம் உரிமைகளை மீட்டெடுப்போம்.
இன்குலாப் ஜிந்தாபாத்!
ஜெய்பீம்!
திராவிடத்தால் எழுந்தோம்!
Subscribe to:
Posts (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...

