Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, April 10, 2019

பிதற்றல்





அவதியுற்ற வலிகளில்
புண் போன்று
ஒட்டிக் கிடக்கும்
வார்த்தைகளை மட்டுமே
கோர்த்து ...

கொன்றழித்த பிறகேனும் விடாமல்
வதை செய்திடும்  அரை சான் வயிற்று பசிதனில்
படிந்து கிடக்கிறது பாசிசங்களின் சூழ்ச்சிகள் ...

பசிக்கு தண்ணீர் தீர்த்தமென ஒவ்வொரு இரவாக கடந்து போகின்ற பொழுதுகளில்
பார்வையில் விழும் யாவும் பற்றியெறிந்து வெடித்துச் சிதறும் தீப்பிழம்பாகி விழுகிறது உணவுக்காக ஏங்கும் கரங்களில் ...

அவர்களை  போல
மாடி வீட்டு பால்கனியில் மிதந்து
பசியாற உண்டு விலையுயர்ந்த
பளிங்கு பேனாவால்
ஐஐஐ ... நிலா நிலா !!!

எனவெழுத ஆசைதான் ...

என்ன செய்ய ...

சாதியென்றும் மதமென்றும்
ஊறிப்போன சமூத்தில் ஆண்டாண்டுகால அடிமையிவன்(ள்) ...

பிதற்றல் வார்த்தைகளை கோர்த்து மூக்கு சிந்தும்
பேனாவால் முள்ளாய்
தேய்கிறேன் ...

விடிந்தால் கொஞ்சம் அசைத்தாவது பாருங்கள் எனதுடலை
பசியின் கொடுமையில்
அன்றுகூட செத்திருக்கிலாம்
நான் ...

Saturday, November 21, 2015

பேஸ்புக்கில் என் சுய பாதுக்காப்பு முறைகள்

உலக மக்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்த ஒன்றுதான் பேஸ்புக்காக
இருக்கிறது. தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை எழுதவும்
பரிமாறிக்கொள்ளவும் மிக எளிதான ஓர் சமூக வலைதளமாக பேஸ்புக்
இருந்திருக்கிறது , இந்த பேஸ்புக்கில் போலி கணக்கர்களின் வருகை
நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டிரு­க்கின்ற வேளையில் அவர்களிடமிருந்து
நம்மையும் நம் நட்பு வட்டங்களையும் சேர்த்தே பாதுகாப்பளிக்கபட வேண்டிய
கட்டாயம் நமக்கிருக்கிறது. ஆகவே நமது பாதுகாப்போடும் அடுத்தவரின்
பாதுகாப்புக்களையும் நாம் தீர்மாணிக்க வேண்டி தள்ளப்படுகின்றோம். பொதுவாக
நம்மை பெரிதும் அச்சுறுத்தும் போலி கணக்குகளின் நோக்கம் நிறைவேற அவர்கள்
பயன்படுத்துவது அதீத சாதிமத வெறியையும் முக்கியமாக ஆபாசத்தையும்
தேர்ந்தெடுக்கிறார்கள­். இதனால் பல தொல்லைகள் ஏற்பட்டு நட்புகள் பல
இழக்கும் அபாயக் கட்டத்தை நாம் நெருங்கிவிடுகிறோம். பேஸ்புக் பாதுகாப்பு
நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினர்கள் எழுதி வந்தாலும் நம்மில்
இன்னும் விழிப்புணர்வு ஏற்படவேயில்லை என்பதே உண்மையாக இருக்கின்றது.
ஆகையால் எனது சொந்தப் பாதுகாப்பு நடைமுறைகளை இங்கே பகிர்ந்துகொள்ள
விரும்புகிறேன். காரணம் கடந்த ஏழாண்டு கால பேஸ்புக் அனுபவத்தில்
எந்தவிதமான போலி அல்லது ஆபாசக்காரர்கள் என்னை நெருங்கவில்லை அவர்களை நான்
நெருங்கவிட்டதுமில்லை­ அப்படியான சில வழிமுறைகளை நான்
கையாண்டுக்கொண்டிருக்­கிறேன் அதை பகிர்தல் மூலம் பேஸ்புக் பாதுகாப்பு
பற்றி சிறிய விழிப்புணர்வு ஏற்படலாம் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
அதேவேளையில் எனது பேஸ்புக் பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள்வதில் சில
சிக்கல்கள் இருக்கின்றன. ஆசைகளை துறக்க வேண்டும், அதிக லைக் மற்றும்
ஷேருக்கு ஏங்கக்கூடாது. முக்கியமாக பேஸ்புக் பிரபலம் என்கிற நோக்கத்தை
கைவிட வேண்டும். உங்களின் பதிவுகளும்,புகைப்படங­்களும்,வீடியோக்களும்­
சிறப்பாகவும் சமூகத் தேவைக்கு உகந்ததாகவும் இருக்குமேயானால் தானாகவே
நீங்கள் பிரபலமடைவீர்கள் அவ்வளவே,,, இனி எனது சுய பாதுகாப்பு முறைகளைச்
சொல்கிறேன்.

* முதலில் ஆபாச லைக் பேஜ்களிடமிருந்து சுத்தமாக விலகியிருக்கிறேன்.
*தேவையற்ற விளம்பரங்களை லைக் மற்றும் ஷேர் செய்யவதில்லை, மேலும்
பேஸ்புக்குகென இருக்கும் பிரத்யேக அப்ளிகேஷனை இன்ஸ்ட்டால் செய்வதில்லை
*ஃப்ரண்ட் ரிக்கொஸ்ட் நூறு அதற்கு மேற்பட்டு வந்தாலும் நிதானமாக
அவர்களின் ஃப்ரொபைலை பரிசோதிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன்.
*ஒருவர் எனக்கு ஃப்ரண்ட் ரிக்கொஸ்ட் அளித்தால் அவரின் கணக்கில் சென்று
கீழ்க்கண்டவைகளை பரிசோதிப்பேன்,,,
a) பேஸ்புக் யூஸர் நேம்
b) லைக்பேஜ், குரூப்,டைம்லைன்
c) பிறந்த தேதி, இடம்,படிப்பு
c) பதியப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அதற்கு லைக்கிட்டவர்கள்
c) அவரின் நட்பு வட்டம்,எனக்கும் அவருக்குமான பொது நண்பர்களின் விவரங்கள்.
இவைகளனைத்தையும் ஆராய்ந்தாலே அது போலிக்கணக்கா என்று கண்டுபிடித்துவிடலாம்­.
சில அறிவுசீவிகள் பெண்கள் பெயரில் உலாவரும் ஆனால் பேஸ்புக் பிரத்யேக
யூஸர் நேமில் ஆண் பெயர் இருக்கும்,சிலர் ஃபெஸ்டிவல் நாளை பிறந்தநாளாய்
வைத்திருக்கும் , சிலர் ஆபாச லைக்பேஜ்க்கு லைக் இட்டிருப்பார்கள், சிலர்
வேண்டுமென்றே பெண்கள் பெயர்களை முன்னால் போட்டிருப்பார்கள் (சிலர்
மட்டுமே,அவர்களின் நோக்கம் குறைந்த காலத்தில் பேஸ்புக் பிரபலமாவது).
*ஃப்ரெண்ட் ரிக்கொஸ்ட் கொடுக்கும் நபர் நடப்பாண்டின்படி 20 வயதுக்குள்ளாக
இருப்பின் எவராயினும் நிராகரித்து விடுவேன்.
*ஃபிரெண்ட் ரிக்கொஸ்ட் கொடுக்கும் நபருக்கும் எனக்கும் பிரதான பொது
நண்பர்களின் எண்ணிக்கு 50 க்கும் மேலாக இருந்தால் மட்டுமே
ஏற்றுக்கொள்வேன்(முந்­தைய ப்ரொபைல் பரிசோதனை செய்த பின்னரும்)
*ரிக்கொஸ்ட் கொடுக்கும் நண்பரின் லைக் பேஜில் ஆபாசங்கள் கூடவே ஆதிக்க
மதவெறி மற்றும் சாதிவெறி லைக்பேஜ்களை சேர்த்திருந்தாலும் உடனே
துண்டித்துவிடுவேன்.
*மிகச்சாதாரணமாகவும்,­மற்றும் அதீத உணர்ச்சியாலும் கெட்ட வார்த்தைகளை
உபயோகிப்போரை என்றுமே சேர்க்க மாட்டேன்
*எனது நட்பு வட்டாரங்களின் பதிவுகளுக்குச் சென்று அனாவசியாம
மேற்குறிப்பிட்ட ஆபாச வார்த்தைகளை உபயோகித்தாலும் இதே நிலைதான்,,
*ஒருகால் நட்பில் சேர்த்துவிட்டபின் வியாபார நோக்கோடு அவர்கள் ஆரம்பித்த
லைக்பேஜ் , குரூப், களில் என்னை சேரவேண்டி அழைப்பு விடுத்தால் உடனே
துண்டிப்பு.
*எனது நட்பு வட்டத்திலிருந்து குறிப்பிட்ட நபர்களை நியாயமான
காரணங்களுக்காக தடைசெய்ய கோரினாலும் உடனே துண்டிப்பு.
* பேஸ்புக் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதில்லை
*இந்த சாமியை ஷேர் செய்யுங்கள் பத்து நிமிடங்களில் நல்லது நடக்கும்
என்றும், ஒரு புகைப்படத்தை போட்டு லைக்கிட்டால் நகரும் ஷேர் செய்தால்
ஆடும் என்கிற அனாமதேய பதிவுகளின் பக்கம் போவதேயில்லை.
*நேரடியாக ரிக்கொஸ்ட் கொடுக்காமல் ஃபாலோ மட்டும் செய்பவர்களின் கணக்குகளை
ஆராய்ந்த பின்னரே அனுமதிப்பு , தவறானவரென தெரிந்தால் உடனே தடை,
*எனது டைம்லைனில் எனக்கு விருப்பனான புகைப்படங்களை மட்டுமே ஃடேக் செய்ய
அனுமதிக்கிறேன். அதற்கான செக்யூரிட்டி வசதிகளை பேஸ்புக் செட்டிங்
தந்திருக்கிறது.
*பேஸ்புக்கிற்கென தனியான ஈமெயில் வைத்து உபயோகிக்கிறேன். எக்காரணம்
கொண்டும் மொபைல் எண் கொடுப்பதில்லை. ஈமெயிலையும் பூட்டியே
வைத்திருக்கிறேன். இதன்மூலம் தேவையற்ற கருப்பழகிகளின் செய்தி
தடைபடுகிறது. அதையும் மீறி வந்தாலும் பதிலளிக்காமல் முதல் அழித்தல் வேலை
மேற்க்கொள்வேன். இவ்வளவுதான் நான் மேற்கொள்ளும் பேஸ்புக் பாதுகாப்பு
நடவடிக்கைகள்,இது தவிர்த்து பேஸ்புக் பரிந்துரைக்கும் மீட்சுவல்
பட்டியலில் அவ்வப்போது உள்நுளைந்து மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி
தடைசெய்யும் நடவடிக்கைகளில் மேற்கொள்வேன். நான் குறிப்பிட்டுள்ள பேஸ்புக்
பாதுகாப்பு நடவடிக்கைகள் பெண்களுக்கும் பொறுத்தமாக இருக்குமென்று
கருதுகிறேன். முதலில் நாம் பாதுகாப்பு உறுதி செய்துவிட்டு பிறகு பேஸ்புக்
மார்க்கிடம் முறையிடுவோம் அதுவே முறையாகவும் இருக்கின்றது.

Monday, April 20, 2015

இளைஞர்களை குறி வைக்கும் நில கையகச் சட்டம்

மத்தியில் ஆளும் இந்துத்துவ
பார்ப்பானிய மோடி அரசின் பல்வேறு
பொய்ப்பிரச்சாரங்களில­்
இதுவும் ஒன்று . என்னவென்றால் "நிலம்
கையகப்படுத்துதல் சட்டமானது அமலுக்கு
வந்தால் இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு அதிகரிக்கும்"
நாக்கூசாமல் எப்படி இவர்களால் பொய்யை
பரப்ப முடிகிறது என ஆச்சர்ப்பட
தேவையில்லை ஏனெனில் பொய்யை
உண்மையெனச் சொல்லியே ஆட்சி
பிடித்தவர்கள்தானே ஆளும்
ஆர்எஸ்எஸ்ஸான பிஜெபி. உண்மையில்
நிலம் கையகபடுத்துதல் சட்டத்தின்
மூலமாக பயனடைவது முதலாளித்தவ
கார்ப்பரேட் கம்பெனிகளும் அதுபோடும்
எலும்புத்துண்டுகளை கவ்வும் அடிமை
அரசுகளேயாகும் . இந்நில கையக
சட்டத்தினை பற்றி அனுபவத்தின்
வாயிலாக எழுதிவிட வேண்டுமென்று
எண்ணம் தோன்றும் போதெல்லாம் எனக்கு
நானே தடையாக இருந்தேன் காரணம்
இப்பதிவும் எப்படியும் கவனிக்கப்படாத
சமூகப் பதிவாகவே கடந்து செல்லுமென
தெரிந்து போனதால் ,,, ஆனால் என்றேனும்
ஒருநாள் இவ்வனுபவம் பேசுமென்கிற
நம்பிக்கையில் எழுதும் தருணத்தை
கட்டாயப்படுத்தி எனக்குள்ளே
ஏற்படுத்துக்கொண்டேன்.நிலம்
கையகப்படுத்தும் சட்டத்தின்
முதற்செயல்பாடு மக்களின் அத்யாவசிய
தேவைகளுக்காக அரசோ அல்லது அரசும்
தனியாரும் இணைந்த பொதுத்துறை
நிறுவனங்களோ நலத்திட்ட பணிகளுக்காக
மக்களிடம் நிலம் கோரப்பட்டு அந்நிலத்தை
பயன்படுத்தும் முழு அதிகாரத்தை அரசோ
அல்லது பொதுத்துறை நிறுவனங்களோ
பெரும் நிலவுரிமையாகும் . உதாரணமாக
சாலைகள் அமைத்தல் தொழிற்சாலைகள்
அமைத்தல்,போன்ற இன்னபிற
பணிகளுக்காக அரசே நிலம்கோரும்
உரிமையை எடுத்துரைக்கும் சட்டம் நிலம்
கையகச் சட்டம்.
மேற்பார்வைக்கு நல்லதொரு சட்டமாக
திரிபுநிலை பெற்றிருக்கும்
இச்சட்டத்தில் மக்களின் மீதான ஆதிக்க
ஒடுக்குமுறைகள் எண்ணிலடங்காதவாற
ு எழுதப்பட்டும் திருத்தப்பட்டும்
திணிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட
துபோல இச்சட்டத்தினை செயல்படுத்த
முதலாளித்துவ ஏகாதிபத்திய
கார்ப்பரேட்டுகள் ஏன் துடிக்கிறார்கள்
என்பதற்கான காரணத்தை
அலசத்தேவையில்லை உற்று
கவனித்தாலே அவ்வுண்மை
புலப்படும்.அனுபவம் இனி மெல்லப்
பேசும் :
மக்கள் விரோத போக்கிற்கு இரு தேசிய
கட்சிகளுமே ஒன்றுக்கொன்று
சளைத்ததில்லை என்பதை நாமறிவோம்
அதைப்போலவே அன்றைய வாஜ்பாய்
அரசின் பெருந்திட்டக் கனவான "தங்க
நாற்காலி திட்டம்" காஷ்மீர் முதல்
கன்னியாக்குமரி வரையிலான அகல
நான்கு வழிப்பாதை அமைப்பதான திட்டம்
அடிகல் போடப்பட்டு பின் வந்த
காங்ரஸானது அதனை செயல்படுத்தியது
என்பதனை நாமறிவோம் . மக்களின்
பயணச்சுமையினை குறைக்கும்
நற்திட்டமாக இத்திட்டத்தினை
எடுத்துக்கொள்ளலாம்.ஆனால்
உறிஞ்சப்பட்ட மக்களைப் பற்றி எப்போதும்
நாம் சிந்திக்கவில்லை என்பதே
கவலையளிக்கிறது . ஒரு சாலையை
மிதிக்கப்படும் போது அச்சாலையை
உறுவாக்க முதலாளித்துவ
ஏகாதிபத்தியர்கள் எண்ணிலடங்கா
ஏழைகளின் வயிற்றில் மிதித்து குருதி
குடித்தார்கள் . இதுபற்றி நமக்கேதும்
கவலைகள் ஏற்படவில்லையே என
ஆதங்கப்படுகிறது மனம்.இதன்
காரணமாகத்தான் இச்சட்டத்தின்
நியாயப்படுத்துதலை பலர்
முன்னெடுக்கிறார்கள்.
தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னை-
திருச்சி வரையிலான தங்க நாற்காலி
திட்டம் அமலாக்கப்படுத்தப்பட்ட நேரமது ,
இரண்டு தேசியநெடுஞ்சாலைகள்
(NH45,NH66) ஒன்றாக இணையும்
திண்டிவனத்தில் எங்களின் பகுதியாக
அச்சாலையமைக்கும் பணியானது
செயல்படுத்த முடிவானது. முதலில்
பணச் செல்வந்தர்கள் அங்கம் வகிக்கும்
நிலத்தினை கையகப்படுத்தப் போவதாக
உரியவர்களுக்கு தக்க அறிவிப்பு
கொடுக்கப்பட்டது ஆனால் பயனில்லை
முதலாளித்துவர்கள் தங்களின் ஆதிக்க
பணபலத்தால் எதிர்த்து அவரவர்
நிலங்களை தக்கவைத்துக்கொண்டார்கள்.
பிறகு பெரும்பான்மையான
வறுமைகோட்டிற்கு கீழே வாழும் எங்கள்
பகுதியின் மீது ஏகாதிபத்தியர்களின்
பார்வை விழுந்தமையால் நிலம்
கையகப்படுத்தப்போவதாக எவ்வித
முன்னறிப்புமின்றி திடீரென்று செய்தி
வெளியாகி அதற்கான நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டது. அரசில் தொடங்கி
நீதித்துறை வரையிலான முதலாளித்துவ
ஆதிகத்தை எதிர்த்து ஒன்றும்
செய்யமுடியாத கையறு நிலையிலேயே
வறுமையின் பிடியிலுள்ள மக்கள்
இருந்தார்கள். ஒருவழியாக அன்றைய காங்ரஸ் ஏழை
எளியோரின் நிலத்தை கையகப்படுத்துவத
ில் வெற்றியும் பெற்றது. 90களில்
பிஜெபியால் கொண்டுவந்த தங்க
நாற்காலித் திட்ட நிலபறிப்புக்கு
நிலத்திற்கான மதிப்பினை 2007ல்
காங்ரஸ் செயல்படுத்தியது கிட்டத்தட்ட
பதினேழு ஆண்டுகளுக்கான
நிலமதிப்பை இழந்தே ஏழை எளியோர்கள்
இழப்பீட்டுத் தொகையினை பெற்றார்கள் .
அதனையும் முழுமையாக அரசானது
வழங்கிடவில்லை பல்வேறு
இடைத்தரகர்கள் லஞ்சத்தில் ஊறியவர்கள்
போக சொற்பமான தொகையையே அம்மக்கள்
பெற்றார்கள் அதுவும் தவணை
முறையில்,அதற்கும் சில போராட்டங்களை
எடுத்துச்செல்லும் சூழலுக்குத்
தள்ளப்பட்டார்கள். இறுதில் வரிசையாக
நிலமிழந்தவர்கள் அப்போதைகான
இருப்பிடங்களைத் தேடி அலைவதிலேயே
இன்றளவும் காலத்தை
செலவிடுகிறார்கள் என்பதை யாரும்
கவனிக்கப்போவதில்லைதான்.
விளைநிலங்களையும்,குடி
சைமனைகளையும் நிலம் கையக
சட்டத்தால் பிடுங்கிய முதலாளித்துவ
அரசானது எவ்வித முன்னறிப்புமின்றி
அவ்வேழை எளியோர்கள் உரிய மாற்று
இருப்பிடம் தேடியலையும் முன்னரே
நிலத்திலுள்ள குடிசை வீடுகளை அகற்ற
ஒரு விடியற்காலையை தேர்ந்தெடுத்து
யாருக்கும் தெரியாமல் நிலச்சீர்
வண்டியினை(JCB எனப்படும் ஃபுல்டௌசர்)
வரிசையில் நிறுத்தி உடனடியாக
நிலத்தை விட்டு வெளியேறுமாறு
அறிவுறுத்தி கட்டளை பிறப்பித்தது. 56
குடும்பங்களின் சார்பாக 19 வயதில் நான்
தலமையெற்ற முதல் போராட்டம் அதுதான்.
உயிரை பணயம் வைத்து அணிவகுத்து
நின்றிருந்த நீலச்சீர் வண்டியின் கீழே
படுத்து "எங்களை ஏற்றிவிட்டு பிறகு
நிலங்களை எடுத்துக்கொள்"என்று
முழக்கமிட்ட தருணத்தை இன்றும்
எங்களால் மறக்கமுடியாது. போராட்ட
வெற்றியின் காரணமாக
அணிவகுத்திருந்த வண்டிகள்
பின்தள்ளப்பட்டது. பிரச்சனைகள்
மெம்மேலும் புதுப்புது வடிவங்களாக
உருபெற்றது.கொலைமிரட்டலில் தொடங்கி
பணபேரத்தில் வந்துநின்ற
பிரச்சனைகளுக்கு மத்தியில்
சமூகநீதியே வென்றது. அதன்பிறகு 15
நாட்கள் அவகாசம் கொடுப்பதாக நிலத்தை
பிடுங்கியவர்கள் தெரிவித்தார்கள்.
போதாதென்று மீண்டும் தொடங்கியது
போராட்டம். இறுதியாக எங்களின்
மூன்றுமாத கால அவகாச
கோரிக்கையினை முதலாளீத்துவ
ஏகாதிபத்தியர்கள் ஏற்றார்கள்.நிலத
்திற்கான உரிய மதிப்பினையும் இழந்து
நிலத்தின் மீதான உரிமையையும்
இழந்து, விவசாய விளைநிலங்களையும்
இழந்து வீதியில் நிற்கும் ஏழை
எளியோர்களின் உரிமைகளை
தக்கவைத்துக்கொள்ளவே பல்வேறு
போராட்டங்களை முன்னெடுக்க
வைக்கிறது முதலாளித்துவ கார்ப்பரேட்
அரசு. இதுபற்றி எவ்வித கவலையோ
வறுத்தமோ இல்லாத முந்தைய
போக்குவரத்து அமைச்சர் டி ஆர் பாலுவும்
சாலையை திறப்பதற்கு மட்டும்
வந்துவிட்டு கடமை முடிந்ததெனவும்
கிளம்பிவிட்டார். எத்தகைய ஊழல்
நடந்திருக்கிறதென்பது நாட்டிற்கே
வெளிச்சம். அவ்வாறு இருக்கையில்
தற்போது ஆட்சியிலிருக்கும் இந்துத்துவ
பார்ப்பானிய பிஜெபி அரசானது, நில
கையக சட்டத்தின் மூலம்
இளைஞர்களுக்கு வேலைவாய்பானது
அதிகரிக்கும் என்று குற்ற உணர்வு
கொஞ்சம் கூட இல்லாமல் இந்துத்துவ
பார்ப்பானிய பிஜெபி பிரச்சாரம் செய்வது
மிகவும் கண்டிக்கத்தக்கது. நிலமிழந்த
எங்களின் 56 குடும்பங்களில் சுமார்
இருபது இளைஞர்களின் (என் வயதொத்த)
வாழ்வினை கேள்விக்குறியாக்கியதே
அன்றைய காங்ரஸூம் பிஜெபியும்தானே,
இந்த நில கையக சட்டத்தின் மூலம்
பெரிதும் பயண்பெறும்
பணமுதலைகளான முதலாளித்துவ
கார்ப்பரேட் அரசுகள் என்றேனும்
ஒருதடவையாவது மக்களைப் பற்றி
சிந்திக்கிறார்களா? என்றால் நிச்சயமாக
இல்லையென்றேச் சொல்லலாம் . பிரதமராக
வலம் வரும் இந்துத்துவ பார்ப்பானிய
மோடியே இவர்களுக்கான பெரும் அரணாய்
விளங்குகிறார். குற்றவாளிகளை
ஆளச்செய்திடும் குடியரசு மக்களல்லவா
நாம். சிந்திக்க மறந்து இன்றும்
சீரழிந்துக்கொண்டிருக்கிறோம்.இந்த
மண்ணை நேசிப்பவர்களாக நாம் எப்போது
உருமாறப்போகிறோம் சமூகத்து
அவலங்களை இப்போதேனும் வாய்திறந்து
பேசி வேண்டாம் நில கையகச் சட்டமென
போராட்டத்தினை முன்னெடுக்கும்
காலச்சூழலை நாம் பெற்றிருக்கிறோம்
என்பதனை மறந்துவிடக்
கூடாது.இறுதியாக சமூகத்திற்கு
தேவையான தேவைகளை நாம்
பூர்த்திசெய்து அதனை புகழ்ந்து
வரவேற்பதில் எத்தவறுமில்லை ஆனால்
அத்தேவைகளால் இழந்த இழப்பீட்டு
மக்களையும் நாம் நினைவுக்கூறுதல்
வேண்டும்.இழந்த குடிசைகள்,விவசாய
நிலங்கள்,ஏரிகள்,குளங்கள்,இன்னும்
எத்தனையோ உரிமைச் சொத்துக்களின்
மீதுதான் நீங்கள் பயணப்படும் சாலைகள்
அமையப்பெற்றன. இழப்பினை என்றுமே
நினைவிலேற்றி அதற்காகவும் கொஞ்சம்
வருத்தப்படுங்கள் என்பதே என்
தாழ்மையான வேண்டுகோளாக
இருக்கிறது.வேண்டாம் எங்களுக்கு நிலம்
கையகப்படுத்தும் சட்டம்.

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...