Showing posts with label தமிழகத் தேர்தல் 2016. Show all posts
Showing posts with label தமிழகத் தேர்தல் 2016. Show all posts

Friday, May 20, 2016

2016 இல் மீண்டும் ஜெயலலிதா , காம்ரேட்களின் கவனக்குறைவு,,,

2011 இல் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த ஜெயா
தலைமையிலான அதிமுக அரசு நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் 2016 மூலம் 134
இடங்களை பெற்று மீண்டும் ஐந்து ஆண்டுகளை தக்கவைத்துக்கொண்டது . இதில்
தனிப்பெரும் எதிர்கட்சியாக திமுக அங்கம் வகிக்கிறது. திமுகவானது 88
இடங்களை பெற்றிருக்கிறது. இதன் மூலம் மாற்று என்பது எனக்கு நானேதான்
என்று காட்டியிருக்கிறது ஜெயா அரசு. அவரின் தேர்தல் பிரச்சாரத்திலேயே
இதனை கூறியிருக்கிறார். அந்த வகையில் வரப்போகிற ஐந்து ஆண்டுகளிலும்
தாங்கள் அடிமையாகவே இருக்க விரும்புகிறோம் என்று தங்களின் ஆட்காட்டி
விரலை அடகு வைத்திருக்கும் தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த நன்றிகள்! இங்கே
மக்களின் மனநிலையை புரிந்துணர்வு கொள்ளாமல் அவர்களின் மீதே குறைகூறும்
போக்கு அரசியலுக்கு நல்லதல்ல என்பதை உணர வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
எந்தவிதமான அதிருப்தியையும் ஒரு செயற்கையான திருப்தி மனங்களை
மாற்றக்கூடியதாக இருக்கிறது. இன்னமும் இடதுசாரியமும் இன்னபிற முற்போக்கு
அரசியல் கட்சிகளும் வெகுசன மக்களையும் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை
மக்களையும் நெருங்கிச் சென்று அந்த செயற்கையான திருப்தியை உடைக்கும்
சக்தியாக உருபெற்றிடவில்லை என்பதே இத்தேர்தல் எடுத்துரைக்கிறது.
மக்களுக்கும் இடதுசாரியத்திற்கும் இருக்கும் நீண்ட இடைவெளியை
போக்குவதற்கு அவர்களுக்குண்டான ஒரேவழி மக்கள் தொடர்பை வலுப்பெறச்
செய்தலேயாகும். கம்யூனிஸ்ட்டுகள், திராவிட இயக்கங்கள் மற்றும் ,தலித்
இயக்கங்கள் மீது மக்களுக்கு ஒரு அபிப்ராயமும் மரியாதையும் கூடுதலான
நம்பிக்கையும் இருப்பது உண்மை. ஆனால் அது ஏன் தேர்தலின் போது ஓட்டு
வங்கியாக மாறவில்லை என்பதை கண்டறிந்து அதற்கான தேவைகளையும்
பூர்த்திசெய்தால் மட்டுமே தமிழகத்தில் அதிமுக எனும் ஏகாதிபத்திய
முதலாளித்துவ ஜெயா அரசை வீழ்த்த முடியும். பல முற்போக்குச் சிந்தனை
அறிவுசீவிகள் சாதிவாத பாமக, மதவாத பாஜக, இனவாத நாம் தமிழர் போன்ற
கட்சிகள் வீழ்ந்ததற்காக தமிழகத்தில் பெரியார் மண் உயிர்ப்போடு
இருப்பதாகவும், இங்கே அவற்றுக்கு வேலையில்லை என்பதாக இத்தேர்தல்
காட்டுகிறதென பூரித்துப்போகிறார்கள­். அப்படியெனில் ஜெயாவின் அதிமுக
கட்சியானது பகுத்தறிவை புகட்டும் கட்சியா? அதிமுக பார்ப்பானிய
இந்துத்துவத்தில் வராதா?
அதிமுக சாதியவாதத்திற்கு இடம் தரவில்லையா? இனவாதத்திற்கும்
அதிமுகவிற்கும் வெகுதூரமா? அந்த முற்போக்கு அறிவுசீவிகளே பதிலெழுதட்டும்.
ஒட்டுமொத்த பார்ப்பானியத்தின் முகங்களாகவே அதிமுக இருக்கிறது என்பது
உலகறியும். அதற்கான சான்று ஜெயா தொலைக்காட்சியில் ஜோதிட சிகாமணிகள்
இடம்பெற்றதையும், கருணாஸ்,தனியரசு போன்ற சாதிவாதிகள் வெற்றிபெற்றையும்
மிகத்தாராளமாக குறிப்பிடலாம். முதலில் முற்போக்காளர்கள் தங்களை தாங்களே
திருத்திக்கொண்டு மக்களிடம் நேரடித் தொடர்பில் அவர்களோடு நெருங்கிப் பழகி
முற்போக்குச் சிந்தனைகளை விதைக்கவும், கற்பிக்கவும் செய்தலே போதுமானதாக
இருக்கிறது. மேலும் சனநாயகம் வீழ்ந்து இங்கே பணநாயகம் தலைதூக்குவதை 570
கோடிகள் சுமந்த கண்டெய்னர்கள் கண்ணெதிரிலேயே காட்சியாகின்றன. அதிலிருந்து
தமிழகத்தை மீட்டு மீண்டும் சனநாயகம் அமைக்க வேண்டிய பொருப்பும் உள்ளது.
இனிவரும் ஐந்து ஆண்டுகளில் நமது மக்களை ஆளப்போகும் அதிமுக அரசிடமிருந்து
எந்தவித நலத்திடங்களையோ, சமூக முன்னேற்றங்களோ எதிர்பார்க்க முடியாது
என்பது மிகுந்த வேதனைதான் என்றாலும் அதற்குச் சவாலாக ஒரு மாபெரும்
எதிர்கட்சியாக திமுகவை பெற்றிருக்கிறோம் என்பது மகிழ்சியே, திமுகவிற்கு
வாழ்த்துக்கள். சர்வாதிகார ஆட்சியை ஓரளவிற்கு திமுக அடக்கி தன்
கட்டுக்குள் கொண்டுவரும் என எதிர்பார்ப்போடு இருக்கிறோம் அவ்வளவே,,,

Tuesday, May 10, 2016

ஊமைகள் வேட்பாளர்கள் எனில் சட்டசபையிலும் ஊமைகள் தானே!

தமிழகத் தேர்தல் 2016 இன் உச்சக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துக்
கொண்டிருக்கும் வேளையில் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சித்
தலைவர்கள் ,மற்றும் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்கள்,­ அக்கட்சிகளின்
பிரச்சார பீரங்கிகளாக களத்தில் இறக்கப்பட்டுள்ள திரைத்துறை நடிகர்
நடிகைகள் கையில் மைக்குடன் பிரச்சார வாகனத்தை அலங்கரிக்கிறார்கள் .
அவர்களின் பக்கத்தில் வெள்ளந்தியாக முகத்தை வைத்துக்கொண்டு எதுவும்
அறியாததுபோல் கைகளை கூப்பிக்கொண்டு பேசாமல் அமைதியாக அந்த தலைவர்கள்
அல்லது நடிகர் நடிகைகளின் பக்கத்தில் தலைவிதியே என
நின்றுக்கொண்டிருக்கி­றார்கள். இதில் அதிகமாய் கவனித்தது ஒன்று அனேக
வெட்பாளர்கள் நிற்கக்கூட முடியாமல் வாகன கம்பிகளில் உடம்பை
முட்டுக்கொடுத்து பரிதாபமாய் சிலையாக நிற்கிறார்கள். இங்கே தான்
வேட்பாளர்கள் மீது
வாக்காளர்களுக்கு சந்தேகக் கேள்விகள் எழுகிறது. அது என்னவெனில்
வேட்பாளருக்கு பேச்சு வருமா வராதா? வேட்பாளர் என்ன ஊமையா? பொதுமக்களை
பார்த்து ஊமையாக கைகூப்பி வணங்கும் வேட்பாளர் வெற்றி பெற்ற பின்
சட்டசபையில் என்னத்த பேசி கிழிக்கப்போகிறார்?
கொஞ்ச நேரம் ஒரு வாகனத்தில் நிற்க முடியாத வேட்பாளருக்கு ஒற்றைக் காலில்
தொங்கியபடி மணிக்கணக்காய் ரயில், பேருந்து பயணம் செய்யும் பாமரனின் வலி
தெரியுமா? தெரியாதா?
தன் சொந்த உடல் மொழியாலும் பேச்சு மொழியாலும் தேர்தல் வாக்குறுதிகளை
தரமுடியாத வேட்பாளர் அதை நிறைவேற்றாமல் போனால் தப்பித்துக் கொள்வாரே!
பிறகு யாரிடம் முறையிடுவது? கட்சி மேலிடம் என்பதும் தலைவர்கள் என்பதும்
கைபேசியில் வரும் "தொடர்பு எல்லைக்கு அப்பால்" என்பதாகவே இருக்கையில்
ஏமாற்றப்படுவது வாக்காளராகிய நாமாக்கத்தானே இருக்கிறோம். இப்படியே
வாக்களிக்காமல் இருந்துவிட்டாலும் சனநாயக உரிமை மீறல் என்பார்களே! சரி
49ஓ வுக்கு போனால் அது புன்னியமற்ற அனாமத்து கணக்காகவே இருக்கிறதே!
இறுதியாக என்னதான் செய்வது? இப்படியான சந்தேக கேள்விகளையும், குழம்பிய
மனநிலையையும் வாக்களர்களிடத்தில் வேட்பாளர்கள் உறுவாக்கிவிட்டுச்
செல்கிறார்கள். வேட்பாளர்கள் தரப்பில் "அதான் தேர்தல் அறிக்கை"
கொடுத்திருக்கிறோமே! எழுத்து ஊடகம் , காட்சி ஊடகம் என அனைத்திலும்
பரப்புரை செய்திருக்கிறோமே அதை பார்த்து, படித்து வாக்களியுங்கள்
எங்களுக்கு என்கிறது.
எல்லாம் சரிதான் பொதுமக்களாகிய எங்களை பார்த்து வாய்திறந்து பேசக்கூட
முடியாத வேட்பாளர்களாகிய நீங்கள் தற்போது ஆளும் அதிமுக ஜெவின் பறக்கும்
ஹொலிக்காப்டரை கண்டதுமே தரையில் மண்டியிடும் அடிமையாளர்களின் அதே
செய்கையைத்தானே கொண்டிருக்கிறீர்கள்.­ அடிமையாளர்கள் என்றுமே குரலை
உயர்த்தி பேசுவதை விரும்ப மாட்டார்கள் என்பதை தானே இது உணர்த்துகிறது.
ஒரு வேட்பாளரின் உடல்மொழி , பேச்சுமொழி, பேச்சின் நயம் , குரலோசை
ஆகியவற்றை வாக்காளர்கள் எதிர்பார்ப்பதில் ஏதும் தவறில்லைதானே! சரி இது
காலங்காலமான முறையென்றாலும் அதனை மாற்றிக்கொள்ள தலைவர்களுக்கும்
வேட்பாளர்களுக்கும் சிக்கலேதும் இல்லைதானே! பிறகேன் வேட்பாளர்களை
பேசுவதற்கு அனுமதிக்க மறுக்கிறார்கள் தலைவர்களும்,
ஒருங்கிணைப்பாளர்களும­்,,, இதில் பிரச்சாரங்களில் ஈடுபடும் நடிகர்
நடிகைகள் காசுக்காகவும் தனது தொழிலின் ஆதாயத்திற்காகவுமே பேசுகிறார்கள்.
ஒருவேளை அவர்களை விட வேட்பாளர்கள் சிறப்பாக பேசக்கூடியவர்கள் எனில்
நிச்சயமாய் அனேக மக்கள் எதிர்பார்க்கும் திரைத்துறை-அரசியல்தல­ையீடு
தொடர்பற்றதாக மாறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. நான் யாருக்கு
வாக்களிக்க விரும்புகிறேனோ அவரின் உண்மைக் குரலை கேட்டு அவர்தம் வாயால்
தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் எனும் நம்பிக்கையை நான் பெற
விரும்புகிறேன் இதில் தவறேதும் எனக்குத் தோன்றவில்லை. தேர்தல் பிரச்சார
இறுதி நாட்களுக்குள் இதனை யாரேனும் வேட்பாளர்கள் நிறைவேற்றுவார்களா?
எனும் எதிர்பார்ப்பில் வாக்காளனாகிய நான்.

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...