Wednesday, August 19, 2015

சோசலிஸம் எதற்காக?

சோசலிஸம் எதற்காக?(ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட...

Friday, August 14, 2015

கம்யூனிசத்தின் கோட்பாடுகள்

கம்யூனிசத்தின் கோட்பாடுகள்(ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்) தமிழாக்கம்: மு.சிவலிங்கம்[கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல்...

Sunday, August 02, 2015

"தாய்ப்பால்" - சிறுகதை

கொஞ்சம் கூட சலனமில்லாமல் எப்பொழுதும் போல அலார மணி அடித்தால் எழுந்து சோம்பல் முறிக்கும் மனிதர்களை போல பறவைகளின் கீச்சிடும் குரலை கேட்டுக்கொண்டே விழி திறக்கத் தொடங்கியிருந்தது விடியல்.யாரிடத்திலும் ஏற்றத்தாழ்வுகளை காட்டுவதில்லை அது,,, அனைவருக்குமான பொதுவுடைமையாய் எழுந்திரு தோழா!! விடிகிறது காலை என்றழைக்கிறது விடியல். தினமும் தன் வேலையை தானே தொடங்கி வைக்கிறது அது,,, எல்லாரிடமும் ஏதோவொரு தொடர்பு வைத்திருக்கத்தான் செய்கிறது. துக்கமோ,மகிழ்சியோ அனைத்திலும்...

Saturday, August 01, 2015

மானைக் கொன்றால் கைது,மனிதனைக் கொன்றால்????

"மான் வேட்டை" என்றதும் உடனே நமக்கு நடிகர் சல்மான்கான் தான் நினைவுக்கு வருவார், சிறைவாசம்,பெயில், மீண்டும் சிறைவாசம் மீண்டும் பெயிலென்று,,, இடைவிடாது திரையுலகிலும் தலைகாட்ட சட்டமும் அவருக்கு அனுமதி வழங்கித்தானிருக்கிறது. ஆனால் சல்மான்கானை ஒதுக்கித் தள்ளிவிட்டு தமிழகத்தை திரும்பிப் பார்த்தால் இன்றைய செய்தியொன்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்ய ,, யாருக்கும் அச்செய்தி அவ்வளவு வேகமாக பரவியிருக்கவுமில்லை என்பது நமக்கே கொஞ்சம் தாமதமாகத்தான் புத்திக்கு எட்டுகிறது....

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...