மௌனங்களை திறந்து
நானும் நீயும் கைபேசியில்
உரையாடலை தொடங்க ...
மூச்சுக்குழல் வழியே
பெரும் முனகல்கள் எழுப்பி "ம்ம்ம்" என்கிற
அடையாள மொழியில்
இன்னும் பேசு என்கிறாய் ...
உனக்கும் எனக்குமான
நீள உரையாடலை
முடித்து வைக்க ஏதுவாய் தோன்றிடும் இயல்பின் யாதொரு குறுக்கு நிழல்களுக்கும்
வழிவிடாது தொடரும்
பெரும் சமிக்ஞை கடத்துகை தானோ இந்த பேரன்பில் கசியும் காதல் ...
கொஞ்சி பேசுதல் குறைவே என்றாலும்
குழந்தை மொழியாகிறது உன் குரல் எனக்கு ...
தொட்டு விடும் தூரம் இல்லையென்றாலும்
தொடுதலோடு தொடங்கி இம்சையில் சினுங்குகிறது நம் கைபேசி ...
ஏதேதோ ... எண்ணங்கள்
தோன்றி வளர்ந்து வளர்ந்து விடைபெறும் பொழுதுகளில்
அழைப்பு துண்டித்த போதிலும்
உன் குரல் இன்னும் ஒலித்துக்கொண்டேதானிருக்கிறது
ராட்சஷி ...
0 comments:
Post a Comment