Thursday, August 21, 2014

--ஹைக்கூ--மேனகைகள்

சத்தான தழைகளை
தேடியது
ஆடு
கத்தியுடன் கசாப்பு
-கடைக்காரர்


*****+***+***+****


பலநாளாய் தேடிய
பறவை
இறந்து கிடந்தது
-விமானம்


*****+***+***+****


அம்மி
எங்கென
தேடியது குழவி
பிறந்தது
-ஆடி


*****+***+***+****


பசியில் குழந்தை
குடிகார தந்தை
-எழுந்தான் எமன்


*****+***+***+****


இம்சையில்
பஞ்சுமெத்தை
அனல் பரப்பியது
-காமம்


*****+***+***+****


ஏவாளுக்கு
திகட்டியது
நியூட்டனின்
கரங்களில்
-ஆப்பிள்


*****+***+***+****


மலரை தழுவி
தரையில்
அழுக்கானது
-மழைநீர்


*****+***+***+****


மஞ்சள் வாசத்துடனே
மேனகைகள்
ஊர்வலம்
காலை முகம்
காட்டியது மலர்


*****+***+***+****


குங்குமம் தூவி
கண்ணயர்ந்தது
-இளங்கதிர்


*****+***+***+****

1 comment:

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...