Monday, December 01, 2014

மனிதம் மரணிக்கலாமா?

எங்கோ
ஒரு மூலையில்!
எவனோ ஒருவன்
பசிக்கான வேட்கையுடனே
படுத்துறங்குகிறான்!
விழித்துக்கொண்டது
வறுமை!
அவனை பார்த்தவாரே!
அடுத்த வழியில் கடக்கிறான்!
அவனும்
வறுமையின்
பிடியில்!
வந்ததும் , சென்றதுமாய்
வாகனங்கள்
வந்திறங்கவில்லை
யாரும்!
வாழும் பணத்தாசை பேய்கள் தானோ அவர்கள்!
செய்வினையோ,
தெய்வச் செயலோ,
பாவத்தின்
பிரதிபலனோ!
முனுமுனத்த உதடுகளும்
முன்னால் நிற்கிறதே தவிர! முந்திவந்திட வில்லை முயற்சியும் செய்திடவில்லை!
வறுமையின் வலி இதுவென அம்மூளைக்கு எட்டுமா!
வந்ததொரு விடியல்!
வைகரை வெளிச்சத்தில்
துள்ளி குதிக்கும் மழலையது!
தூய்மையின் திருவுருவமது!
பள்ளிக்கு பக்குவம் வந்ததே!
பருவத்து நிலவு பொழிந்ததே!
இதோ!
படுத்துறங்கும் பசிப்பினிக்காரனை
பிஞ்சு விரலால்
தொடுகிறது!
பிழையில்லா பாசப்பிணைப்பிதுவோ!
தன்பசிக்கு தாய்தந்த
உணவை திறக்கிறது!
புத்தன் பூமியில் வந்திறங்கினானோ!
பக்குவமாய் பிசைந்தெடுத்து பசிவுதட்டில்
ஊட்டுகிறது!
"கருணை" இன்னும்
கண்மூடிடவில்லை! சவக்குழியில் அவை வீழ்திடவுமில்லை!
"தெரேசா" தென்றலாய்
வீசிக்கொண்டிருக்கிறாள்!
வீதியினை கவனியுங்கள்!
விரட்டிடுவோம்
வறுமையினை! வாழ்த்திடுவோம் கருணையினை!
வளர்த்தெடுப்போம்
அன்பினை!
இணைந்த கரங்களால்
இனியும் தாமதிக்காது
இப்பூவுலகில் நாமிணைந்து!
மனிதம் படைப்போம்!
வாருங்கள் நாம்
மனிதம் படைப்போம்!

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...