
செய்தித்தாள் சுமந்து வந்த தினசரி பெண் பால் வன்புணர்வை சேர்ந்தே வாசித்தோம்! சேற்றில் கிடக்கிறது சமூகமென்றேன்! அவ்வப்போது பேனாவும் அறிக்கை எழுதித் தள்ளியது! ஆங்காங்கே மேடைபேச்சும் அவிழ்த்து விட்டது ஆத்திரத்தை! குறிப்பெழுதினேன் பெண்ணின வாழ்வுதனை! கணவன் நெறியுடன் வாழ்பவன் நம்பினாயல்லவா நீ! காற்றில் தவழ்ந்து நதியில் விளையாடி நடிகனானேன் நான்! "பேயாட்டமிடும் பெண்ணடிமை" தலைப்பினை நீயே! தயாரித்து தந்தாய்,,, அணிந்துரையும் அழகாய் அமைந்து விட,, விற்றது புத்தகம்...