Monday, January 26, 2015

அடுத்த முகம்

செய்தித்தாள் சுமந்து வந்த தினசரி பெண் பால் வன்புணர்வை சேர்ந்தே வாசித்தோம்! சேற்றில் கிடக்கிறது சமூகமென்றேன்! அவ்வப்போது பேனாவும் அறிக்கை எழுதித் தள்ளியது! ஆங்காங்கே மேடைபேச்சும் அவிழ்த்து விட்டது ஆத்திரத்தை! குறிப்பெழுதினேன் பெண்ணின வாழ்வுதனை! கணவன் நெறியுடன் வாழ்பவன் நம்பினாயல்லவா நீ! காற்றில் தவழ்ந்து நதியில் விளையாடி நடிகனானேன் நான்! "பேயாட்டமிடும் பெண்ணடிமை" தலைப்பினை நீயே! தயாரித்து தந்தாய்,,, அணிந்துரையும் அழகாய் அமைந்து விட,, விற்றது புத்தகம்...

லிமரைக்கூ " இன்று குடியரசுதினம்"

சட்டத்தை வளைத்த அரசியல்வாதி வறுமை அளக்கிறது விட்டத்தை ___ பதுங்கி விற்றார்கள் சாராயத்தை இன்று குடியரசு தினம் குடிகாரன் விழி பிதுங்கியது ____ சமாதான புறாக்கள் விதவையாகின பூக்களால் குவிந்த சமாதிகள் ____ குடியரசு தினம் காந்தியின் சிலையருகிலேயே சிரிக்கிறான் கோட்சே குடிமகனாக _____ வியர்வைகள் இனிக்குமா! இந்தியா பெற்ற குடியரசால் உலகநாடுகள் வியப்பில்,,, ____ பெண்ணே படு ஆணாதிக்க குரல் ஆசிட் உடலை கிழித்தது பேனா,, ____ குழந்தைகள் வெய்யிலில் கருகினார்கள் இனிக்கவில்லை...

Sunday, January 25, 2015

குடியரசுதினம்

வசந்த கால செடியொன்று துளிர் விட துடிக்கையில்! தடுத்த துப்பாக்கிகளோ தரையில் விழ! பூமித்தாய் வயிற்றில் பிரசவித்த குழந்தை செடி துளிர்விட தொடங்கியது! தோழமைகளை அனைத்தபடி அடைந்தது சுதந்திரம்! அன்றுதான் ஆனந்தம் ஆகஸ்ட் பதினைந்து! இந்தியதாயின் இயலாத நிலையோ! முடமானது முழுச்சுதந்திரம்! ஆண்டது அப்போதும் ஏட்டிலும் இல்லாத இங்கிலாந்து அரசியல் சாசனம்! எழுத வழிதேடி இந்தியத்தாயின் விழிகளில் இமைதேடி! அமைத்தார்கள் அரசியல் நிர்ணய சாசன சபையொன்றை! கடமை தவறாமல் தடைகள் பல...

Friday, January 23, 2015

சிறுகதை "மதுவின் பரிசு"

அமைதி அழகியலில் என்றுமே தனித்துவிடப்படும் அசுத்தமான அரசு மருத்துவனை அது , அரசின் செயல்பாடற்றது என்று மக்களும் , மக்களின் செயல்பாடற்றது என்று அரசும் கைவிரித்த கனவுகளை சுமந்துக்கொண்டு ஒரேயடியில் ஓங்கி நிற்கும் ஆலமரத்தடியில் தன் கடைசிநாளை குறித்துவிட்டு தொட்டால் தொற்றென்று தனித்து துரத்திவிடப்பட்ட நிலையை கூட உணராத ஒரு ஜீவன் தான் சங்கரன் . எவளிடம் சென்றுவந்தானோ தொற்றிக்கொண்டே தொடர்ந்த வார்த்தைகளில் உதறிவிட்ட உறவுகளையும் , இவனுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லியும்...

Thursday, January 22, 2015

மாதொருபாகன் -கடந்துபோன காலச்சுவடு

மாதொருபாகன் -கடந்துபோன காலச்சுவடு கொஞ்சம் இடைவெளியைத் தொடர்ந்தே இந்நாவலுடன் நான் பயணித்ததை பற்றி எழுதுகிறேன் காலவோட்டத்தில் சர்ச்சைகளின் சூழிடமாக அமைந்துவிட்டபடியால் அல்ல , அச்சர்ச்சைகளின் அவசத் தேவையை உணர்ந்தபடியால் எழுதும் கட்டாயத்தில் உந்தப்பட்ட ஓர் ஊதுகுழலாகிப் போனதால் தேவை அதிகரித்துவிடுகிறது . 2011 ஐந்தாண்டு கல்லூரியின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த தருணம் அவ்வப்போது தலைபடும் தமிழுணர்வுப் பசியினைத் தீர்க்க நூலகத் தஞ்சத்தில் உட்புகுவது வழக்கம்...

ஹைக்கூ "தொலைந்து விடாதே"

ஏற்றாத நெருப்பு வற்றாத வறுமை அடுப்பில் வாழ்கிறது -பூனை ___ காமத்தில் மறந்த கேள்விகள் திருப்தியற்ற மணமகள் ___ மலரே முகம் காட்டாதே வீதியில் என்னவள் ___ தடுத்தும் துளிர்விடுகிறது குடைக்குள் -மழை ___ கவிதை எழுதிய பேனா தனிமையை மறந்தது காகிதங்கள் ___ நிலவுக்கு பதிலாய் கொக்கு குளத்தங்கரையில் கூரை வீடு ___ நிகழ்காலத்து வறுமை செங்கல் சூலையில் வெந்தது வாழ்க்கை ___ யாரோ வரைந்த ஓவியம் தலையெழுத்து ___ தொலைந்து விடாதே அருகிலேயே இரு அழைக்கிறது -கைபேசி ___...

Wednesday, January 21, 2015

"மௌனம்"

நெடுங்காலமாய் மௌனமே கசிந்த மொழியாய் விழிகளை தேடியே தொடர்கிறது நம் காதல் முடிவுதான் என்ன? நம் முன்னே எப்போது உடைபடும் உறவினரின் கண்காணிப்பு கேமராக்கள் விடுதலை வேண்டியே காத்திருப்பதில் காதலும் கசியும் மௌனம் தானோ! சுதந்திர பறவைகளுக்கு வேடனிட்ட வலையொரு உரிமைத் தடையல்வா அதுபோலவே துப்பட்டாவில் துடிக்கும் முகத்தினில் தெரிகிறது அமாவாசை முழுநிலவிற்கு முகமூடியிட்ட மூடர்களை தேடியே முழுநேரமும் வீணானது இதில் காதலும் கரைந்தோடியது ஏ! கழுகுகளே பார்வையை திருப்புங்கள்...

ஹைக்கூ " ஈரிதல்சிட்டு "

ஆங்காங்கே மணல் திட்டு கானா தேசத்து பறவைகள் ___ ஆண்பெண் அதுவாகி நின்ற இயற்கை வரம் -ஈரிதல்சிட்டு ___ காந்திக்கு கரைவேட்டி முழுதாய் நணைந்த "குடி"மகன்கள் ___ தாலிக்கு எத்தனை அலங்காரம் வரதட்சனை வேண்டி -விபச்சாரன் ___ வேரில் பூத்த மங்கை விலகியது -பனி ___ கைதியின் கைகளில் பொற்காப்பு வெளியில் தீக்கிரையான -மனிதம் ___ நிலவின் தோழிகள் இரவில் -மின்மினிப்பூச்சி ...

ஹைக்கூ "சுருக்கெழுத்து"

இறந்த உயிர் அழகான சிரிப்பு செடியிழந்த -ரோஜா ___ வறுத்த மீன் எச்சியூரல் உணவத்தில் உதறிய பூணூல் -கயிறு ___ ஏற்றிய கற்பூரம் சுட்டது எதிரே -மீன்விழியாள் ___ பணத்தோடு பிரியாணி பெற்றது வாக்குச்சாவடி உனக்கேன்? -படிப்பறிவு ___ வலிகளின் சுருக்கெழுத்து வாழ்க்கை ___ மக்களைத் தேடி முதலமைச்சர் வந்தது இடைத்தேர்தல் ___ மிருக வதைச் சட்டம் போராடியவர் பசியாறினார் அசைவ உணவகத்தில் ...

ஹைக்கூ "கொலுசொலி"

வெளிச்சம் மறைத்த இரவு திங்களவனை கூவி விற்கிறது -சேவல் ___ ஏப்பத்தோடு அசைபோடும் மாடு புல்லின் மரணம் ___ வீட்டுக்கு வீடு எலும்புறுக்கி நோய் அடைப்பானில் சுத்திகரித்த -தண்ணீர் ___ காந்தியம் பேசியவர் வெட்டினார் சாலையில் வீழ்ந்தது -மரம் ___ திருமணம் முடிந்து மலடியானது -ஞெகிழி _...

Saturday, January 17, 2015

நிலவோடு நடைபயணம்

என்னோடு நிலவும் நிலவோடு நினைவும் நதியோரம் நடைபழகலானோம் தினம் தொடரும் பயணமது பக்குவமாய் தெரிந்தது இவ்வுலகம் தமிழை தவழச்செய்தது முதலில் நிலவுதான் நிழலாடும் நினைவுகளை சுமந்தீரே நீரில் முத்தம் பதிப்பதிலா பதில்முத்தம் தேடுகிறாய்! மனதின் மௌனத்தை கலைத்தேன் பதிலுரை தரவேண்டுமல்லவா! நிலவே நீயும் பெண்தானே உன்னோடு நானிருக்கும் நேரத்தில் நரிகண்கள் நதிவிழுங்கி அத்தோடு ஊடுறுவி இணைந்தார்கள் இவர்களென புதுக்காதல் பூகம்ப பூமிச் சுமையாகுமென புரளிதனை கட்டவிழ்த்து புகழுக்காய்...

கதிரவனே காதலை விரும்பு

இமைகளை மூடினேன் இரவுகளை கனவுகளால் பூட்டினாய்! இளங்காலை இம்சையாகிறது! பூட்டிய கனவுகளோ பூவின் சுமையாகி சுமைதாங்கா சூழ்ச்சி நிழலாகி நீயும் தொடர்கிறாய்! கோபம் நிழல்மீது விழ! நீயோ என்மீது விழ! இது கனவா,, இல்லை நனவா,, கண்ணத்தை கிள்ளிப்பார்க்கும் சோதனையும் நீயே செய்தாய்! நனைந்த உடலை சிலிர்த்து சிங்காரிக்கும் பறவையாக நானானேன்! காதலியே நீ மெய்தானோ! காதல் நம் கையில் கனிதானோ! செங்கீற்றில் சிலை வடித்த கதிரவனே! கேள்!!! காதல் புரிதலின் தருவாயில் பிறைநிலா மூழ்கிடாது...

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...