Friday, February 27, 2015

அவள் குளிக்கிறாள்

அவள் குளிக்கிறாள்
அருகினில்
நானில்லை

அவளும்
பெண்ணல்லவா

அவளின்
உச்சந்தலையில்
தொடங்கி
உள்ளங்கால்
வரையில்

ஒழுகும் சீனத்து
மஞ்சள் நதியின்
வாசம் கண்டு
வசமிழுத்து வாழ்ந்துவிடும் பூஞ்செடிகளின்
மடியில் தவழும்
தேனை

ருசிக்க வந்த
பட்டாம்பூச்சிகளோ
மயங்கி விழ
நான் காதலால்
மயக்க
முற்றிருப்பதை
எப்படி
அறிந்தனவோ
அந்த
பட்டாம்பூச்சிகளென்ற வியப்புதான்

என் மிச்சக்
காதலையும்
சுமந்துச் செல்கிறது சுகமான
காதலிதுதானோ!

3 comments:

பூக்காரி

நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...