Thursday, March 26, 2015

ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைச் சிதறல் .2 (சமூக கட்டமைப்பின் சாரம்) :

உறவுகள் சிதறிக்கொண்டிருக்கும்
இன்றையச் சூழலில் அதற்கான
காரணங்களைத் தேடி புலப்படுத்த
வேண்டியது அவசியமாகிறது இதன்
மூலக்காரணி அல்லது கரு என்னவென்று பார்த்தோமானால்
முதல்தொடக்கமாக "சமூக கட்டமைப்பு" தான்
மேலோங்கி நிற்கிறது ஒரு சமூகம்
எவ்வாறு உறுவாக்கப்பட்டது அதன்
சாரம்ஸம் என்ன அது எந்தநிலையில்
உறவுச்சிதறல்களுக்கு உருதுணையாக
இருக்கிறது என்பதை நாம் அறிய
வேண்டும் அந்த நிலையில் ஒரு சமூகம்
எந்த அடிப்படையில்
உறுவாகிறது என்று பார்த்தோமானால்
பெரும்பாலும் அது நகரமாக இருந்தாலும்
சரி கிராமமாக இருந்தாலும்
சரி வளர்ச்சிபெற்ற ஒர் நவநாகரீக நகரமாக
இருந்தாலும் அவை கட்டமைக்கப்படும்
விதம் வருணாசிரம சாதியப்
படிநிலை எவ்வாறு படிப்படியாக
பட்டியலிடுகின்றதோ அவ்வாறே சமூக
கட்டமைப்பும் படிப்படியான
படிநிலைகளுடனே தான்
கட்டமைக்கப்படுகிறது உதாரணமாக ஓர்
கிராமத்தை எடுத்துக்கொண்டோமானால்
அங்கே முதலாவதாக குடியிருப்பவர்கள்
பிராமிணர்கள் இரண்டாவதாக அந்த
கிராமத்தில் எந்த ஆதிக்க சாதியினர்
(வருணாசிரம அடுத்த படிநிலையாளர்கள்)
எவரோ அவர்கள் இருப்பார்கள் இது "ஊர்"
என்று அழைக்கப்படும்
மூன்றாவது இவர்கள் இருவருக்குமான
அடிமைச்சமூகமான தலித்துகள் தனியாக
ஒதுக்குப்புறமாக (ஊருக்கு வெளியே)
"சேரி" அல்லது "காலனி" என்ற
அடையாளத்துடன் வசித்து வருவார்கள்
இதுவே கிராமம் என்று அழைக்கப்படும்
இதைப்போலவேதான் நகரம் மாநகரமும்
அமைந்திருக்கும் ஒரு வித்யாசம்
என்னவெனில் நகரமும் மாநகரமும்
நவநாகரீகப் போர்வையில் மறைமுகமாக
இக்கட்டமைப்பில் அமைந்திருக்கும் ஆக
இந்தச் சமூக கட்டமைப்பில் ஒருவருக்கும்
இன்னொருவருக்குமான
தொடர்பு என்பது அடிமையை விடுத்து வெறெந்த
உறவுநிலையும் இருக்காது ஊர் மக்களின்
பிரச்சனைக்கு சேரியும் சேரி மக்களின்
பிரச்சனைக்கு ஊரும்
ஒன்றுகூடுவதில்லை ஒரு பரஸ்பரத்தை உருவாக்குவதில்லை மாறாக
இவர்களுக்கிடையேயான மோதல்கள்
கலவரங்கள் உயிருழப்புகள் தான்
அதிகமாக இருக்கும் இதில் பெரும்பாலும்
பாதிப்புக்குள்ளாவது சேரி மக்களாகத்தான்
இரூக்கிறார்கள் இது தான்
சாதியக்கலவரமாக வெடிக்கிறது ஆக சமூக
கட்டமைப்பில்
ஒருவருக்கு இன்னொருவருக்குமான
உதவுதல் பாசம் காட்டுதல்
அறிவுறை வழங்கள் அரவணைத்தல்
ஆகியவை இல்லாமல்
போகின்றது பொது வெளியான
சமூகத்திலேயே இவைகள் அனைத்தும்
புரந்தள்ளப்படும் போது குடும்கங்களில்
புரந்தள்ளப்படுவது என்பது வியப்படைய
வேண்டிய விஷயமாக இல்லை இதனால்
எந்த தலையீடுகளும் இல்லாமல்
ஒடுக்கப்பட்டோரின் உறவுநிலைகள்
எளிதாக
முறிந்துவிடுகிறது அங்கே எவ்வித
ஒத்துழைப்பும் நடைபெறம்
சாத்தியக்கூறுகள்
இல்லாதநிலையாகிறது இன்னும்
சற்று ஆழமாக பார்த்தோமானால் ஓர் குடும்ப
உறவுநிலைகள் பாசத்திற்காகவும்
ஆதரவிற்காகவும்
அங்கே யாருமில்லை என்றச்சூழலை அறிந்த
பின் தான் உறவுச்சிதறல்
உறுவாகிறது இவைக்கள் பெரும்பாலும்
தனக்கான ஆதரவுக் களமாக இருந்த
கிராமம் தங்களை ஒதுக்கிவைத்திருக்கிற
து இனி எந்த காலத்திலும் எந்த
பிரச்சனையிலும்
அவை பரிந்து வந்து தீர்வு கானும்
நடவடிக்கைகளில் ஈடுபாடாது என்ற
ஆணித்தரமான நம்பிக்கையில் தன்
குடும்ப உறவுகளை சிதறடிக்கின்றது ஒர்
எளிமையான வழக்கச் சொல்
ஒன்று சொல்வார்கள் 'தனியாக
புலம்பி தெருவுக்க
வந்துட்டா அது சபைக்கு வந்த சேதிதான்'
என்று சொல்வார்கள் குடும்பத்திற்கள்
ஒரு வீட்டினுள் நடைபெற்ற
உறவுச்சிதறலுக்கான
சண்டை தெரிவிற்கு வந்துவிட்டால்
அது சமூகப்பிரச்சனையாகிறது அச்சமூகப்பிரச்சனையை எட்டி கூட
பார்க்காத வேடிக்கை பார்த்தால் கூட
தீட்டு என்ற வழக்கத்தில் சமூத்தீர்வு கான
ஊரார்கள் வரமாட்டார்கள் என்ற
தைரியத்துடனேதான் பல
குடும்பச்சிதறல்கள்
நடைபெறுகிறது இதற்கு சட்டமும்
பஞ்சாயத்துகளும் துணைபோகிறது
பல குடும்பங்கள் ஒன்றினையும்
கட்டமைப்பு முறையில்தான் சமூகம்
அல்லது சமுதாயம் உறுவாகும்
என்பது விதி
ஆனால் இங்கே அந்த குடும்பங்கள்
சிதையுண்டு சிதறிக்கிடக்கின்ற
வேளையில் சமூகம் அல்லது சமுதாயம்
எப்படிச்சாத்தியமாகும்
இன்று பெரும்பாலும் சமுகம்
அல்லது சமுதாயம் என்ற
வார்த்தையே சாதித்சமூகம் சாதிச்சமுதாயம்
என்றாகிவிட்ட
சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது ஆண்டான்
ஆளுமையாளன் ஆதிக்கன் என்ற ஒருவன்
இருப்பானெனில் அடிமையாளன்
அடிமைக்காரன் என்ற
ஒரு எதிர்வினை இருக்கத்தானே செய்யும்
ஆண்டச்சமூகம் இருக்கையில்
அடிமைச்சமூகம்
ஒன்று இருக்கத்தானே செய்யும் சமுகம்
என்ற காந்தத்தில் வடதுருவம் தென்துருவம்
என்ற ஆண்டான் அடிமைச்
சாதியத்துருவங்கள்
இருக்கச்செய்துவிட்டது நாம்தான்
அதை இணைக்கமுடியாமல்
திணறிக்கொண்டிருப்பவர்களும் நாம்தான்
இதில் அடிமைச்சமூகத்தின்
வாழ்வுச்சிதறல்களை பெரும்பாலும்
நிர்ணயிக்கும் சக்தியாக
ஆண்டச்சமூகமென சொல்லிக்கொள்பவர்கள்
நிர்ணயிக்கிறார்கள் ஆக
ஒரு குடும்பச்சிதறலில் ஆதிக்கர்களின்
மறைமுகச் சாதியத் தலையீடுகள்
இல்லாமல்
பிரிந்து போய்விடமுடியாது என்று சொல்லலாம்
இங்கே மறைமுகச் சாதியத்தலையீடுகள்
என்பது சமூககட்டமைப்பை குறிக்கும்
அவர்கள் குடும்பச்சிதறலில்
நடைமுறைப்படுத்தும்
தலையீடாக்கொள்கையே இங்கு மறைமுகத்
தலையீடாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்
ஒரு குடும்பத்தில் இயல்பாக
ஒரு உறவுநிலைச் சண்டை வருகிறதென
எடுத்துக்கொள்வோம்
அவை அக்குடும்பத்தை வெகுவாக
பாதித்தி கொஞ்சம் கொஞ்சமாக
முன்னேறி வீதி வரை வந்துவிட்டதென
வைத்துக்கொள்வோம்
வீதிவரை வந்து விட்டாலே அப்பிரச்சனை சமூகத்தை பாதிக்கும்
அல்லது வேறேதும் அதே போல்
பிரச்சனை உருவாகினால்
முன்னதாகவே நடைபெற்றுவிட்டதாக
மேற்கோள் காட்டி நியாயப்படுத்தும்
முயற்சிச் சமூக சீர்கேடாக உருவெடுக்கும்
சூழலுக்கு காரணமான
அப்பிரச்சனையை ஒட்டு மொத்த சமூகமும்
தீர்வைத்தேடி ஒத்துழைப்புத்தராமல்
ஒதுங்கி நின்று அடிமைச்சமூகம்
அழிகிறது இப்படித்தான் என்றும் அந்த
சமூகத்தைப் போல
இருக்காதே என்று தன்சொந்தங்களின்
தவறுகளுக்கு எடுத்துக்காட்டு உரைப்பதுமாக
(உதாரணமாக ,சண்டாளா
பறப்பயபுத்தி, சக்கிளிசவகாசம்,என்று
திட்டுவது ஆதிக்கர்களின் வழக்கம் )
சமூகம்
வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருக்
கிறது அதேபோல் அவர்கள் குடும்பத்தில்
நடந்தாலும் அதையே நியாயப்படுத்த
மறுக்கிறது மாறாக அப்போது தான் அது ஓர்
சமூகச் சீர்கேடாக முன்வைக்ப்படுகிறது ஆக
ஒரே முறையான குடும்பச் சிதறலுக்கான
மூலச்சண்டையானது இருவேறு பார்வையாகவும்
இருவேறு பின்புலத்தோடும் சுற்றி வரும்
சூழலில் சமூகத்தில் அக்குடும்பச்
சிறதலுக்கான
மூலச்சண்டையினை தீர்த்து வைக்கும்
சக்தியாக உருவெடுக்க
மறுக்கிறது இது மிகவும் விபரீத
அழிவை நோக்கி இன்று வேகமாக
வளர்ந்துவருகிறது இந்தியாவில்
தற்போது அதிவேகமாக தனித்து வாழும்
முறை வளர்ந்து கொண்டு வருகிறதென்றும்
குடும்பங்கள் பிளவுபட்டுக்கொண்டிரு
க்கிறது என்றும் அதில் பெரும்பாலும்
ஒடுக்கப்பட்ட
சிறுபான்மை மக்களே இடம்பெருகின்றனர்
என்றும் இந்திய சமூகக்
கூட்டமைப்பு (2011)ஆய்வறிக்கையில்
தெரிவிக்கின்றது இதன் சாரம்சம் சமூக
கட்டமைப்புதான் என்பது இப்போது நன்றாக
புலப்படும் ஓர் குடும்ப
உறவுநிலை சிதறலின்
பாதிப்பு ஒட்டுமொத்த சமூகத்தையும்
பாதித்து பின் நடைமுறையில்
அதனை நியாயப்படுத்தும் செயலில்
அதேச்சமூகம் நகர்ந்து கொண்டு போகும்
பாதை அழிவுப்பாதையாக அமையும் ஓர்
குடும்பத்தின்
தாய்தந்தையரை விரட்டுவது குற்றம் சமூக
சீர்கேடு ஆனால் முதியோரில்லம்
அமைத்து அக்குற்றத்தினை நீயாயப்படுத்துவது போலத்தான்
இச்சமூககட்டமைப்பும் ஒடுக்கப்பட்டோரின்
உறவுநிலைச்சிதறில் மூலப் பொருளாக
அமைகின்றது.


தொடரும்......

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...