Thursday, March 05, 2015

நிராகரிப்பின் வலி

ஒரு
கொரூரத்தின்
உச்சத்தில்
மிச்சமாகும்
கண்ணீரை
சேமித்து
வைத்திருக்கிறேன்,,,

சேவகனாக
இல்லாத போது
சிந்திய
கண்ணீரில்
கலந்துள்ள
குருதிவாடை
குத்தும்
ஊசியாகிவிடுகிறது,,,

ஏதும் இயலாத
கையறு
நிலையிலே
கடந்தோடிய
பயணங்கள்,,,

மரணம்
வதைசெய்யும்
மல்லிகை
வாசத்தை
நுகரந்து
மயங்கி
விழுந்தனவாம்
வண்டுகள்,,,

என்ன செய்ய
ஏதாவது
வழிச்
சொல்லுங்களேன்,,,

குருதி வாடை
குடலை
பிரட்டினாலும்
நினைவலைகளை
நிராகரிப்பது
தவறன்றோ,,,

அடுத்தவர்
பார்வைக்கு
நானொரு
தவமிருக்கும்
துறவி,,,

எனக்கு மட்டுமே
தெரியும்
ஏந்திய கண்ணீரில்
கலந்துள்ள
குருதியின்
ஏக்கங்களை
சுமந்துள்ளேன்
என்பதும்,,,

எப்படி
சுமையினை
இறக்கி வைப்பதென
தெரியாமல்
தொடர்ந்தே
விழித்திருக்கும்
வழியறியா
வழிப்போக்கன்
நானென்பதும்
எனக்கு மட்டுமே
தெரியும்,,,

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...