வாய்திறக்கிறாள்
இயற்கையன்னை
வயிறு நிரம்புகிறது
பகிர்ந்துண்டதால்
____
வெற்றிட வானம்
அவள் இடுப்பில்
ஒட்டியான
வானவில்
___
அழகே
அடம்பிடிக்க
எழுந்தது
விசும்பல்
மழலை
மனதை
வருடுகிறாள்
____
காற்றை வாங்குகிறது
கவிதை
விலையில்லா
எழுத்துக்களாக
___
பேருந்து எழுப்பும்
அதிர்வலைகள்
அவள்
வருகிறாளென்று
____
தீராத பசி
தினமும்
சாலையோர
சந்திப்புகள்
___
கழனிக்காடு
ஊஞ்சலாடுகிறது
தூக்கு சட்டியில்
வருகிறது உணவு
____
கோடரிகளே
கொஞ்சம்
பொறுங்கள்
பறவைகள்
பதறுகின்றன
கைபிடியானேன்
நான்
____
ஒரு நெல்லுக்கு
வாழ்நாள்
அடியானது
கிளி
____
இணையாத
நதிகள்
இனிதான்
ஆரம்பம்
மூன்றாம்
உலகப்போர்
____
0 comments:
Post a Comment