ஆழ்ந்த மௌனத்தை கிழித்துக்கொண்டு அடிமனது அசையத் தொடங்கிய நேரம் இரவுகள் என்னை தூங்க அழைத்தாலும் இமைகள் செல்ல மறுக்கிறது இருட்டில் மலரும் பூக்களுக்கு இமைகள் அடிமையானதோ என்னவோ எதுவுமற்று ஒற்றை நாற்காலியை ஓயாமல் தேடிச்சென்ற எனதுடம்பை கட்டுக்குள் கட்டியிழுக்க தெரியவில்லை தவிப்புகள் அடங்கி தேடல்களை தொடர்கிறது என் ஆழ்ந்த சிந்தனைகள் பொன்னி என் சிந்தனைகளை சன்னலுக்கு வெளியே சாட்சியாக்குகிறேன் தென்றல்காற்று கடத்திச் செல்கிறது உனது பெயரை இரவினில் தூங்காத எனதிமைகள் கேட்கிறது என்னிடமே அக்கேள்விகளை நீ புதிரா? புனிதமா? பொறுத்திரு பதில் சொல்கிறேன் என்றேன் தொடரும் கவிதையின் மூலமாக,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...
No comments:
Post a Comment