அவன் என்னை
மறந்தும் கடந்தும் எங்கோ சென்று
விட்டதனால்
என் காதல்
தோல்வியை
தழுவியதாய்
காற்றிடம் புலம்பிய பொழுதுகளில்
அழுது விடாத
அதன் அரவணைப்பு
என் கண்ணீருக்கு ஆருதலானது
தோல்வி என்பதை வார்த்தைகளில் உபயோகிக்காதே
உனக்கான சூழலது சந்தர்ப்பங்கள்
சரிவர
அமையாமைக்கு
நீயே காரணம்
புல்லாங்குழல்
வாசிக்கப் பிறந்தவை
அன்றி
வெந்நீரூற்றி விளையாடுதல் முறையோ
துடைத்துவிடு
கண்ணீரை
அழாதே
என்முன்னால்
காற்றின் கரங்கள் எனைத்தழுவி
அரவணைக்க
ஆருதல் வார்த்தைகள்
மனதினை வருடிவிட
காதலில் நான்
தோற்றேனென
மீண்டும்
மறுமொழியிட
மனதிற்கு
தோன்றவில்லை
தோல்வியென்பது
என்றுமே
காதலுக்கில்லையென
இதமான இளங்காற்று உணர்த்திவிட்டு
நகர்கிறது
இன்னொரு காதல்
தோல்வி கண்ட
தோழியினடத்தில்,,,
மறந்தும் கடந்தும் எங்கோ சென்று
விட்டதனால்
என் காதல்
தோல்வியை
தழுவியதாய்
காற்றிடம் புலம்பிய பொழுதுகளில்
அழுது விடாத
அதன் அரவணைப்பு
என் கண்ணீருக்கு ஆருதலானது
தோல்வி என்பதை வார்த்தைகளில் உபயோகிக்காதே
உனக்கான சூழலது சந்தர்ப்பங்கள்
சரிவர
அமையாமைக்கு
நீயே காரணம்
புல்லாங்குழல்
வாசிக்கப் பிறந்தவை
அன்றி
வெந்நீரூற்றி விளையாடுதல் முறையோ
துடைத்துவிடு
கண்ணீரை
அழாதே
என்முன்னால்
காற்றின் கரங்கள் எனைத்தழுவி
அரவணைக்க
ஆருதல் வார்த்தைகள்
மனதினை வருடிவிட
காதலில் நான்
தோற்றேனென
மீண்டும்
மறுமொழியிட
மனதிற்கு
தோன்றவில்லை
தோல்வியென்பது
என்றுமே
காதலுக்கில்லையென
இதமான இளங்காற்று உணர்த்திவிட்டு
நகர்கிறது
இன்னொரு காதல்
தோல்வி கண்ட
தோழியினடத்தில்,,,
தோல்வியுற்றவர்கள்
ReplyDeleteதுவண்டுவிடாதிருக்கச்
சொல்லிச் சென்ற கருத்தும்
சொன்ன விதமும் விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா!
ReplyDelete