வெவரமில்ல
வெலாசமில்ல
வயித்துக்குள்ள
நாயிருந்தேன்
கொழந்தையா
பத்து மாசமா
தொப்புள் கொடியில
ஊஞ்சல் கட்டி
நானும்
வெளையாடினேன்
வலிச்சிருக்கும்
ஒனக்கு
சொகமா நீயும்
அனுபவிச்ச
அந்த வலிய
ஒலகம் எப்படியிருக்குதுனு ஊட்டு வேல
செஞ்சபடியே
சொல்லி கொடுத்த
எதையும் மறக்கல
நான்
எல்லாத்தையும்
காதுல வாங்கி
கடைசில எட்டி
ஒதச்சேன்
வயித்துல
நான் ஒதச்சதுல
வெளிய வர
துடிக்கிறேன்னு
நீ தெரிஞ்சி
பிரசவ வலிய
தாங்கின
கவருமெண்ட்டு ஆஸ்பித்திரில
நான் அழுதபடியே
கெடக்கறேன்
காரணம்
எனக்கு மட்டுந்தான் தெரியும் அம்மா
என்னைய
வெளிய எடுக்க
உன் வயித்த
கிழிச்சி தச்சியிருங்காங்களே
அதுக்காகதாம்மா
நான் அழரேன்,,,
அதுகூட தெரியாம
பசிக்கு நான்
அழரேன்னு
பாலூட்ட துடிக்கிறியே பாவமா இருக்குதுமா
உன் நெலம
என்னைய பெத்த
கடனுக்காக
இப்பவே ஒனக்காக
மனசுல பதிஞ்சு வச்சிட்டேன்மா
எத்தன
வருஷமானாலும் ஒனக்கு நான்
தாயாக இருப்பேன்னு
இப்பவே ஒனக்காக
மனசுல பதிஞ்சு வச்சிட்டேன்மா,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக ...

"என்னைய
ReplyDeleteவெளிய எடுக்க
உன் வயித்த
கிழிச்சி தச்சியிருங்காங்களே
அதுக்காகதாம்மா
நான் அழரேன்,,," என்ற
உண்மை வரிகளை
நான் விரும்புகின்றேன்!
தங்கள் வருகைக்கு நன்றி தோழர்!
ReplyDelete