போபாலில் பலியானார்கள்
அமைதியாய் இருந்தேன்
நான் தமிழனென்று
குஜராத்தில் கலவரம்
நிகழ்ந்தது
அமைதியாய் இருந்தேன்
நான் தமிழனென்று,,,
மும்பை முழுக்க
எரிந்துக் கொண்டிருந்தது
அமைதியாய் இருந்தேன்
நான் தமிழனென்று
பஞ்சாபில் படுகொலைகள்
பிணங்களின் குவியல்கள்
அமைதியாய் இருந்தேன் நான் தமிழனென்று,,,
தெலுங்கானா தத்தளித்துக் கொண்டிருந்தது
அமைதியாய் இருந்தேன் நான் தமிழனென்று,,,
ஒடிசா
ஒழித்துக் கட்டிக் கொண்டிருந்தது
அமைதியாய் இருந்தேன்
நான் தமிழனென்று
ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்துத்துவம் அடிமைபடுத்த அப்போதும் அமைதியாய்
இருந்தேன்
நான் தமிழனென்று,,,
என்னோடு சேர்த்து ஈழத்தை
அடிக்கவும் அழிக்கவும் வருகிறார்கள்
அலறுகிறேன்
நான்
என்னருகில் யாருமில்லை தமிழெனும் அடையாளமும் என்னிடமில்லை,,,,
0 comments:
Post a Comment