போபாலில் பலியானார்கள்
அமைதியாய் இருந்தேன்
நான் தமிழனென்று
குஜராத்தில் கலவரம்
நிகழ்ந்தது
அமைதியாய் இருந்தேன்
நான் தமிழனென்று,,,
மும்பை முழுக்க
எரிந்துக் கொண்டிருந்தது
அமைதியாய் இருந்தேன்
நான் தமிழனென்று
பஞ்சாபில் படுகொலைகள்
பிணங்களின் குவியல்கள்
அமைதியாய் இருந்தேன் நான் தமிழனென்று,,,
தெலுங்கானா தத்தளித்துக் கொண்டிருந்தது
அமைதியாய் இருந்தேன் நான் தமிழனென்று,,,
ஒடிசா
ஒழித்துக் கட்டிக் கொண்டிருந்தது
அமைதியாய் இருந்தேன்
நான் தமிழனென்று
ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்துத்துவம் அடிமைபடுத்த அப்போதும் அமைதியாய்
இருந்தேன்
நான் தமிழனென்று,,,
என்னோடு சேர்த்து ஈழத்தை
அடிக்கவும் அழிக்கவும் வருகிறார்கள்
அலறுகிறேன்
நான்
என்னருகில் யாருமில்லை தமிழெனும் அடையாளமும் என்னிடமில்லை,,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக ...

No comments:
Post a Comment