வான வெளிச்சத்தில்
மழை கூடும்
கண்டு ரசிக்க
நீ!!! வர
வேண்டும்
புது விடியலோடு
புது மழையும்
சேர்ந்துனை
அழைக்கிறது
பூத்த மலர்
புன்னகையோடும்
பூத்துக் குலுங்கும் மலர்களோடும்
மகிழ்ச்சியினை
பகிர்ந்திடவே
இயற்கையின்
மனதோடு இணைந்து
வாழ நீ வர
வேண்டும்
வெளியே
வெளியே வா!
பார் இந்த பூமியை இளங்காற்றோடும்
இடி,மழை, மின்னலோடும்
குளிர்ந்து கிடக்கிறது
நம் பூமி
நீயும் அதனோடு
சேர்ந்து உன்
மனதை குளிரச்செய்திடவே
வா!!!
வெளியே
நமக்குத் தோழன்
இந்த பூமிதானே
வந்து நுகர்ந்துவிடு
அதன் வாசத்தை
மகிழ்ச்சியான
புது வாழ்வுனக்கு
இப்பூமி உனக்கு
திறந்து காட்டும்
அதற்கு முதலில்
கதவைத் திறந்து
நீ!!! வர
வேண்டும்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக பசுமையை நிரப்பி புதிதாய் விதையொன்றாக ...

No comments:
Post a Comment