வான வெளிச்சத்தில்
மழை கூடும்
கண்டு ரசிக்க
நீ!!! வர
வேண்டும்
புது விடியலோடு
புது மழையும்
சேர்ந்துனை
அழைக்கிறது
பூத்த மலர்
புன்னகையோடும்
பூத்துக் குலுங்கும் மலர்களோடும்
மகிழ்ச்சியினை
பகிர்ந்திடவே
இயற்கையின்
மனதோடு இணைந்து
வாழ நீ வர
வேண்டும்
வெளியே
வெளியே வா!
பார் இந்த பூமியை இளங்காற்றோடும்
இடி,மழை, மின்னலோடும்
குளிர்ந்து கிடக்கிறது
நம் பூமி
நீயும் அதனோடு
சேர்ந்து உன்
மனதை குளிரச்செய்திடவே
வா!!!
வெளியே
நமக்குத் தோழன்
இந்த பூமிதானே
வந்து நுகர்ந்துவிடு
அதன் வாசத்தை
மகிழ்ச்சியான
புது வாழ்வுனக்கு
இப்பூமி உனக்கு
திறந்து காட்டும்
அதற்கு முதலில்
கதவைத் திறந்து
நீ!!! வர
வேண்டும்,,,
0 comments:
Post a Comment