Sunday, July 26, 2015

உண்மை

உண்மையாய் நேசிக்கத்
தொடங்கிய
பொழுதுகளில்
ஒருவரும் இல்லை
உலகில்

வெற்றிடம் நிரப்ப
உண்மையை நேசிக்கத் தொடங்கினேன்

விளங்காதவன்
இவனென்று
ஊரார் தூற்ற
தோற்றத்தை நானிழக்கவில்லை

துன்பம் எனை
சூழ்ந்த போதும்
உண்மையது
சுமைதூக்கும்

வாரும் ஐயனே மார்க்ஸிய தந்தையே வாழ்க்கை இதுவென
நல்லுலகம் காண
வழி நடத்துவீர்
எனை நீயே

வந்தேன் சரணடைந்தேன்
உண்மையே
சர்வமும் என
நித்தமும் படித்துணர்ந்தேன்

யாரிடம்
எனக்கென்ன
பகை
இருந்தும் பகையாளி
நானானேன்
அவர்களிடத்தில்

மதில் மீதெழுந்து
தாண்டவமாடும்
அடங்கா
அலைகடலதுவென அறிந்தபின்னாலே

உண்மை மூழ்குமென மூடர்களின்
கூற்றில்
புழுதி பறப்பதை
கண்டேன்
கண் தெளிவுற்று
நானும் எழுந்தேன்

செல்வமும்,செழிப்பும்­ என்னிடமில்லை உண்மையும்,உழைப்பும் அவர்களிடத்தில்
இல்லை

இதுதான் முறையோ வாழ்க்கைக்கிது
முரணோ

வேண்டி தவமிருக்கும் வேடமிட்ட சுவாமிகளும்
சுகமாய் வாழ்ந்திட
காணிக்கைக்கு கையேந்தும்
சுழலும் காலத்தில்
பணம் மாத்திரம்
இயங்குதல் முறையா

நித்தம் நித்தம் இறந்தாலும்
இன்னமும் வாழ்ந்துவிடுகிறேன் நான்

உண்மைதான்
எனை இயக்குவது
"உண்மை" தான்

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...