Saturday, October 10, 2015

கோரச் சம்பவமும் கவிதை சமர்ப்பணமும்

கம்பளிப் புழுக்களை காதலிக்கிறேன்
நான்

அதன் வீச்சம் கூட
எளிதில் என்னை கவர்ந்தாலும்
நமைச்சலின் வலி நானுணர்ந்த வலி வேதனைகளை விட குறைவுதான் என்பதால்

கம்பளிப் புழுக்களை காதலிக்கிறேன் நான்

என் மேனி படர்ந்து யோனியில் ஆண்குறிகள் மோதி முட்டி வேட்கை தணிக்கும்
விலங்கின சக்திகளிடம் விளையாட்டு பொம்மையாய் நான்

அப்பாவும்,அண்ணனும் அவர்களோடு சேர்ந்துகொண்ட சக காட்டு மிராண்டிகளும்
கண்டிப்பாய் என்
வலியுணர வாய்ப்பில்லை

எனை புணர்ந்து விட்டு விந்தெனும் எச்சிலை தெளித்தார்கள்
கருப்பாய் இருண்டதென் வாழ்க்கை

என்தாய் எனை பெற்றெடுத்துவிட்டு மண்ணுக்குள்
கதறுகிறாள்
கேட்கவா போகிறது
அவளின் கதறலொலி

முகம் காட்டும் கண்ணாடியில் என் முகம் தவிர எல்லோர் முகமும் வெளிச்சமாய்
சிரிக்கிறது எனை புணர்ந்து விட்ட மகிழ்சியில் அவர்கள் முகம் மலர்கிறது

நான் மட்டும் மூடிக்கொள்கிறேன் என் முகத்தையல்ல
யோனியை

எவன் எவ்வடிவில்
வருவானோ எனை புணர்வதற்கென்று அச்சம் நீங்காத
அதிர்ச்சி வசத்தில் ஆட்கொண்ட என்னை
அறைந்து விடுங்கள் சிலுவையில்

கழுமரங்களேனும்
என்மீது பரிதாபம் கொள்ளட்டும்

உடல் சீண்டி என் யோனியில் ஊடுறுவும் ஆணுறுப்பு எப்போதேனும் வெட்டப்படுமா
? எதிர்பார்த்து ஏமாந்து போனேன்

வெட்டுவதாக இருந்த கத்தியும் எனை புணர்வதற்கு ஆவலாய் வரிசையில் அது காவல்துறையின்
வடிவமாக

விலங்கினங்கள்
எனை புணரும் போதெல்லாம் என் அடிவயிற்று சதைபிடிப்பால் எழும்
அதிக வலியில்
குளிர்காய துடிக்கையில்

பூமிக்கு நான் சுமையா? இல்லை நான் பூமிக்கு சுமையா? எழும்
எண்ணங்களில் சீழ் வடிந்து என் யோனியின் வழியே அதுவும் வழிந்தோடுகிறது

என் தாய்நாடு பாதுகாக்காத எனதுடலை எச்சில் இலையால் மூடுங்கள்
வரும் தெருநாய்களெல்லாம் காலைத் தூக்கட்டும் ஆணுறுப்பு அவ்வளவு பழகிப்போனது
எனக்கு

காம வேட்கையாடு வேட்டையாட வேண்டுமென்று
பெண் உடலை பார்க்கும் சமூகத்து விஷப்பார்வையிலும் அதன் சீண்டல்களிலும்
தீராத வலியையும்
போகாத நமைச்சலையும் அந்நமைச்சலின் ஊடே
எழும் எனதுடல் வீக்கங்களையும் வழியும் ரத்தங்களையும் எனக்கு எளிதில்
கம்பளிப் புழுக்கள் கொடுத்ததில்லை

ஆகவே காதலிக்கிறேன் கம்பளிப் புழுக்களை

அதுமட்டுமா?
இல்லை இல்லை தன்னுடலை யாரும் சீண்டக்கூடாதென்று
கம்பளிப் புழுக்களுக்கு முற்களை படைத்த இயற்கை அன்னை

எனை கைவிட்டதனால்
பட்ட துன்பத்தை பகிர்ந்துகொள்ள

அதுமட்டுமே எனக்கு உற்றத்தோழனாய்
அதனாலும் அதைமட்டுமே காதலிக்கிறேன் நான்

மனித மிருகங்களிடம்
விலகி புழுபூச்சிகளிடம் காதல் கொள்வது
அவ்வளவு சுலபமல்ல அனுபவித்துப் பாருங்கள் என் வலியை
அர்த்தம் புரியும் உங்களுக்கு,,,
_

அந்த கோரச்சம்பவம் :
சிவகங்கையில் சிறுமி தனது தந்தை, சகோதரர் உட்பட 26 பேரால் பாலியல்
வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிற­ாள் . தன்னை பல ஆண்டுகளாக தந்தை
மற்றும் அண்ணன், பக்கத்து வீட்டில் வசிக்கும் கண்டக்டர், அண்ணனின்
நண்பர்கள் உள்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
கர்ப்பத்தை கலைக்க மருத்துவமனை சென்றபோது டாக்டர், வக்கீல் ஆகியோரும்
பலாத்காரம் செய்தனர். இது குறித்து புகார் செய்ய போலீஸ் நிலையம்
சென்றபோது ஆரம்பத்தில் எஸ்.ஐ., பின் இன்ஸ்பெக்டர் அவரைத் தொடர்ந்து ஒரு
ஏடிஜிபி ஆகியோரும் தன்னை சீரழித்து விட்டதாக கூறினார். இதுகுறித்து
சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சிறுமி புகார் செய்தார்.
இதனடிப்படையில் சுகந்தியின் தந்தையும், அண்ணனும் கடந்த ஜூன் மாதம் கைது
செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு, சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்
வின்சென்ட், இது தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில்,
`சுகந்தியை 12 ஆண்டுகளாக தொடர்ந்து பலர் பாலியல் பலாத்காரம்
செய்துள்ளனர். போலீஸ் எஸ்.ஐ முதல் ஏ.டி.ஜி.பி. வரை உயரதிகாரிகள் பலருக்கு
இதில் தொடர்பு உள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என
கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், தமிழக தலைமைச் செயலர்,
போலீஸ் டி.ஜி.பி, சி.பி.ஐ,சிவகங்கைமகளி­ர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே,இன்று பொதுநல வழக்கிற்காக
ஆஜராகச் சென்ற வக்கீல் வின்சென்ட் அவர்களை சமூக விரோதிகள் வழிமறித்து
தாக்குதல் நிகழ்த்தியிருக்கிறார­்கள்.இந்த கேடுகெட்ட சமூகம் தான்
பெண்களுக்கான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கிறது என்று தங்களைத் தாங்களே
சொல்லித் திரிகின்றது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...