Saturday, October 24, 2015

"எங்கே செல்கிறது தலித்தியம்"

"ஆதிக்கம்" எந்த வடிவில் வந்தாலும் அது
கண்டனத்திற்குரியதாகவ­ும்,எதிர்க்க வேண்டியதாகவும் பதிவு செய்யப்பட
வேண்டும். போராட்ட முறைகளின் படி "ஆதிக்கம்" அழிக்கப்பட வேண்டிய ஒன்றாக
களத்தில் நிறுத்தப்பட வேண்டும். அந்த வகையில் "மதமும் மதம்சார்ந்த சாதி
ஆதிக்கத்தையும்" எதிர்ப்பதற்கு இடைவிடாது செயல்பட வேண்டிய கட்டாயத்தில்
ஒவ்வொரு எதிர்ப்பும் இருக்க வேண்டிம் . இதில் வடிவங்களை மாற்றிக்கொண்டு
"தலித்துகள்" தங்கள் ஆதிக்கத்தை உறுதி செய்வார்களேயானால் அவர்களும்
இந்துத்துவ பார்ப்பானிய ஆதிக்க சாதி வெறியர்களாகவே நிச்சயம் செய்திட்டு
எதிர்க்கப்பட வேண்டும். இதில் விலக்குகள் தேவையற்றது இனியும்
தலித்தியத்தில் போலி சித்தாந்தவாதிகள் நுழைவார்களேயானால்
பொறுத்துக்கொள்ளாது எதிர்ப்பை பதிவு செய்வதே உண்மை "தலித்தியம்" ஆகும்.

இதுபோன்றதொரு சம்பவம் இனியும் நிகழ்த்தப்படுமேயானால­் அது தலித்தியத்தை
பொய்யாக்கிவிடும் என்கிற அச்சம் எழத்தான் செய்கிறது. ஏற்கனவே விழுப்புரம்
மாவட்டம் கண்டமங்களம் எனும் கிராமத்தில் அருந்ததிய இளைஞன் பறையர் பெண்ணை
காதலித்து திருமணம் செய்ததற்காக கொலை செய்த சம்பவம் தலித்தியத்தின்
சாபக்கேடாக இருந்திருக்கிறது. தற்போது இன்னொரு சம்பவம்
நிகழ்ந்திருக்கிறதென்­றால் தலித்தியம் பார்ப்பானிய இந்துத்துவத்தின்
பிடியில் சிக்கிக்கொண்டிருக்கி­றது என்பதை உறுதியாக நமக்கு
உணர்த்துகிறது.

21.10.15 அன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எனும் கிராமத்தில்
பாலமுருகன் என்கிற அருந்ததிய இளைஞன் நதியா என்கிற பறையர் பெண்ணை
காதலித்தமையால் திருமணம் செய்து வைத்திருக்கிறார் சக தலித்திய இயக்க
மாவட்ட நிர்வாகியான போஸ் என்பவர்...
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்க ரீதியாகவும்,கட்சி ரீதியாகவும்
இருக்கும் விசிக,புரட்சிபாரதம்,­இன்னபிற,,, நிர்வாகிகள் ஒன்றிணைந்து போஸ்
என்பவரை மிகக் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள­். "எங்கே செல்கிறது
தலித்தியம்" இந்த கேள்விகளுக்காக நிச்சயம் அவர்கள் குற்றவாளிகளாக
கூண்டில் ஏறியே ஆக வேண்டும். முதலில் தலித்தின மக்களுக்குள்ளேயே நடக்கும்
திருமணங்கள் சாதிமறுப்பு அல்லது கலப்புத் திருமணத்தில்
உள்ளடங்காது.ஏனெனில் பார்ப்பான இந்துமத வர்ணாசிரம சாதியப்
படிநிலைகளின்படி அனைவரும் சூத்திரர்கள் என்பதைத் தாண்டி பஞ்சமர்கள் எனும்
பதத்தில் அடங்குவர். இதில் எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு ஆதிக்கச்
சாதிவெறி? அப்படியான சூழ்நிலைகளை ஒப்பிட்டுப் பார்த்தோமானால்
கோகுல்ராஜ்,இளவரசன் படுகொலைகளை எதிர்க்கத் தகுதியற்றவர்களாக
தலித்தியவாதிகள் கண்களுக்குத் தெரிகிறார்கள். எந்த வகையில் நீங்கள்
புரட்சியாளர் அம்பேத்கரையும், தாத்தா ரெட்டைமலை சீனிவாசரையும், ஐயா
அயோத்திதாசரையும்,ஐயா­ ஜோதி பாபுலேவையும் ஏற்றக்கொண்டவர்களாய்
காட்டிக்கொண்டிருக்கி­றீர்கள். மெய்பிக்க முடியுமா உங்களால்? அப்படி
மெய்பித்திருந்தால் இது போன்றதொரு சம்பவம் நடந்திருக்குமா,, பார்ப்பானிய
இந்துத்துவ சாதி வர்ணத்தின் அடிப்படையிலான ஆதிக்கப் படிநிலைகளை
தலித்தியம் "பறையர்-அருந்ததியர் மோதலாக காட்டி சக தலித்திய மக்களை
அடிமைபடுத்த நினைக்குமேயானால் இதனை "போலிதலித்தியம்" என்றுச் சொல்வதைத்
தவிர வேறெதும் தோன்றிட வில்லை , காலங்காலமாக ஆதிக்கர்களால்
இழிதொழிலுக்காக படைக்கப்பட்டவர்கள் அருந்ததியர்கள் என்று பரப்பி
சாதியாதிக்கத்தை அவர்களிடம் செலுத்தி மலமள்ளுதல்,செருப்பு தைத்தல், கூடை
பின்னுதல்,கால்நடைகளி­ன் கழிவுகளை சுத்தப்படுத்துதல் இன்ன பிற,,,
பணிகளில் அவர்களை ஈடுபடுத்தி வாழ்நாள் முழுவதையும் அவர்களின் உழைப்பை
சுரண்டி எடுக்கும் அதே மனநிலையில் பறையர்கள் இருப்பார்களேயானால் சக
தலித்துகள் நிச்சயம் சாதிவெறிபிடித்த மிருகங்களே,,,இதையா தலித்தியம்
என்கிறீர்கள் அப்படியெனில் தலித்தியம் செத்துவிட்டதாக எடுத்துக்கொள்ள
வேண்டியதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். தற்போதுள்ள சூழலில் தலித்தின
மக்களின் ஒற்றுமையின்மை காரணமாக இந்துத்துவ பார்ப்பான ஆர் எஸ் எஸ்
மற்றும் பாஜக ஒன்றுகூடி நிகழ்த்திய ஹரியானா தலித் குழந்தைகள்
எரிப்பு,கர்நாடக இளம் தலித் எழுத்தாளர் தாக்குதல், தமிழகம் சேஷ
சமுத்திரம் தலித் குடிசைகள் எரிப்பு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும்
தலித் பெண்கள் கற்பழிப்பு இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டேப் போகிறது
இதில் தலித்தினத்திற்குள்ளே­யே நடந்த இந்த சம்பவத்தையும் இணைக்க
வைத்துவிட்டதுதான் தலித்தியமெனில் "இசங்கள்" தேவையில்லையென கொன்றுவிடுவதே
நல்லது. விசிக, புரட்சிபாரதம் மற்ற இதர கட்சிகளும் தலித் இயக்கங்களும்
இச்சமூக அவலத்திற்கு பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட போஸ் மற்றும் திருமண
தம்பதிகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளித்து,கட்சி நிர்வாகிகளின்
இக்கேவல மான அணுகுமுறைகளை கண்டுத்தும் , பொறுப்புகளை பறித்தும், தலித்தின
ஒற்றுமையினை உறுதிபடுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு
அம்பேத்கரியல்,மார்க்­ஸியல்,பெரியாரியல் போன்ற முற்போக்கு
சிந்தனையார்களின் உழைப்பை களங்கப்படுத்தாமல் கல்வியை முதலில் புகுத்தப்பட
வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...