மதி மயக்கத்துடனே
அந்த மாலை நேரத்தை
மனதில் அடைத்து
விட்டு,,,
எனை
திரும்பத் திரும்ப
அழைக்கும் வானத்தின்
சிவந்த முகத்திடம்
கேட்கிறேன்,,,
எங்கே அழைக்கிறாய்
எதற்காக அழைக்கிறாய்
என்று,,,
அவ்வானம் கக்கிய
மெய்யான
செங்கதிர்கள்
மேய்ந்துவிட பார்க்கிறது
என்னை,,,
உணர்ந்தும்
விடையேதும்
வராதமுன்னே வீட்டிடம் விடுதலை பெற்று
அழைப்பு வந்த
திசைநோக்கி
நடக்கிறேன்
என் மயக்கம்
அப்படியே,,,
போகப் போக
முடிவற்ற தேடலுக்கும்
முடிவுற்ற வாழ்வுக்கும்
இடையில் சிக்கிய
ஒரு மரத்தின்
வேர்களை வந்து முட்டியது
அந்த அழைப்பு,,,
நின்ற இடத்திலேயே
தெளிவுற்றவனாய்
ஒரு முத்தமொன்றை
பதிக்கிறேன் மரத்தின்
வேர்களிடத்தில்,,,
என்னைப் போல
அதுவும் தனித்து விடப்பட்ட
தனிமரமென்பதால்
அல்ல,,,
சேர்ந்துவிட்டோம்
நாங்கள் இனி
தனிமையை உணராதவர்கள்
என்பதற்காக,,,
ஒரு
முத்தமொன்றை
பதிக்கிறேன் மரத்தின்
வேர்களிடத்தில்,,,
0 comments:
Post a Comment