மதி மயக்கத்துடனே
அந்த மாலை நேரத்தை
மனதில் அடைத்து
விட்டு,,,
எனை
திரும்பத் திரும்ப
அழைக்கும் வானத்தின்
சிவந்த முகத்திடம்
கேட்கிறேன்,,,
எங்கே அழைக்கிறாய்
எதற்காக அழைக்கிறாய்
என்று,,,
அவ்வானம் கக்கிய
மெய்யான
செங்கதிர்கள்
மேய்ந்துவிட பார்க்கிறது
என்னை,,,
உணர்ந்தும்
விடையேதும்
வராதமுன்னே வீட்டிடம் விடுதலை பெற்று
அழைப்பு வந்த
திசைநோக்கி
நடக்கிறேன்
என் மயக்கம்
அப்படியே,,,
போகப் போக
முடிவற்ற தேடலுக்கும்
முடிவுற்ற வாழ்வுக்கும்
இடையில் சிக்கிய
ஒரு மரத்தின்
வேர்களை வந்து முட்டியது
அந்த அழைப்பு,,,
நின்ற இடத்திலேயே
தெளிவுற்றவனாய்
ஒரு முத்தமொன்றை
பதிக்கிறேன் மரத்தின்
வேர்களிடத்தில்,,,
என்னைப் போல
அதுவும் தனித்து விடப்பட்ட
தனிமரமென்பதால்
அல்ல,,,
சேர்ந்துவிட்டோம்
நாங்கள் இனி
தனிமையை உணராதவர்கள்
என்பதற்காக,,,
ஒரு
முத்தமொன்றை
பதிக்கிறேன் மரத்தின்
வேர்களிடத்தில்,,,
Subscribe to:
Post Comments (Atom)
பூக்காரி
நேற்றிலிருந்தே பெருமழை வருமானமோ ! வயிற்றுப்பசியோ ! வறுமையோ ! வாழ்வாதாரத்தையோ ! வீட்டுக் கடனையோ ! பிள்ளைகளின் பசி பரிதவிப்போ இவைய...
-
"உதடுகள் காமத்தை பேசட்டும்" சுவற்றில் ஒட்டுண்ட பல்லி போல படுக்கையில் உன்னோடு ஒட்டிக் கொள்கிறேன்,,, என் ஆடைகளை அவசரபடாமல் அவிழ்கிறத...
-
யாதொரு விளைவுகளுக்கும் அச்சம் தவிர்த்தவன்... அமைதி மதமென அஹிம்சை கொண்டவனை அப்போதைக்கே எதிர் விமர்சனம் கொடுப்பவன்.... ஆண்டாண்டு கால அடிமை சம...
-
மனதில் உட்புகுந்து உயிரை வதைக்குமந்த "மலடி" எனும் கொடுஞ்சொல்லை மறக்கவே மரணத்தின் வாசலில் இருந்து அவள் எழுதும் கடிதத்தின் கடைசி வாக...

No comments:
Post a Comment