Thursday, October 29, 2015

பெரியவரும்,மதுப்பழக்கமும்,,,

நரைத்தமுடி,பெருந்தாடி, நடுக்கத்தில் உடல்,ஆனால் சோர்வடையாத மனதுடன்
,அசாத்தியமான கம்பீரத்தோடு கைத்தடி ஊன்றி நடந்த வருகிறார் அந்தப்
பெரியவர் மெதுவாக,,,ஊர் ஊராய் சுற்றி கடைசியாக தஞ்சம் வெறும் காட்டுவழி
பயணத்தில் தன்னைப்போலவே காய்ந்து கிடக்கும் ஊர் அதுவென அப்போதே
உணர்ந்தார் . ஊர் மக்களின் ஒருவிதப்பார்வையில் அச்சம்
,மந்திரவாதியோ!சூனியக­்காரனோ! சூழ்ச்சி சாமியாரோ! பிச்சைக்காரனோ!
பரதேசியோ! தீவிர கடவுள் பக்தனோ! தீர்த்தக்கரை முனிவனோ! இப்படியெல்லாம்
எழுந்த கேள்விகள் அப்படியே பெரியவர் மீது கண்பார்வையாக விழுந்தது.
கேள்விகளையெல்லாம் உள்வாங்கிய பெரியவரின் முகத்தில் பிரகாசமாய் வெளிச்சம்
அனுபவம் பேசுகிறது அவரின் மீதான விமர்சனப்பார்வைகள். அதற்கிடையிலும்
யாரும் முந்திக்கொள்ளவில்லை எழுந்த ஐயத்தை வெளிப்படையாக கேட்க,,,
பூனைக்கு மணி கட்டினார் கருவேலங்காட்டு பழுத்த பழமாக தெரிந்த ஊருக்கு
மூத்தவரான மற்றுமொரு பெரியவர்,,,
யார்பெருசு நீங்க? யாரைத்தேடி வந்தீங்க?
ஒரவுக்காரக யாராது இருக்காங்ளா? அசலூருக்கு ஏதும் வழி தேட்ரீங்களா? சாமியாரா?
அவர் பங்கிற்கு அடுக்கினார் கேள்விகளை,,,

அதற்குள் கூட்டம் கூடிவிட்டது அந்தப் பெரியவருக்காக இருந்த ஆக்ஸிஜன் அளவு
கொஞ்சம் குறையுமளவுக்கு,,,கூடிய கூட்டத்தாரை நோட்டமிட்டார் பெரியவர்
அத்துணை பேரும் அழுக்குகளாய்,ஆடைகிழி­ந்து,வறுமையின்
பிரதிநிதிகளாய்,மதங்க­ளின் அவதானிப்புகளாய், வறட்சியின் வரவுகளாய்,,,
சுற்றிப்பார்த்துவிட்­டு பேசத்தொடங்குகிறார் அந்தப் பெரியவர்,,, பேச
வந்திருக்கிறேன் உங்களோடு,,,பகிர்ந்து­ கொள்ள வந்திருக்கிறேன் பட்ட
அனுபவங்களை,,, வாழ்தல் வழி இதுவெனத் தெரியும் வந்தேன் உங்களோடு வளர்த்திட
அறிவை,,,எப்படி வசதி அதோ அந்த வேப்ப மரத்தடியில் அமர்ந்து கொண்டு
பேசலாமா? பாவம்பா இந்த கைத்தடி என்எடையை எவ்வளவு நேரம்தான் அதுவும்
தாங்கும் உடலுக்குச் சுமையாக மண்ணிற்கு பாரமாக,, பேசியபடியே நடக்கலானார்
பெரியவர்.தடுத்தான் ஒருவன் பெருசு அது ஆத்தா குடியிருக்குர கோயிலு அதோ
பார்! ஆத்தா அமர்ந்திருக்குறா!
ஆத்தாளுக்கு காட்டுகின்ற கரிசனம் ஆடாமல் நிற்கக்கூட முடியாத இந்த
கிழவனுக்கு இல்லையா தம்பி! பேசிமுடிப்பதற்குள் முதற்பேச்சு தொடங்கி வைத்த
முதியவர் முந்திக்கொண்டார்,,, பெருசு களப்பா இருக்கு ஆத்தா கோயில்லேயே
ஒக்காந்து பேசட்டும் ,,, ஏ! கருப்பு பெருசுக்கு குடிக்க மோர் கொண்டுவா!
ஒருவழியாக வேப்ப மரத்தடியில் பெரியவரோடு ஊரும் கூடியிருந்தது. பேசினார்
பகிர்ந்தார் பெரியவர் தன் அனுபவங்களை அத்துணையும் முற்போக்குச்
சிந்தனைகளாக,,,கேட்க கேட்க பெரும் ஆவலாய் இருந்தமையால் ஈர்க்கப்பட்ட ஊர்
மக்கள் அப்படியே வீழ்ந்தார்கள் பெரியவரின் பேச்சால்,,,கொஞ்சம் கொஞ்சமாக
மாற்றங்கள் அங்கே நிகழ்ந்த வண்ணமே இருந்திருந்தது அத்துணை
சுறுசுறுப்போடு,,, மூன்றாவது நாள் தொடக்கம் வழக்கம் போல மக்களிடத்தில்
தனது சிந்தனைகளை பகிர்ந்துக்கொண்டிருந்தார் பெரியவர் . அப்போது யாரும்
எதிர்பாரா நேரத்தில் தாயொருத்தி அழுதுப் புலம்பிக்கொண்டே தன்மகனை இழுத்து
வந்து அந்த பெரியவர் முன் நின்றார்,
என்ன? என்ன ஆயிற்று?
பெரியவர் கேள்விகளுக்கு அழுதபடியே தாய் தன் குமுறலை முன்வைத்தார்,,
ஐயா இவன் எம்மொவன் தெனமும் குடிச்சிட்டு வந்து தேவயில்லாம ஒடம்ப
கெடுத்துகினு அங்கங்க சண்ட வாங்கிகினு திரியுரான் , பெத்த கடனுக்கு
சுமக்கறேன், இவனுக்கு ஏதாவது புத்திமதி சொல்லி நல்லவழியில திருத்துங்க
சாமி ஒங்களுக்கு புண்ணியமா போவும்,,, தாய் புலம்பலிருந்து மகனின் நிலையை
புரிந்துகொண்ட பெரியவர் சற்றும் யோசிக்காமல் மூன்று நாட்கள் கழித்து
வந்து சந்திக்கும்படி திருப்பி அனுப்பியிருந்தார். கூடியிருந்தோர்க்கு
ஒன்றுமே விளங்கவில்லை பெரியவரிடமே கேட்டு விட்டனர் . ஏன் மூனு நாளு
கழிச்சு வந்து பார்க்க சொல்ரீங்க என்று,,, மூன்றாம் நாள் வரும் வரையில்
காத்திருங்கள் என்றார் பெரியவர். அது பெரியவருக்கு ஆறாம்நாள் தாய்க்கு
மூன்றாம் நாள், சரியான நேரத்தில் மகனை இழுத்துவந்த தாய் பெரியவர் முன்
நிறுத்தினார். சரியாக ஒருமணி நேர அலோசனை வழங்கியதன் பின்னால் குடிகார
மகன் "இனி தான் குடிக்கப்போவதில்லை என்றும் ,மது இருக்கும் திசையையே
மறந்து விடப் போவதாகவும் உறுதியளித்துவிட்டு பெரியவரிடம் விடைபெற்று
உழைக்கச் சென்று விட்டான்.
இதற்கு ஏன் மூன்று நாட்கள்? என்கிற ஊராரின் சந்தேகத்தை உடைக்கத்
தயாரானார் பெரியவர்.
இங்கே கூடியிருப்போர்களே நான் ஏன் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டேன் என்று
உங்களுக்கு எழுந்த கேள்விக்கான பதில் இதுதான்,, அதுவரையில் நானும்
மதுவுக்கு அடிமையானவன்தான்,மூன்­றாவது நாள் விட்டொழித்தேன் அந்த
குடிப்பழக்கத்தை,,, மற்றவர்க்கு அறிவுரைகள் வழங்கப்படும் போது நமக்கு
நாமே திருத்திக்கொள்ளுதல் முதல்பணியாக இருக்கிறது. ஆகவேதான் அந்த
மனிதனுக்கு அறிவுரை வழங்கும் முன்னர் முதலில் என்னை நானே திருத்திக்
கொள்கிறேன். இதுதான் முற்போக்கின் சிறந்த வழி. பெரியவர் பேச்சிலேயே பல
நீதிகள் அவிழ்க்கப்பட்டு விட்டது. ஊர் மக்கள் அவரை
மதிக்கத்தொடங்கினார்கள். மற்றவரையும் மதிக்க கற்றுக்கொண்டு விட்டார்கள்.
மதுக்கடைகள் இல்லாத ஊராக அந்த மக்கள் மாற்றியமைத்து பழைய வாழ்க்கையை
புரட்டிப் போட்டுவிட்டு புது வாழ்வியலுக்கு பயணப்பட்டு குடிமறந்து உண்மை
குடிமக்களாக வாழத் தொடங்கியிருந்தார்கள்­.

2 comments:

  1. மதுப் பழக்கம் நீங்கினால்
    மனைவி அணைப்பாள்
    இல்லையேல்
    மனைவி உதைத்து விரட்டுவாள்!

    ReplyDelete
  2. உண்மைதான் அண்ணா , வருகைக்கு நன்றி!

    ReplyDelete

வார்த்தைகளை துடைத்தெறிதல்

  நானும் நீயும் பேசுகையில்                    இடையில்  சிந்திய சில வார்த்தைகளை துடைத்து எறிந்து விடுகிறோம் ...  குழந்தையானது சிந்தாமல்  சிதற...